← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2675
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا المَسْعُودِيُّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ ابْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَاتُّبِعَ عَلَيْهَا فَلَهُ أَجْرُهُ وَمِثْلُ أُجُورِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَاتُّبِعَ عَلَيْهَا كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا» وَفِي البَابِ عَنْ حُذَيْفَةَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوُ هَذَا» وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنِ المُنْذِرِ بْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيْضًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் ஒரு நல்ல நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய நன்மையும் கிடைக்கும். அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற நன்மையும் கிடைக்கும். அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. ஒருவர் ஒரு தீய நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய பாவமும் உண்டு; அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற பாவமும் உண்டு. அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் பாவத்தில் எதுவும் குறைந்துவிடாது. இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஹுதைஃபா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களின் புதல்வர் முன்திர் பின் ஜரீர் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய மற்றொரு புதல்வர் உபைதுல்லாஹ் பின் ஜரீர் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.