يس
ஸூரா 36 — யாஸீன் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
83 வசனங்கள் · ஜுஸ் 22
1
یٰسٓ ۟ۚ
முஹம்மது ஜான்
யாஸீன்.
அப்துல் ஹமீது பாகவி
யா ஸீன்.
IFT
யாஸீன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
யாஸீன்.
2
وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ
முஹம்மது ஜான்
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!
IFT
ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீர்க்கமான (சட்டங்களையும் தெளிவான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள) இந்த குர் ஆனின் மீது சத்தியமாக,
3
اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நீர் (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
IFT
திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நீர் (நம்முடைய) தூதர்களில் உள்ளவராவீர்.
4
عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ؕ
முஹம்மது ஜான்
நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
அப்துல் ஹமீது பாகவி
(நீர்) நேரான வழியில் இருக்கிறீர்.
IFT
நேரிய வழியில் இருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நீர்) நேரான வழியின் மீதிருக்கின்றீர்.
5
تَنْزِیْلَ الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
முஹம்மது ஜான்
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.
IFT
(மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது யாவரையும்) மிகைத்தோன், மிகக் கிருபையுடையோனா(கிய அல்லாஹ்வினா)ல் இறக்கப்பட்டதாகும்.
6
لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ ۟
முஹம்மது ஜான்
எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
அப்துல் ஹமீது பாகவி
(உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
IFT
தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களின் மூதாதையர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாத ஒரு சமூகத்தார்க்கு, நீர் எச்சரிக்கை செய்வதற்காக (இவ்வேதம் இறக்கியருளப்பட்டது), அவர்கள் (அலட்சியமாக) மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
7
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰۤی اَكْثَرِهِمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இவர்களில் அநேகர் மீது (அவர்களுக்கு வேதனை உண்டு என்ற அல்லாஹ்வின்) வாக்கு உண்மையாகிவிட்டது, ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ளமாட்டர்கள்.
8
اِنَّا جَعَلْنَا فِیْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِیَ اِلَی الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன.
IFT
நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் விலங்குச் சங்கிலிகளை ஆக்கிவிட்டோம், அவை மோவாய்க் கட்டைகள் வரையில் இருக்கின்றன. ஆகவே, (குனிய முடியாதவாறு) அவர்கள் தலை உயர்த்தப்பட்டவர்கள்.
9
وَجَعَلْنَا مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَیْنٰهُمْ فَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது.
IFT
மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் ஆக்கி விட்டோம், பின்னர், அவர்களை மூடிவிட்டோம், ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க(ச்சக்திபெற) மாட்டார்கள்.
10
وَسَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமே! ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
11
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ ۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِیْمٍ ۟
முஹம்மது ஜான்
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக.
IFT
யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், (குர் ஆனாகிய) நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவில் அர்ரஹ்மானை அஞ்சுகின்றாரே அவருக்குத்தான். ஆகவே, அ(த்தகைய)வருக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமாக கூலியைக் கொண்டும் நீர் நன்மாரயாம் கூறுவீராக!
12
اِنَّا نَحْنُ نُحْیِ الْمَوْتٰی وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ ؔؕ وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ فِیْۤ اِمَامٍ مُّبِیْنٍ ۟۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.
IFT
திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாமே, மரணித்தோரை (மறுமையில்) உயிர்ப்பிக்கிறோம், அவர்கள் முற்படுத்தியவற்றையும், (அவர்கள் மரணித்த பின்னும் நன்மையைச் சேர்த்து வைக்கின்ற) அவர்களின் (நற்செயல்களான) அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகிறோம், ஒவ்வொரு பொருளை(ப்பற்றி)யும், (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான ஏட்டில் அதைக்கணக்கெடுத்து (பதிந்து) வைத்திருக்கின்றோம்.
13
وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْیَةِ ۘ اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக.
IFT
மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (நபியே!) ஓர் ஊர்வாசிகளை _ அவ்வூராரிடம் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்கள் வந்த(போது நடந்த)தை _ உதாரணமாக அவர்களுக்குக் கூறுவீராக!
14
اِذْ اَرْسَلْنَاۤ اِلَیْهِمُ اثْنَیْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْۤا اِنَّاۤ اِلَیْكُمْ مُّرْسَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.
IFT
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவரையும்) நாம் வலுப்படுத்தினோம், ஆகவே, இவர்கள் “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட (அல்லாஹ்வின் தூது)வர்களாவோம்” என்று கூறினார்கள்.
15
قَالُوْا مَاۤ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَیْءٍ ۙ اِنْ اَنْتُمْ اِلَّا تَكْذِبُوْنَ ۟
முஹம்மது ஜான்
(அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
IFT
“நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை, அர்ரஹ்மான் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கிவைக்கவுமில்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள்.
16
قَالُوْا رَبُّنَا یَعْلَمُ اِنَّاۤ اِلَیْكُمْ لَمُرْسَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
(இதற்கு அவர்கள்:) “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்” என்று கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்,
IFT
தூதர்கள் கூறினார்கள்: “திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட (தூது)வர்கள்தாம் என்பதை எங்கள் இரட்சகனே நன்கறிவான்” என்று கூறினர்.
17
وَمَا عَلَیْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
முஹம்மது ஜான்
“இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
“எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்.)
IFT
மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், எங்கள் மீது (அல்லாஹ்வுடைய தூதைப்) பகிரங்கமாக எத்திவைப்பதைத் தவிர (வேறு கடமை) இல்லை” (என்றும் கூறினார்கள்.)
18
قَالُوْۤا اِنَّا تَطَیَّرْنَا بِكُمْ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَیَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
(அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவ்வூர் மக்கள், “நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்களிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்!” எனக் கூறலானார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நிச்சயமாக, நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம், நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில், உங்களைத் திட்டமாக நாம் கல்லால் எறிவோம், அன்றியும், எம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்கள்.
19
قَالُوْا طَآىِٕرُكُمْ مَّعَكُمْ ؕ اَىِٕنْ ذُكِّرْتُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
முஹம்மது ஜான்
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்: “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.
IFT
(அதற்கு) அத்தூதர்கள், “உங்களுடைய அபசகுனம் உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்!” எனப் பதிலளித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு நம் தூதர்கள்,) “உங்களுடைய துர்ச்சகுனம் உங்களுடன் தான் இருக்கின்றது, (எங்கள் மூலம் அல்லாஹ்வைப் பற்றி) நீங்கள் (நற்போதனை செய்யப்பட்டு) நினைவூட்டப்பட்டீர்களானாலுமா? (துர்ச்சகுனமென்று கூறுவீர்கள்?) அவ்வாறல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தார்” என்று கூறினார்கள்.
20
وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِیْنَةِ رَجُلٌ یَّسْعٰی قَالَ یٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
IFT
(இதற்கிடையில்) நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து கூறினார்: “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அப்பட்டணத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டணவாசிகளிடம்) “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
21
اتَّبِعُوْا مَنْ لَّا یَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
முஹம்மது ஜான்
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி அடைந்தவர்கள்.
IFT
எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும், எவர்கள் நேர்வழியில் இருக்கிறார்களோ, அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காதவர்(களான இத்தூதர்)களை நீங்கள் பின்பற்றுங்கள், மேலும், (இவர்கள் நேர்வழி போதனை செய்பவர்கள் மட்டுமல்ல.) இவர்கள் (அல்லாஹ்வினால்) நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் கூறினார்).
22
وَمَا لِیَ لَاۤ اَعْبُدُ الَّذِیْ فَطَرَنِیْ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
முஹம்மது ஜான்
“அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.''
IFT
எவன் என்னைப் படைத்தானோ மேலும், எவன் பக்கம் நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்களோ அத்தகைய ஒருவனுக்கு நான் ஏன் அடிபணியக் கூடாது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னைப் படைத்தானே அத்தகையவனை நான் வணங்காதிருக்க எனகென்ன (இருக்கிறது) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.”
23
ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ یُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا وَّلَا یُنْقِذُوْنِ ۟ۚ
முஹம்மது ஜான்
“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது.
IFT
அவனை விடுத்து மற்றவர்களை அடி பணிவதற்குரியவர்களாய் நான் எடுத்துக் கொள்வேனா? உண்மையில், கருணைமிக்க இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்த நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. அவர்களால் என்னை விடுவிக்கவும் முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவனையன்றி வேறு வணங்கப்படுபவர்களை (என் வணக்கதிற்குரியவர்களாக) நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் யாதொரு இடரை எனக்கு நாடினால் இவர்களின் பரிந்துரை எதற்கும் எனக்குப் பயனளிக்காது, (அதிலிருந்து) என்னை இவர்கள் விடுவிக்கவும் மாட்டார்கள்.”
24
اِنِّیْۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
முஹம்மது ஜான்
“(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்.
IFT
நான் அவ்வாறு செய்தால், வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிடுவேன் என்பதில் ஐயமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, (அல்லாஹ்வைத் தவிர்த்து இவர்களை வணங்கினால்,) அப்போது நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பேன்.
25
اِنِّیْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِ ۟ؕ
முஹம்மது ஜான்
“உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்).
IFT
நானோ உங்கள் அதிபதியின் மீதே உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நீங்களும் நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான், உங்கள் இரட்சகனையே விசுவாசித்திருக்கிறேன், ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்” (என்று கூறினார்).
26
قِیْلَ ادْخُلِ الْجَنَّةَ ؕ قَالَ یٰلَیْتَ قَوْمِیْ یَعْلَمُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.
IFT
(இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்று விட்டார்கள். பிறகு) அவரிடம் “சுவனம் புகுவீராக!” என்று கூறப்பட்டது. அவர் கூறினார்: “ஆஹா! என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும், அச்சமூகத்தார் அவரைக் கொலை செய்துவிட்டனர், ஆகவே,) “நீர் சுவனபதியில் நுழைவீராக!” என (அவருக்கு)க் கூறப்பட்டது, (சுவனபதி நுழைந்த) அவர், “என்னுடைய சமூகத்தார் (எனக்குக் கிடைத்த இப்பாக்கியத்தை) அறிந்துகொள்ள வேண்டுமே” என்று கூறினார்.
27
بِمَا غَفَرَ لِیْ رَبِّیْ وَجَعَلَنِیْ مِنَ الْمُكْرَمِیْنَ ۟
முஹம்மது ஜான்
“என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை).
அப்துல் ஹமீது பாகவி
(சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதனை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகன் என்னை மன்னித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டான்” என்பதை (அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே என்று கூறினார்).
28
وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی قَوْمِهٖ مِنْ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُنَّا مُنْزِلِیْنَ ۟
முஹம்மது ஜான்
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.
IFT
அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர், அவருடைய சமூகத்தவர் மீது வானத்திலிருந்து (அவர்களை அழிக்க) யாதொரு படையையும் நாம் இறக்கிவைக்கவில்லை, (அவ்வாறு) இறக்கிவைப்பவர்களாகவும் நாம் இல்லை.
29
اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்.
IFT
ஒரே ஓர் உரத்த ஓசைதான் (முழங்கியது). அவர்களெல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகிவிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களின் அழிவு) ஒரே ஒரு பயங்கர சப்தத்தைத் தவிர வேறு இல்லை, அப்பொழுது அவர்கள் நூர்ந்து (சாம்பலாகி)விட்டவர்கள் ஆயினர்.
30
یٰحَسْرَةً عَلَی الْعِبَادِ ؔۚ مَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
முஹம்மது ஜான்
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை.
IFT
அந்தோ! இம்மக்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. அவர்களிடம் எந்த இறைத்தூதர் வந்தபோதும், அத்தூதரை அவர்கள் ஏளனம் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அடியார்கள் மீதுள்ள கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதரும் _அவரை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டவர்களாக இருந்தேயல்லாது வருவதில்லை.
31
اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَیْهِمْ لَا یَرْجِعُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
IFT
இவர்களுக்கு முன்பு (வாழ்ந்த) எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். (பிறகு) அவர்கள் ஒருபோதும் இவர்களிடம் திரும்பிவர மாட்டார்கள் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலை முறையினரை நாம் அழித்திருக்கிறோம், நிச்சயமாக (அழிந்துவிட்ட) அவர்கள் இவர்கள் பால் திரும்பமாட்டார்கள்” என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
32
وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
IFT
மேலும், திண்ணமாக இவர்கள் அனைவருமே (ஒருநாள்) நம்முன் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று திரட்டப்பட்டு நம்மிடம் முன்னிலைப்படுத்தப்படுபவர்களே தவிர வேறில்லை.
33
وَاٰیَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَیْتَةُ ۖۚ اَحْیَیْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ یَاْكُلُوْنَ ۟
முஹம்மது ஜான்
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.
IFT
உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதற்கு உயிர்கொடுத்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம்; அதிலிருந்து அவர்கள் புசிக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறந்த (பொட்டலான) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும், அதனை நாம் (மழையைக் கொண்டு) உயிர்ப்பிக்கிறோம், இன்னும், அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம், அப்போது அதிலிருந்து(தான்) அவர்கள் உண்ணுகின்றார்கள்.
34
وَجَعَلْنَا فِیْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِیْهَا مِنَ الْعُیُوْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்.
IFT
மேலும், நாம் இதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினோம்; மேலும், இதில் நீரூற்றுகளைப் பீரிட்டெழச் செய்தோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அதில் நாம் பேரீச்சை, திராட்சைகளிலிருந்து தோட்டங்களை அமைத்தோம், அதில் நீரூற்றுகளைப் பீறிட்டு ஓடவும் செய்கின்றோம்.
35
لِیَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَتْهُ اَیْدِیْهِمْ ؕ اَفَلَا یَشْكُرُوْنَ ۟
முஹம்மது ஜான்
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
IFT
இதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக! இவையனைத்தும் அவர்களுடைய கைகள் உருவாக்கியவை அல்லவே! பிறகு ஏன், அவர்கள் நன்றி செலுத்துவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் கனி(வர்க்கங்)களிலிருந்து அவர்கள் உண்ணுவதற்காக (இவைகளைப் படைத்தோம்), அவர்களுடைய கைகள் அதைச் செய்யவில்லை, ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36
سُبْحٰنَ الَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا یَعْلَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.
IFT
மிகவும் தூய்மையானவன்; எல்லா வகையான ஜோடிகளையும் படைத்திருப்பவன்! அவை பூமி முளைக்கச் செய்யக்கூடியவையானாலும் சரி; அவர்களுடைய இனத்திலிருந்தானாலும் சரி; அவர்கள் அறிந்திராத மற்ற பொருள்களிலிருந்தானாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமி முளைப்பித்தவற்றிலிருந்தும், (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை_அவை ஒவ்வொன்றையும் படைத்தானே அவன் மிகத் தூய்மையானவன்.
37
وَاٰیَةٌ لَّهُمُ الَّیْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்.
IFT
மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்று ஆகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றிவிடும்போது அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவும் அவர்களுக்கோர் அத்தாட்சியாகும், அதிலிருந்து பகலை நாம் கழற்றுகின்றோம், அப்போது இவர்கள் இருளில் ஆகிவிடுகிறார்கள்.
38
وَالشَّمْسُ تَجْرِیْ لِمُسْتَقَرٍّ لَّهَا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ؕ
முஹம்மது ஜான்
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
அப்துல் ஹமீது பாகவி
தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்.
IFT
மேலும், சூரியனும் (பிறிதொரு சான்றாகும்). அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது, இது (யாவரையும்) மிகைத்தவன், நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்.
39
وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰی عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِیْمِ ۟
முஹம்மது ஜான்
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
IFT
மேலும், சந்திரன் (இன்னொரு சான்றாகும்). அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகி விடுகிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், சந்திரனை_(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சங்குலையின் குச்சி போல் அது மீண்டுவிடும் வரையில், அதற்கு நாம் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
40
لَا الشَّمْسُ یَنْۢبَغِیْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّیْلُ سَابِقُ النَّهَارِ ؕ وَكُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
முஹம்மது ஜான்
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
IFT
சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியன்_அதற்குச் சந்திரனை (அணுகி)ப்பிடிக்கமுடியாது, இரவு, பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்துக்குள் நீந்திச் செல்கின்றன.
41
وَاٰیَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّیَّتَهُمْ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
கப்பல் நிறைய அவர்களுடைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
IFT
மேலும், நிரம்பிய பெரிய தோணியில் நாம் அவர்களின் வழித்தோன்றல்களை ஏற்றியதும் அவர்களுக்கு ஒரு சான்றாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நாம் அவர்களுடைய சந்ததியினரை, (சகலவற்றாலும்) நிரப்பப்பட்ட கப்பலில் ஏற்றி(ச் சுமந்து காப்பாற்றி)னோம் என்பதும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
42
وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا یَرْكَبُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற)வற்றையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கிறோம்.
IFT
பிறகு, அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய அதைப் போன்றவற்றையும் அவர்களுக்காக நாம் படைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதைப் போன்று அவர்கள் ஏறிச் செல்கின்றவைகளையும் நாம் அவர்களுக்குப் படைத்திருகின்றோம்.
43
وَاِنْ نَّشَاْ نُغْرِقْهُمْ فَلَا صَرِیْخَ لَهُمْ وَلَا هُمْ یُنْقَذُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
IFT
மேலும், நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்துவிடுவோம். அப்போது அவர்களுடைய முறையீடுகளைக் கேட்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் (எந்த வகையிலும்) மீட்கப்படவும் மாட்டார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடினால், அவர்களை(க் கடலில்) மூழ்கடித்துவிடுவோம், அதுசமயம் (அபயக் குரலிடும்) அவர்களைக் காப்பற்றுவோர் ஒருவருமிரார், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
44
اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰی حِیْنٍ ۟
முஹம்மது ஜான்
நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
அப்துல் ஹமீது பாகவி
எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்).
IFT
ஆயினும் நம்முடைய கருணையே அவர்களைக் காப்பாற்றுகிறது; மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்றாலும் நம்மிடமிருந்துள்ள அருளால் (கடலிலும் கரையிலும் நாம் நடத்திச் செல்கிறோம்) இன்னும் ஒரு காலம் வரை அவர்கள் சுகமனுபவிப்பதற்காக (விட்டும் வைக்கிறோம்).
45
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَیْنَ اَیْدِیْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
“இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -
அப்துல் ஹமீது பாகவி
“உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
IFT
மேலும், “உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவற்றின் விளைவுகளிலிருந்தும், உங்களைக் கடந்து சென்று விட்டவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள் கேட்டும் கேளாதவர்கள் போல் இருந்து விடுகின்றார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும், நீங்கள் கிருபைசெய்யப்படுவதற்காக, உங்களுக்கு முன் இருப்பதையும், உங்களுக்குப் பின் இருப்பதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
46
وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்த போதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.
IFT
மேலும், அவர்களிடம் தம் இறைவனின் சான்றுகளிலிருந்து எந்த ஒரு சான்று வந்தாலும் அவர்கள் அதனை ஏறிட்டும் பார்ப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுடைய இரட்சகனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சியும் அதனை அவர்கள் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருந்தே தவிர அவர்களிடம் வருவதில்லை.
47
وَاِذَا قِیْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗۤ ۖۗ اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
முஹம்மது ஜான்
“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
IFT
மேலும், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேறுகளிலிருந்து (இறைவழியிலும் பிறருக்கு) செலவழியுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் இறைநிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கிக் கூறுகின்றார்கள்: “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு அவனே உணவளித்திருப்பானே! திண்ணமாக, நீங்கள் முற்றிலும் வழிபிறழ்ந்து விட்டிருக்கிறீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றிலிருந்து செலவு செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறபட்டால், அல்லாஹ் நாடியிருந்தால் எவர்களுக்கு அவன் உணவளித்துவிடுவானோ, அவர்களுக்கு நாங்கள் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலன்றி வேறில்லை” என்று விசுவாசிகளிடம் நிராகரிப்போர் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
48
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
IFT
மேலும் அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மை கூறுவோராயின், (மறுமைநாளைப் பற்றிய உங்களின்) இந்த அச்சுறுத்தல் எப்போது நிறைவேறப் போகிறது? (என்பதை அறிவியுங்களேன்)”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் (நீங்கள் கூறும் தண்டனை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்)” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
49
مَا یَنْظُرُوْنَ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً تَاْخُذُهُمْ وَهُمْ یَخِصِّمُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
IFT
அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் (உலக விவகாரங்கள் குறித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கும்போதே (திடீரென்று) அது அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரே ஒரு (பெரும்) சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிபார்(த்திரு)க்கவில்லை! (இதனை பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில் அது அவர்களைப் பிடித்துகொள்ளும்.
50
فَلَا یَسْتَطِیْعُوْنَ تَوْصِیَةً وَّلَاۤ اِلٰۤی اَهْلِهِمْ یَرْجِعُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)
IFT
அப்போது அவர்களால் மரண சாஸனம் அளிக்கவோ, தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவோ முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவர்கள் (தங்களுக்குரிய சாதக, பாதகம் பற்றிய) மரணோபதேசம் கூற சக்தியும் பெறமாட்டார்கள், தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள் (அதற்குள் அழிந்துவிடுவார்கள்).
51
وَنُفِخَ فِی الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰی رَبِّهِمْ یَنْسِلُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமுறை) ‘ஸூர்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்.
IFT
பிறகு ஒரு சங்கு ஊதப்படும். அப்பொழுது உடனே அவர்கள், (தத்தம்) அடக்கத்தலங்களிலிருந்து தம் இறைவனை நோக்கி விரைந்து வருவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஸுர்எனும்) குழல் ஊதப்படும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து (வெளியேறி) தங்கள் இரட்சகன்பால் விரைந்து நடப்பார்கள்.
52
قَالُوْا یٰوَیْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَا ؔٚۘ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
“எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).
IFT
அவர்கள் (திகிலடைந்தவாறு) கேட்பார்கள்: “அந்தோ, எங்கள் பரிதாபமே! நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” (அப்போது), “கருணைமிக்க இறைவன் வாக்களித்திருந்தது இதுவேயாகும்! இறைத்தூதர்களின் வாக்கும் உண்மையாகிவிட்டது!” (என்று பதில் சொல்லப்படும்)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாளின் அமளியைக் கண்டு மதியிழந்து)” எங்களுடைய நாசமே! எங்களை, எங்கள் (சமாதிகளாகிய) தூங்குமிடங்களிலிருந்து எழுப்பியவர் யார்?” என்று கேட்பார்கள், (அதற்கு மலக்குகள் அவர்களிடம்) “அர்ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், தூதர்கள் (உங்களுக்கு) உண்மை (என எடுத்துக்) கூறியதும் இது தான் “ (என்று கூறுவார்கள்).
53
اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்.
IFT
அது ஒரே ஓர் உரத்த ஓசையாகத்தான் இருக்கும். அக்கணம் அவர்கள் அனைவருமே நம்முன் கொண்டு வரப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது ஒரே ஒரு (பெரும்) சப்தத்தைத் தவிர_(வேறொன்றுமாக) இருக்காது, அப்பொழுது அவர்கள் அனைவரும் நம்மிடம் (ஒன்றுதிரட்டப்பட்டு கேள்வி கணக்கிற்காக) முன்னிலைப்படுத்தப்பட்டு விடுபவர்களாவர்.
54
فَالْیَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.
IFT
இன்று எவர் மீதும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எத்தகைய செயல்கள் புரிந்து கொண்டு இருந்தீர்களோ அவற்றிற்குத் தகுந்தாற்போல்தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அந்நாளில், எந்த ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது, இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) நீங்கள் கூலிகொடுக்கப்படமாட்டீர்கள்.
55
اِنَّ اَصْحٰبَ الْجَنَّةِ الْیَوْمَ فِیْ شُغُلٍ فٰكِهُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் நிச்சயமாக சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.
IFT
திண்ணமாக, இன்று சுவனவாசிகள் இன்பநுகர்ச்சியில் திளைத்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக சுவனவாசிகள் அந்நாளில் தங்கள் காரியத்தில் மகிழ்ச்சியுடையோராக இருப்பர்.
56
هُمْ وَاَزْوَاجُهُمْ فِیْ ظِلٰلٍ عَلَی الْاَرَآىِٕكِ مُتَّكِـُٔوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்.
IFT
அவர்களும், அவர்களின் மனைவியரும் அடர்ந்த நிழலில் சாய்வாசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் (உள்ள) கட்டில்களின் மேல் (வெகு உல்லாசமாக) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
57
لَهُمْ فِیْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا یَدَّعُوْنَ ۟ۚۖ
முஹம்மது ஜான்
அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.
IFT
அவர்களுக்காக அங்கே உண்ணவும் பருகவும் வித விதமான சுவைமிக்க பொருள்கள் இருக்கும். மேலும், அவர்கள் விரும்பிக்கேட்கும் அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்களுக்கு (விதவிதமான) கனிவர்க்கங்களுண்டு, இன்னும், அவர்கள் வேண்டுவன(யாவும்) அவர்களுக்குண்டு.
58
سَلٰمٌ ۫ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِیْمٍ ۟
முஹம்மது ஜான்
“ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்.
IFT
கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை (ஸலாம்) கூறப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களை நோக்கி) நிகரற்ற அன்புடைய இரட்சகனின் சொல்லாக_ “சாந்தி உண்டாகுக!” (என்று கூறுதல்) உண்டு.
59
وَامْتَازُوا الْیَوْمَ اَیُّهَا الْمُجْرِمُوْنَ ۟
முஹம்மது ஜான்
அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(மற்ற பாவிகளை நோக்கி) “குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
மேலும், “குற்றம் புரிந்தவர்களே! இன்று நீங்கள் தனியே பிரிந்து நில்லுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “குற்றவாளிகளே! இன்றையத்தினம் நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து விடுங்கள்” (என்று கூறப்படும்).
60
اَلَمْ اَعْهَدْ اِلَیْكُمْ یٰبَنِیْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّیْطٰنَ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
முஹம்மது ஜான்
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
IFT
ஆதத்தின் மக்களே, நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவன் என்றும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதி” என்று நான் உங்களிடம் உறுதி மொழி வாங்கவில்லையா?
61
وَّاَنِ اعْبُدُوْنِیْ ؔؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
முஹம்மது ஜான்
“என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், நீங்கள் என்னையே வணங்கவேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?)
IFT
எனக்கே அடிபணியுங்கள்; இதுவே நேரான வழி என்றும் நான் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழியாகும் (என்றும் நான் உங்களிடம் உறுதி மொழி வாங்கவில்லையா?)
62
وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِیْرًا ؕ اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ ۟
முஹம்மது ஜான்
“அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
IFT
(அவ்வாறிருந்தும்) அவன், உங்களில் பெரும்பாலான மக்களைத் திண்ணமாக வழிபிறழச் செய்துவிட்டான். நீங்கள் அறிவு பெற்றவர்களாய் இருக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்தும்விட்டான், இதனை நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருக்கவில்லையா?
63
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
முஹம்மது ஜான்
“இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.
IFT
எதனைக் குறித்து நீங்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தீர்களோ அந்த நரகம் இதுவேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதுதான் நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே அந்த நரகம்.
64
اِصْلَوْهَا الْیَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
முஹம்மது ஜான்
“நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்).
IFT
நீங்கள் (உலகில் சத்தியத்தை) நிராகரித்து வந்ததன் விளைவாக இன்று அதன் எரிபொருளாகுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(இதனை) நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்ததன் காரணமாக இன்றையத்தினம் இதில் நீங்கள் நுழைந்துவிடுங்கள்” (என்று கூறப்படும்).
65
اَلْیَوْمَ نَخْتِمُ عَلٰۤی اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَیْدِیْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
முஹம்மது ஜான்
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
அப்துல் ஹமீது பாகவி
அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
IFT
இன்று, அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்றையத் தினம் நாம் அவர்களுடைய வாய்களின் மீது முத்திரையிட்டுவிடுவோம், அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவகளைப்பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
66
وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلٰۤی اَعْیُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰی یُبْصِرُوْنَ ۟
முஹம்மது ஜான்
நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?
IFT
மேலும், நாம் நாடினால் அவர்களுடைய கண்களை அவித்து விடுவோம். பிறகு, அவர்கள் பாதையை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால், எவ்வாறு அவர்களுக்குப் (பாதை) புலப்படும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடியிருந்தால் அவர்களுடைய கண்களைப் போக்கி (குருடாக்கி)யிருப்போம், பின்னர் (தப்பித்துகொள்ளும்) வழியின்பால் (அதைக்கடக்க) முந்தியிருப்பார்கள், அப்போது (அவர்கள் உண்மைவழியை) எவ்வாறு பார்ப்பார்கள்?
67
وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰی مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِیًّا وَّلَا یَرْجِعُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.
IFT
மேலும், நாம் நாடியிருந்தால் முன்னோக்கிச் செல்லவும், பின்னோக்கித் திரும்பவும் அவர்களால் முடியாதவாறு தம் இருப்பிடத்திலேயே அவர்களை உருமாற்றி விட்டிருப்போம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நாம் நாடியிருந்தால், அவர்கள் இருந்த இடத்திலேயே அவர்கள் உருவத்தை மாற்றி (கல்லாகவோ, மற்ற ஜடப் பொருளாகவோ ஆக்கி)யிருப்போம். அது சமயம், அவர்கள் முன் செல்லவும் சக்திபெறமாட்டார்கள், பின் திரும்பவும் மாட்டார்கள்.
68
وَمَنْ نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِی الْخَلْقِ ؕ اَفَلَا یَعْقِلُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
மேலும், நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம். (இவை அனைத்தையும் பார்த்து) அவர்களுக்கு அறிவு வர வேண்டாமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவரை நாம் (வயோதிகராக்கி) வயதை நீட்டிவிடுகிறோமோ அவரை, படைப்பில் (வாலிபத்திற்குப்பிறகு முதுமையும், பலத்திற்குப்பிறகு பலவீனத்தையும் கொடுத்து), தலைகீழாக மாற்றிவிடுகின்றோம் (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்களா?
69
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا یَنْۢبَغِیْ لَهٗ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
முஹம்மது ஜான்
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை.
IFT
மேலும், (நபியாகிய) இவருக்கு நாம் கவிதை கற்றுக்கொடுக்கவில்லை; அது (கவிதை புனைதல்) அவருக்கு ஏற்றதுமன்று. திண்ணமாக இது ஒரு நல்லுரையாகவும், தெளிவாக ஓதப்படுகின்ற வேதமாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதையை (இயற்ற)க் கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமானதுமல்ல, இது நல்லுபதேசமும் தெளிவான குர் ஆனுமே தவிர (வேறு) இல்லை.
70
لِّیُنْذِرَ مَنْ كَانَ حَیًّا وَّیَحِقَّ الْقَوْلُ عَلَی الْكٰفِرِیْنَ ۟
முஹம்மது ஜான்
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
அப்துல் ஹமீது பாகவி
உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்).
IFT
இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(க்குர் ஆனான)து, உயிரோடு (_உண்மையை ஏற்று பொய்யை மறுக்கும் உள்ளத்துடன்) இருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நிராகரிப்போர் மீது (தண்டனையைப் பற்றிய) வாக்கை உறுதிப்படுத்துவதற்காகவும் (இறக்கப்பட்டது).
71
اَوَلَمْ یَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَیْدِیْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.
IFT
அவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? திண்ணமாக, நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது அவர்கள் அவற்றிற்கு உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக நாம் அவர்களுக்காக (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் காணவில்லையா? பின்னர், அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
72
وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا یَاْكُلُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன.
IFT
மேலும் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில், சிலவற்றின்மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். மேலும், சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவைகளை, (இலகுவான முறையில்) அவர்களுக்குக் கீழ்படியும்படியும் நாம் செய்தோம், அவைகளில் அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் இருக்கின்றன, அவர்கள் அவற்றிலிருந்து உண்ணவும் செய்கிறார்கள்.
73
وَلَهُمْ فِیْهَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ اَفَلَا یَشْكُرُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
IFT
மேலும், அவற்றில் அவர்களுக்குப் பலவிதமான பயன்களும் பானங்களும் இருக்கின்றன. (பிறகும்) அவர்கள் நன்றி செலுத்துவோராய் இருக்க வேண்டாமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அநேகபயன்களும், பானங்களும் அவர்களுக்கு அவைகளில் இருக்கின்றன, எனவே, அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
74
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!
IFT
(இவ்வாறெல்லாம் இருந்தும்) அல்லாஹ்வை விடுத்து பிற கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், தாம் உதவி செய்யப்படலாமென்று ஆசை கொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வையன்றி (அவற்றால்) தங்களுக்கு உதவிசெய்யப்படக்கூடும் என்பதற்காக, அவர்கள் (வணக்கத்திற்குரிய வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
75
لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَهُمْ ۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
IFT
அவற்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது! (இதற்கு நேர்மாறாக) அம்மக்கள், அவற்றிற்காக தயார் நிலையிலிருக்கும் சேனையாக விளங்குகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) அவர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் பெற மாட்டார்கள், (ஆயினும் மறுமையில்) அவர்கள் இவர்களுக்கு (எதிராகச் சாட்சிகூற) முன்னிலைப்படுத்தப்படும் படையினராவர்.
76
فَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّا نَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.
IFT
(இட்டுக்கட்டிப் பேசும்) அவர்களின் பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவை அனைத்தையும் திண்ணமாக நாம் அறிகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உமக்கு விரோதமாகக் கூறப்படும்) அவர்களுடைய கூற்று உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நாம் நன்கறிவோம்.
77
اَوَلَمْ یَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟
முஹம்மது ஜான்
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்.
IFT
திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன்_அவனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நிச்சயமாக நாம் படைத்தோம் என்பதை_அவன் பார்க்கவில்லையா? பின்னர் திடீரென அவன், பகிரங்கமாகத் தர்க்கிக்கக் கூடியவனாக இருக்கிறான்.
78
وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِیَ خَلْقَهٗ ؕ قَالَ مَنْ یُّحْیِ الْعِظَامَ وَهِیَ رَمِیْمٌ ۟
முஹம்மது ஜான்
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்.
IFT
மேலும், அவன் நமக்கு உவமையைப் பொருத்துகின்றான். ஆனால் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிடுகின்றான். மக்கிப் போய்விட்ட நிலையிலுள்ள இந்த எலும்புகளை உயிர்ப்பிப்பவர் யார்? என்று அவன் கேட்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் தன்னுடைய படைப்பை (தான் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதை) மறந்துவிட்டு, ஓர் உதாரணத்தையும் நமக்காக அவன் கூறுகிறான், “எலும்புகளை, அவை மக்கிப்போன நிலையில் உயிரூட்டுபவன் யார்?” என்று அவன் கேட்கிறான்.
79
قُلْ یُحْیِیْهَا الَّذِیْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِیْمُ ۟ۙ
முஹம்மது ஜான்
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.
IFT
அவனிடம் கூறுங்கள்: “எவன் முதலில் அவற்றைப் படைத்தானோ அவனே அவற்றை உயிர்ப்பிப்பான். மேலும், அவன் படைப்பு நுட்பம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அதற்கு) நீர் கூறுவீராக: “முதன்முறையில் அதனைப்படைத்தானே அத்தகையவனே அதனை உயிர்ப்பிப்பான், அவன் ஒவ்வொரு படைப்பைப்பற்றியும் நன்கறிகிறவன்.”
80
لَّذِیْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ۟
முஹம்மது ஜான்
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்.
IFT
அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பைப் படைத்தான். இப்போது நீங்கள் அதன் மூலம் (தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான், அப்போது அதிலிருந்து நீங்கள் (நெருப்பை) மூட்டுகிறீர்கள்.
81
اَوَلَیْسَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ ؔؕ بَلٰی ۗ وَهُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
முஹம்மது ஜான்
வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் நன்கறிந்தவனும் ஆவான்.
IFT
வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவா? ஏன் இல்லை! நன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகையவன், அவர்களைப் போன்றதைப் படைக்கச் சக்திபெற்றவனாக இல்லையா? ஏன் இல்லை? (அவனே ஆற்றலுடையவன்.) நிச்சயமாக, அவனே மிகப் பெரும் படைப்பாளன், நன்கறிகிறவன்.
82
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـًٔا اَنْ یَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
முஹம்மது ஜான்
எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆகுக!) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது.
IFT
அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ‘ஆகுக!’ என்று அதற்கு ஆணை இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்” ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே அது ஆகிவிடும்.
83
فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
தூய்மையானவன், ஒவ்வொரு பொருளின் முழு அதிகாரமும் எவனுடைய கையில் உள்ளதோ அவன்! மேலும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, சகலவற்றின் அதிகாரம் (ஆட்சி) எவனுடைய கைவசம் இருக்கின்றதோ அத்தகையவனே மிகப் பரிசுத்தமானவன், மேலும் அவன்பாலே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.