العلق
ஸூரா 96 — அல்அலக் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
19 வசனங்கள் · ஜுஸ் 30
1
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
முஹம்மது ஜான்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
IFT
ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான்.
2
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
முஹம்மது ஜான்
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
IFT
(உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனை (அட்டைப்பூச்சி போன்று) ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்.
3
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
முஹம்மது ஜான்
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
IFT
மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன்.
4
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
முஹம்மது ஜான்
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
IFT
அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்.
5
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
முஹம்மது ஜான்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
IFT
மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் கற்றுக்கொடுத்தான்.
6
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
முஹம்மது ஜான்
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
IFT
அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு படைக்கப்பட்ட) மனிதன் அவனைப்படைத்த அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்கிறானா? (இல்லை. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.)
7
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
IFT
அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் தன்னை (இரட்சகனிடமிருந்து) தேவையற்றவன் எனக் காணும்பொழுது,
8
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
IFT
ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கமே (அவன்) மீள வேண்டியதிருக்கின்றது.
9
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
முஹம்மது ஜான்
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
தடுப்பவனை நீர் பார்த்தீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தடுக்கின்றானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா,
10
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
முஹம்மது ஜான்
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓர் அடியாரை அவர் தொழுது கொண்டிருக்கும்பொழுது,
11
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
முஹம்மது ஜான்
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
அப்துல் ஹமீது பாகவி
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் நேர்வழியின் மீதிருந்து(ம் அவரைத் தொழவிடாமல் தடுத்தவனை) நீர் பார்த்தீரா?
12
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
அப்துல் ஹமீது பாகவி
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
IFT
அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவுகிறவராக அவர் இருந்தும்,
13
اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
IFT
(தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் (அவரைப்) பொய்யாக்கி, முகத்தையும் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
14
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
IFT
அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்)பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
15
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
முஹம்மது ஜான்
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
IFT
அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முஹம்மது தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபூஜஹல் கூறியவாறு) அல்ல! இத்தீய செயலிலிருந்து (அவன் விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக அவனது முன்னெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம்.
16
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
முஹம்மது ஜான்
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
IFT
கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை.
17
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
IFT
அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (தன் உதவிக்காக) தனது சபையோரை அவன் அழைக்கட்டும்.
18
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
முஹம்மது ஜான்
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
IFT
தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் (அவனுக்கு தண்டனை தரும்) காவலர்களை அழைப்போம்.
19
كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
முஹம்மது ஜான்
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நீர் தொழுவதை விட்டும் தடுத்துவிட முயன்றானே அவ்வாறு) அல்ல! நபியே! நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர், (உமதிரட்சகனுக்குச்) சிரம் பணிவீராக! இன்னும், (அவனை வணக்கத்தின் மூலம்) நெருங்குவீராக!