حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الجُمَحِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو ظِلَالٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى الغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ»
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ” وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ: عَنْ أَبِي ظِلَالٍ؟ فَقَالَ: هُوَ مُقَارِبُ الحَدِيثِ، قَالَ مُحَمَّدٌ: وَاسْمُهُ هِلَالٌ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு அமர்ந்து சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும். திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெறும் அபூளிலால் என்பவர் பற்றி புகாரீ இமாமிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் (இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும்) முகாரிபுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் என்றும்; இவரின் பெயர் ஹிலால் என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)