العاديات
ஸூரா 100 — அல்ஆதியாத் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
11 வசனங்கள் · ஜுஸ் 30
1
وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
முஹம்மது ஜான்
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
IFT
மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூச்சிரைக்கும் சப்தத்தோடு (போர்க்களத்தில் எதிரிகளைத்தாக்க) அதிவேகமாக ஓடுகின்றவற்றின் (குதிரைகளின்) மீது சத்தியமாக!
2
فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
IFT
பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (செல்லும் வேகத்தில் அவற்றின் குளம்புகள் கற்களில் மோத) தீப்பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும் சத்தியமாக!
3
فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
IFT
மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, அதிகாலையில் வேகமாக (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக!
4
فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
IFT
அதனால் புழுதியினைக் கிளப்பி
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதிகாலையில் அவ்வாறு அதி வேகமாகச் செல்லும்போது) அதனால் புழுதியை கிளப்புகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
5
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ
முஹம்மது ஜான்
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
IFT
மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (எதிரிகளின்) படைகளுக்கு மத்தியில் செல்கின்றவற்றின் மீதும் சத்தியமாக!
6
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۟ۚ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
IFT
உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.
7
وَاِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌ ۟ۚ
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
IFT
அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக அவனே இதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்.
8
وَاِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌ ۟ؕ
முஹம்மது ஜான்
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
IFT
மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக (மனிதனாகிய) அவன், செல்வத்தை விரும்புவதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
9
اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِ ۟ۙ
முஹம்மது ஜான்
அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
IFT
மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் அறிந்துகொள்ள வேண்டாமா? மண்ணறைகளிலுள்ளவை (எழுப்பப்பட்டு) வெளியேற்றப்பட்டுவிடும்போது-
10
وَحُصِّلَ مَا فِی الصُّدُوْرِ ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
IFT
மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதயங்களிலுள்ளவையும் வெளியாக்கப்பட்டுவிடும்போது,
11
اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىِٕذٍ لَّخَبِیْرٌ ۟۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.
IFT
திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்களின் இரட்சகன், அவர்களைப்பற்றி அந்நாளில் நன்கு உணர்பவன் (ஆகவே, நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் வழங்குவான்).