النجم
ஸூரா 53 — அந்நஜ்ம் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
62 வசனங்கள் · ஜுஸ் 27
1
وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
முஹம்மது ஜான்
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
IFT
தாரகைகளின்மீது ஆணையாக, அவை மறையும் போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது விழுந்து (மறைந்து) விடும் சமயத்தில்_
2
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ
முஹம்மது ஜான்
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.
IFT
உங்களின் தோழர் வழிதவறிப் போகவுமில்லை; நெறி பிறழ்ந்து செல்லவுமில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய தூதராகிய) உங்களின் தோழர் வழி தவறிவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
3
وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.
IFT
மேலும், அவர்தம் மன இச்சையின்படி பேசுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் மன இச்சையின் படி (எதையும்) பேசுவதுமில்லை.
4
اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.
IFT
இது (அவர்மீது) இறக்கியருளப்பட்ட வஹியே* ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது அறிவிக்கப்படும் (வஹீயாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை.
5
عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ
முஹம்மது ஜான்
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
IFT
மாபெரும் நுண்ணறிவாளரும் அதிக வலிமை வாய்ந்தவருமான ஒருவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஜிப்ரில் என்னும்) மிகக்கடின பலமுடையவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
6
ذُوْ مِرَّةٍ ؕ فَاسْتَوٰی ۟ۙ
முஹம்மது ஜான்
(அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார்.
IFT
அவர் எதிரே வந்து நின்றார் ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் அழகான தோற்றமுடையவர், பின்னர் (தன் இயற்கை உருவத்தில் நமது நபியின் முன் மிஃராஜ் பயணத்தின்போது) உயர்ந்து சரியாக நின்றார்.
7
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
அப்துல் ஹமீது பாகவி
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்.
IFT
உயர்ந்த வானத்தின் கீழ் விளிம்பிலிருந்தபோது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது (ஜிப்ரீலாகிய) அவர் மிக உயர்ந்த (கீழ் வானத்தின்) கடைக்கோடியிலிருக்க,
8
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் நெருங்கினார், (அவர் முன்) இறங்கினார்.
IFT
பிறகு, இன்னும் நெருங்கி வந்து அந்தரத்தில் நின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் பின்னர் அவர் (நம் தூதர் பால்) நெருங்கி, அப்பால் அருகே வந்தார்.
9
فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ
முஹம்மது ஜான்
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(சேர்ந்த) இரு வில்களைப்போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார்.
IFT
எந்த அளவுக்கெனில், இரண்டு வில்லுக்குச் சமமான அல்லது அதைவிடக் குறைவான இடைவெளியே இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்நெருக்கத்தின் அளவான)து (வளைந்த) வில்லின் இரு முனைகளைப்போல் அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது.
10
فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்) அவருக்கு (வஹ்யி மூலம்) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்.
IFT
அப்போது அவர் அல்லாஹ்வின் அடியாருக்கு அறிவிக்கவேண்டிய வஹியை அறிவித்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு (அல்லாஹ்வாகிய) அவன், அவருக்கு அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்.
11
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟
முஹம்மது ஜான்
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை.
IFT
(தம்முடைய) கண்கள் கண்டதைப்பற்றி (நபியுடைய) உள்ளம் பொய்யுரைக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியுடைய) இதயம், தான் கண்டதை பற்றிப் பொய்யுரைக்கவில்லை.
12
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟
முஹம்மது ஜான்
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா?
IFT
எதனை அவர் கண்களால் பார்க்கின்றாரோ அதனைப்பற்றி நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ் அந்த இரவில் தன் அடியாருக்குக் காண்பித்து) அவர் கண்டது பற்றி, நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கம் செய்கின்றீர்களா?
13
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார்.
IFT
மற்றொரு முறை அவர் அவரை இறங்கிடக் கண்டார்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறை (ஜிப்ரீலை அவரது சுய உருவில்) இறங்கக் கண்டிருக்கிறார்.
14
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟
முஹம்மது ஜான்
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஸித்ரத்துல் முன்தஹா' என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில்.
IFT
‘ஸித்றதுல் முன்தஹா’* அருகில்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸித்ரத்துல் முன் தஹா என்னும் (இலந்தை மரத்தின்) இடத்தில் (இக்காட்சி நிகழ்ந்தது).
15
عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கிறது.
IFT
அதன் அருகிலேயே ‘ஜன்னத்துல் மஃவா’ இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விடத்தில் தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கின்றது.
16
اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ
முஹம்மது ஜான்
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
அப்துல் ஹமீது பாகவி
அந்த மரத்தை மூடியிருந்தவை அதை முற்றிலும் மூடிக்கொண்டன.
IFT
அந்த நேரத்தில் ‘ஸித்றதுல் முன்தஹா’ எது மூடிக்கொண்டிருந்ததோ அது மூடிக் கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இலந்தைமரத்தை மூடிக்கொள்ளும் ஒன்று மூடி கொண்டபோது_
17
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟
முஹம்மது ஜான்
(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை!
IFT
பார்வை விலகிவிடவுமில்லை; எல்லை கடந்துவிடவுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதிலிருந்து அவருடைய) பார்வை சறுகிவிடவில்லை, (எல்லையைக்) கடந்துவிடவுமில்லை.
18
لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟
முஹம்மது ஜான்
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் மெய்யாகவே கண்டார்.
IFT
மேலும், அவர்தம் இறைவனின் பெரும் பெரும் சான்றுகளைக் கண்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்தன் இரட்சகனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
19
اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ
முஹம்மது ஜான்
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா?
IFT
இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா?
20
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟
முஹம்மது ஜான்
மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
அப்துல் ஹமீது பாகவி
மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவற்றுக்கு ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா?)
IFT
மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மற்றொன்றாகிய_மூன்றாவதான மனாத் (என்னும் பெண் விக்ரகத்)தையும் (நீங்கள் கண்டீர்களா?)
21
اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُ ۟
முஹம்மது ஜான்
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
அப்துல் ஹமீது பாகவி
என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா?
IFT
ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு ஆண் (மக்)கள், இன்னும், அவனுக்குப் பெண் (மக்)களா?
22
تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟
முஹம்மது ஜான்
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.
IFT
அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.
23
اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ
முஹம்மது ஜான்
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இவையெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களே தவிர (அவை வணங்கத் தகுதியானவை) இல்லை. அ(வை வணங்கத் தகுதியானவை என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு எந்த ஆதாரத்தையும் (முந்திய வேதங்களிலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) மன இச்சைகளையும் வீண் சந்தேகத்தையும் தவிர, (இறை வேதத்தை பின்பற்றுவது) இல்லை. நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி (இந்த குர்ஆன்) வந்தே இருக்கிறது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றுவதில்லை.)
IFT
உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும்) பெயர்களே தவிர இல்லை, அ(வை தெய்வங்களென்ப)தற்காக அல்லாஹ் (உங்களுக்கு) யாதொரு சான்றையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கி வைக்கவில்லை, அவர்கள் வீண் எண்ணத்தையும், மனங்கள் விரும்புவனவற்றையும் தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை, நிச்சயமாக அவர்கள் இரட்சகனிடமிருந்து அவர்களுக்கு நேர் வழி வந்து விட்டது, (ஆனால், அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.)
24
اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா?
IFT
மனிதன் எதை விரும்புகின்றானோ அதுவே அவனுக்கு சத்தியம் (ஹக்) ஆகிவிடுமா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியது உண்டா? (அவனுக்குக் கிடைத்து விடுமா? இல்லை!)
25
فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠
முஹம்மது ஜான்
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.)
IFT
இம்மைக்கும் மறுமைக்கும் அல்லாஹ்தான் உரிமையாளனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மறுமையும், இம்மையும் அல்லாஹ்விற்கே உரியதாகும்.
26
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟
முஹம்மது ஜான்
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
அப்துல் ஹமீது பாகவி
வானத்தில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். (எவருக்காகவும்)அவர்கள் பரிந்து பேசுவது ஒரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து (அவருக்காக) அவன் அனுமதி கொடுக்கிறானோ அவருக்கே தவிர (மற்றவருக்கு பயனளிக்காது).
IFT
வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பரிந்துரை எந்தப் பயனும் அளிக்காது எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ, எவரைப் பற்றிய வேண்டுகோளை செவிமடுக்க நாடுகின்றானோ, (அத்தகையவருக்காக) பரிந்துரைக்குமாறு அல்லாஹ் அனுமதித்தாலே தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், வானங்களில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர், அல்லாஹ் தான் நாடியோருக்கு அனுமதியளித்து, அவன் திருப்தியும் கொண்ட பின்னரே தவிர அவர்களின் பரிந்துரை (எவருக்காகவும்) யாதொரு பயனுமளிக்காது.
27
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَیُسَمُّوْنَ الْمَلٰٓىِٕكَةَ تَسْمِیَةَ الْاُ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்கள் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களை சூட்டுகின்றனர்.
IFT
ஆனால் எவர்கள் மறுமையை ஏற்பதில்லையோ அவர்கள் வானவர்களுக்குப் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மறுமையைப் பற்றி நம்பவில்லையே அத்தகையோர்_ அவர்கள் மலக்குகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.
28
وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ۚ وَاِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ۟ۚ
முஹம்மது ஜான்
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
இதைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் எதையும் உறுதிப்படுத்தாது.
IFT
உண்மை யாதெனில் இவ்விஷயத்தைக் குறித்து ஞானம் எதுவும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், இவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சத்தியத்திற்கு எதிரில் ஊகம் எந்தப் பயனும் தருவது இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதைபற்றி அவர்களுக்கு எவ்வித அறிவுமில்லை, (வீண்) எண்ணத்தைத் தவிர, (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் உண்மையிலிருந்து (அதற்கு எதிராக) யாதொரு பலனையும் அளிக்காது.
29
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰی ۙ۬ عَنْ ذِكْرِنَا وَلَمْ یُرِدْ اِلَّا الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
முஹம்மது ஜான்
ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக.
IFT
(நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! எவன் நம்மை நினைவு கூர்வதைவிட்டும் முகம் திருப்பிக் கொண்டானோ. அவனை நீர் புறக்கணித்துவிடும், இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் அவன் நாடவில்லை.
30
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
முஹம்மது ஜான்
ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.
IFT
இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! இறைவனே நன்கறிகின்றான் அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுதான் கல்வியறிவில் அவர்களின் எல்லையாகும். (இதற்கப்பால்) நிச்சயமாக உமதிரட்சகன், தன்னுடைய வழியிலிருந்து தவறியவர் யாரென்பதையும் மிக அறிந்தவன், அவனே நேர்வழி செல்பவனையும் மிக அறிந்தவன்.
31
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۙ لِیَجْزِیَ الَّذِیْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَیَجْزِیَ الَّذِیْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰی ۟ۚ
முஹம்மது ஜான்
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்.
IFT
மேலும், பூமி மற்றும் வானங்களிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளன் அல்லாஹ்தான்! தீமை செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய பிரதிபலனை அல்லாஹ் கொடுப்பதற்காகவும், நற்பணி ஆற்றியவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன, ஆகவே, தீமை செய்தோருக்கு அவர்களுடைய (தீ) வினைக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுப்பதற்காகவும், நன்மை செய்தோருக்கு நன்மையைக் கூலியாகக் கொடுப்பதற்காகவும் (மறுமையை பிற்படுத்தி வைத்திருக்கின்றான்).
32
اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠
முஹம்மது ஜான்
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்.
IFT
அவர்களோ பெரும் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். அவன் உங்களை எப்போது மண்ணிலிருந்து படைத்தானோ மேலும், எப்போது நீங்கள் உங்கள் அன்னையரின் வயிற்றில் கருவாக இருந்தீர்களோ அப்போதிருந்தே உங்களை அவன் நன்கு அறிந்திருக்கின்றான். எனவே, நீங்கள் உங்களைத் தூயவர்களென வாதிடாதீர்கள்! உண்மையில் யார் இறையச்சமுடையவர் என்பதை அவனே நன்கறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், (தவிர்க்க முடியாத) சிறு பாவங்கள் தவிர, மற்ற பெரும் பாவங்களையும், மானக்கேடான விஷயங்களையும் தவிர்த்துக் கொள்கிறார்கள், நிச்சயமாக உமதிரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன், உங்களை பூமியிலிருந்து உற்பத்திச் செய்த சமயத்திலும், இன்னும் நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த சமயத்திலும், உங்களைப்பற்றி அவன் மிக அறிந்தவன், ஆகவே, நீங்களே உங்களை (தூய்மையானவர்களென எண்ணிக்கொண்டு) பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம், (உங்களில்) பயபக்தியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
33
اَفَرَءَیْتَ الَّذِیْ تَوَلّٰی ۟ۙ
முஹம்மது ஜான்
(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம்மை விட்டும் விலகியவனை நீர் கவனித்தீரா?
IFT
பிறகு (நபியே!) எவன் இறைவழியை விட்டு விலகிச் சென்றானோ,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டும்) புறக்கணித்தானே அத்தகையவனை நீர் பார்த்தீரா?
34
وَاَعْطٰی قَلِیْلًا وَّاَكْدٰی ۟
முஹம்மது ஜான்
அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் ஒரு சொற்பத்தை தர்மம் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான்.
IFT
மேலும், சிறிது வழங்கிவிட்டு பின்னர் நிறுத்திக் கொண்டானோ அவனை நீர் பார்த்ததுண்டா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் (வாக்களித்ததில்) குறைவாகக் கொடுத்தான், பிறகு (பெரும் பகுதியை) தடுத்துக்கொண்டான்.
35
اَعِنْدَهٗ عِلْمُ الْغَیْبِ فَهُوَ یَرٰی ۟
முஹம்மது ஜான்
அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அப்பால் (அதை) அவன் பார்க்கிறானா?
அப்துல் ஹமீது பாகவி
அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன் முடிவை அதில்) அவன் பார்த்தானா?
IFT
மறைவானவற்றைப் பற்றிய ஞானம் அவனிடம் இருந்து, அதன் மூலம் யதார்த்த நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வாக்குறுதிக்கு மாறாக நடக்கும்) அவனிடம் மறைவானது பற்றிய அறிவு இருந்து அப்பால் (அதன் மூலம் மறைவானதை) அவன் பார்க்கிறானா?
36
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளவை அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
IFT
மூஸாவின் ஆகமங்களிலும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது மூஸாவின் ஆகமங்களில் இருப்பதைக்கொண்டு அவன் அறிவிக்கப்படவில்லையா?
37
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
முஹம்மது ஜான்
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
அப்துல் ஹமீது பாகவி
(அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?)
IFT
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் ஆகமங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றிய எந்தச் செய்தியும் அவனுக்குக் கிடைக்கவில்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லது அல்லாஹ்வுடைய கட்டளைகளைப்) பூரணமாக நிறைவேற்றிய இப்றாஹீமை (அவருடைய ஆகமங்களில் இருப்பதை)க் கொண்டும் (அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?).
38
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۟ۙ
முஹம்மது ஜான்
(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அறிந்து கொள்வீராக! ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்
IFT
(அவையாவன): சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதாவது, குற்றம் செய்ததற்காக பாவச்சுமையை) சுமக்ககூடியது எதுவும் மற்றொரு (ஆத்மாவின் பாவச்) சுமையைச் சுமக்காது.
39
وَاَنْ لَّیْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰی ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘இன்னும் நிச்சயமாக மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது.''
IFT
மேலும், மனிதனுக்குதான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மனிதனுக்கு அவன் முயற்சித்தது (சம்பாதித்தது) தவிர வேறில்லை.
40
وَاَنَّ سَعْیَهٗ سَوْفَ یُرٰی ۪۟
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்.
IFT
இன்னும், அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக அவனுடைய முயற்சி(யின் பலன் அவனுக்கு மறுமையில்) காண்பிக்கப்படும்.
41
ثُمَّ یُجْزٰىهُ الْجَزَآءَ الْاَوْفٰی ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப்படுவான்.
IFT
பின்னர், அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், மிக நிறைவான கூலியாக அவன் கூலி கொடுக்கப்படுவான்.
42
وَاَنَّ اِلٰی رَبِّكَ الْمُنْتَهٰی ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவனிடம்தான் (உங்கள் அனைவரின்) இறுதி இடம் இருக்கிறது.
IFT
மேலும், இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இறுதியாக மீள்வதும் நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கம்தான்.
43
وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்.
IFT
இன்னும், சிரிக்க வைத்தவனும் அழ வைத்தவனும் அவனே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவனே சிரிக்கவைக்கிறான், அழவும் வைக்கிறான்.
44
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْیَا ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் நிச்சயமாக அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கிறான்.
IFT
மேலும் அவனே மரணமளிக்கின்றான்; அவனே வாழ்வளிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன்தான் (உங்களை) மரணிக்கச் செய்கிறான் இன்னும், அவன் உயிர்ப்பிக்கின்றான்.
45
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடிகளாகப் படைக்கிறான்.
IFT
மேலும், ஆண்பெண் ஜோடிகளை அவனே படைத்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன்தான் (உங்களை) ஆண், பெண் ஜோடிகளாக படைக்கின்றான்.
46
مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰی ۪۟
முஹம்மது ஜான்
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கிறான்).
IFT
தெறித்து விழும் ஒரு விந்துத் துளியிலிருந்து!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அது (கர்ப்பத்தில்) ஊற்றப்படும்போது (உங்களை படைக்கின்றான்).
47
وَاَنَّ عَلَیْهِ النَّشْاَةَ الْاُخْرٰی ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (நீங்கள் மரணித்தப் பின்னர் உங்களை) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது.
IFT
இன்னும், மற்றொரு வாழ்க்கையை அளிப்பதும் அவனுடைய பொறுப்பேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (மரணித்த பின்னர்) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே (பொறுப்பாக) இருக்கிறது.
48
وَاَنَّهٗ هُوَ اَغْنٰی وَاَقْنٰی ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
பொருளைக் கொடுத்து (அதை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான்.
IFT
மேலும், அவனே செல்வந்தனாக்கினான்; சொத்துக்களை வழங்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன்தான் சீமானாக்குகிறான், இன்னும் (அவன் கொடுத்ததைக் கொண்டு) பொருந்திக் கொள்ளச் செய்கிறான்.
49
وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰی ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) ‘ஷிஃரா' என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான்.
IFT
இன்னும், அவனே ‘ஷிஃரா’*வின் அதிபதியாக இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் நிச்சயமாக (மகத்தான நட்சத்திரமான) ஷிஃரா உடைய இரட்சகனும் அவன் தான்.
50
وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا لْاُوْلٰی ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான்.
IFT
மேலும், அவனே முந்தைய ‘ஆது’ சமூகத்தினரை அழித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக முந்தைய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
51
وَثَمُوْدَاۡ فَمَاۤ اَبْقٰی ۟ۙ
முஹம்மது ஜான்
“ஸமூது” (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) அவன் தப்பவிடவில்லை.
IFT
‘ஸமூது’ சமூகத்தினரையும் அவர்களில் எவரையும் பிறகு விட்டு வைக்காமல் அழித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஸமூதையும் (அழித்தான், அவர்களில் ஒருவரையும்) அவன் விட்டு வைக்கவில்லை.
52
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்). நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.
IFT
மேலும் அவர்களுக்கு முன்பு நூஹின் சமூகத்தினரை அழித்தான். ஏனெனில், அவர்கள் பெரும் கொடுமைக்காரர்களாகவும் வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களுக்கு) முன்னர் நூஹ்வுடைய சமூகத்தாரையும், (அழித்தவன் அவன்தான்.) நிச்சயமாக, அவர்கள் தாம் பெரும் அநியாயக்காரர்களாக, மற்றும் மிகுந்த வரம்பு மீறியவர்களாக இருந்தார்கள்.
53
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான்.
IFT
தலைகீழாக விழுந்த ஊர்களையும் அவன்தான் தூக்கி எறிந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தலைகீழாக புரட்டப்பட்ட (லூத்தின் சமூகத்தார் வாழ்ந்த இடத்)தையும் அவன் (மேலாகத் தூக்கிக்) கீழே வீழ்த்தினான்.
54
فَغَشّٰىهَا مَا غَشّٰی ۟ۚ
முஹம்மது ஜான்
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
IFT
பின்னர் அவற்றை எது மூடியதோ, அது மூடியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அதனைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து (முற்றிலும்) சூழ்ந்து கொண்டது.
55
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰی ۟
முஹம்மது ஜான்
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடைகளில் எதைத் தான் சந்தேகிக்கிறாய்?
IFT
(அதனை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்) ஆகவே மனிதனே, நீ உன் அதிபதியின் எந்தெந்த அருட்கொடைகளில் ஐயம் கொள்வாய்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, மறுமையை நிராகரிக்கும் மனிதனே) நீ உன் இரட்சகனின் அருட்கொடைகளில் எதனைத்தான் ஐயம் கொள்வாய்?
56
هٰذَا نَذِیْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰی ۟
முஹம்மது ஜான்
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே!
IFT
முன்னரே வந்துவிட்ட எச்சரிக்கைகளில் இதுவும் ஓர் எச்சரிக்கையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர் முந்தைய எச்சரிக்கயாளர்களி(ன் இனத்தி)லுள்ள ஓர் எச்சரிக்கையாளரே.
57
اَزِفَتِ الْاٰزِفَةُ ۟ۚ
முஹம்மது ஜான்
நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது.
IFT
வரவேண்டிய நேரம் நெருங்கி வந்து விட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நெருங்ககூடியது (_யுக முடிவு காலம்) நெருங்கிவிட்டது.
58
لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۟ؕ
முஹம்மது ஜான்
(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தடுக்க முடியாது.
IFT
அதனைத் தடுத்து நிறுத்துவோர் அல்லாஹ்வை அன்றி வேறெவரும் இலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வைத் தவிர அதனை வெளிப்படுத்தக்கூடியது எதுவும் இல்லை.
59
اَفَمِنْ هٰذَا الْحَدِیْثِ تَعْجَبُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
இதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
IFT
இனி என்ன, நீங்கள் இந்தச் செய்திகளைப் பற்றியா வியப்படைகிறீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இச்செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா?
60
وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
(இதைப் பற்றி) நீங்கள் சிரிக்கிறீர்களே? அழ வேண்டாமா?
IFT
சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அழாமல் இருக்கிறீர்களே?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கவும் செய்கின்றீர்கள்! நீங்கள் அழாமலுமிருக்கின்றீர்கள்!
61
وَاَنْتُمْ سٰمِدُوْنَ ۟
முஹம்மது ஜான்
அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கிறீர்களே!
IFT
ஆடிப்பாடி இதனைத் தடுக்க முயலுகிறீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைப்பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள்.
62
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۟
முஹம்மது ஜான்
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவ்வாறு இருக்காமல்) அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து (அவன் ஒருவனையே) வணங்குவீர்களாக!
IFT
பணிந்து விடுங்கள், அல்லாஹ்வின் முன்பு! மேலும் (அவனுக்கே) அடிபணிந்துவிடுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுங்கள், மேலும் (அவனேயே) வணங்குங்கள்.