அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)
IFT
அதனை நீங்கள் பார்க்கும் நாளில் நிலைமை எவ்வாறு இருக்குமெனில், பாலூட்டும் ஒவ்வொரு தாயும் பால் அருந்தும் தன் குழந்தைகளை மறந்துவிடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பமும் வீழ்ந்துவிடும். மேலும், மக்கள் மயக்கமுற்றவர்களாய் உமக்குத் தென்படுவார்கள். உண்மையில் அவர்கள் மயக்கத்தில் இருக்கமாட்டார்கள். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை அந்த அளவுக்குக் கடுமையாய் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை நீங்கள் காணும் அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள், கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை வைத்துவிடுவாள், மேலும் மனிதர்களை (பீதியின் கடுமையால்) மதி மயக்கம் கொண்டவர்களாக இருக்க நீர் காண்பீர், அவர்கள் (மதுவினால்) மதி மயங்கியவர்களும் அல்லர், எனினும் அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடினமானதாகும்.
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர்.
IFT
மனிதர்களில் சிலர் இவ்வாறு இருக்கின்றார்கள்: அவர்கள் ஞானமில்லாமல் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அறிவின்றி அல்லாஹ்வுடைய விஷயத்தில் தர்க்கம் செய்கின்றவரும், மனமுரண்டான ஒவ்வொரு ஷைத்தானைப் பின்பற்றுகிறவரும் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்.
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் அவனை நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பக்கமே செலுத்தி விடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது.
IFT
ஆனால், அந்த ஷைத்தானுடைய விதியில் எழுதப்பட்டுள்ளது என்ன? அவனுடன் யாரேனும் நட்பு கொண்டால் அவர்களை அவன் திண்ணமாக, வழிகெடுத்து விடுவான். நரக வேதனையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, நிச்சயமாக காரியம் அவன், இவனை (ஷைத்தானாகிய) அவன் வழிகெடுத்து, நரக வேதனையின் பக்கமே செலுத்திவிடுவான் என்று (ஷைத்தானாகிய) அவன்மீது விதியாக்கப்பட்டுவிட்டது.
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்து (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதை) குறை வடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம் வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்துவிடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தள்ளாத வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
IFT
மனிதர்களே! மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; நாம் உங்களை மண்ணிலிருந்து பிறகு இந்திரியத்திலிருந்து பிறகு இரத்தக்கட்டியிலிருந்து பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகத்தான் (இவற்றை நாம் எடுத்துரைக்கின்றோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு, உங்களைக் குழந்தை வடிவில் வெளிக்கொணர்கின்றோம்; (பிறகு உங்களை வளர்க்கின்றோம்;) நீங்கள் வாலிபத்தை அடைவதற்காக! மேலும், உங்களில் சிலர் முன்னரே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். வேறு சிலர் மிக மோசமான வயோதிகத்தின் பக்கம் திருப்பப்படுகின்றார்கள்; யாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாத நிலையை அடைவதற்காக! இன்னும் நீங்கள் பார்க்கின்றீர்கள்: பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! (இறந்தபின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப்பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அதுபற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்; (என்று நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு செய்வதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படிச் செய்கிறோம், பின்னர் உங்களைக் குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம், பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்.) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்து விடுகிறவரும் இருக்கின்றனர், (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்தபின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரையில் (உயிர் வாழ) விட்டு வைக்கப்படுபவரும் உங்களில் இருக்கின்றனர், மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர், அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொரு வகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது.
இது ஏனெனில்: நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கிற)து.
IFT
இவையனைத்திற்கும் காரணம் இதுதான்: திண்ணமாக, அல்லாஹ்தான் உண்மையானவன். மேலும், உயிரற்றவற்றை அவனே உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் - அவனே உண்மையானவன், நிச்சயமாக அவன்தான் மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான்; நிச்சயமாக அவன்தான் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்பதனாலாகும்.
(கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
அப்துல் ஹமீது பாகவி
விசாரணைக் காலம் நிச்சயமாக வரக்கூடியது. அதில் சந்தேகமேயில்லை. (அந்நாளில்) சமாதிகளில் (புதைந்து) கிடப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
IFT
இன்னும் மறுமை நாள் வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை (என்பதற்கும் இது ஒரு சான்றாகும்). மேலும், மண்ணறைகளில் உள்ளவர்களைத் திண்ணமாக அல்லாஹ் எழுப்புவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக மறுமை நாள் வரக்கூடியதாகும், அதில் சந்தேகமில்லை; இன்னும், சமாதிகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (அந்நாளில் உயிர் கொடுத்து) எழுப்புவான் (என்பதினாலுமாகும்.)
இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) எந்தவித கல்வியும், தர்க்கரீதியான ஆதாரமும், வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.
IFT
மக்களில் வேறு சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஞானமோ, வழிகாட்டுதலோ, ஒளியூட்டும் வேதமோ எதுவுமின்றி பிடரியை நிமிர்த்திக் கொண்டு அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் புரிகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அறிவின்றியும், நேர்வழியின்றியும், பிரகாசமான வேத (ஆதார)மின்றியும் அல்லாஹ்வுடைய விஷயத்தில் தர்க்கம் செய்பவர்கள் மனிதர்களில் (சிலர்) இருக்கிறார்கள்.
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
IFT
மக்களை இறைவழியிலிருந்து பிறழச் செய்ய வேண்டும் என்பதற்காக! இத்தகையவர்களுக்கு உலகில் இழிவுதான் இருக்கிறது. மேலும், மறுமையில் அவர்களை நாம் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (ஜனங்களைத் திருப்பி) வழி கெடுப்பதற்காக (கர்வங்கொண்டு) தன் கழுத்தைத் திருப்பியவனாக (உண்மையைப் புறக்கணிக்கின்றான்.,) அவனுக்கு இம்மையில் இழிவு இருக்கிறது, மறுமை நாளிலோ, எரிக்கும் (நெருப்பின்) வேதனையை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்வோம்.
“உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)
அப்துல் ஹமீது பாகவி
(அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்து அனுப்பிய செயல்களின் பலன்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் எவருக்கும் (தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்பவனல்ல.
IFT
இதுதான் உன்னுடைய கைகள் உனக்காக தயார்செய்து வைத்துள்ள எதிர்காலம். தவிர அல்லாஹ் தன்னுடைய அடிமைகள் மீது அக்கிரமம் இழைப்பவன் அல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது, உன்னுடைய இரு கரங்களும் முற்படுத்தி வைத்த (பாவங்களின்) காரணத்தாலும் நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களுக்கு எவ்வகையிலும் ஒரு சிறிதும் அநியாயம் செய்கிறவனல்லன் என்பதினாலுமாகும்” (என அந்நாளில் அவனுக்குக் கூறப்படும்)
இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும்.
IFT
மேலும், மனிதர்களில் இன்னும் சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மனநிறைவு கொள்கின்றார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் வெளிப்படையான நஷ்டமாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மனிதர்களில் (உறுதியின்றி, சந்தேகத்தின்) விளிம்பின் மீதிருந்து (கொண்டு) அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான், எனவே, அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைகிறான், அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமாயின் அவன் தன் முகத்தின் மீது (ஈமானை விட்டும் இறை நிராகரிப்பின்பால்) புரண்டுவிடுகிறான், (இத்தகையவன்) இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டான், இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே.
அப்துல் ஹமீது பாகவி
நன்மை ஏற்படுவதைவிட தீங்கு ஏற்படுவது எவர்களால் அதிகம் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள்.
IFT
எவர்களின் தீமை, நன்மையைவிட நெருக்கமாக இருக்கின்றதோ, அவர்களையே இவர்கள் அழைக்கின்றார்கள். அவர்களுடைய பாதுகாவலர்களும் மிக மோசமானவர்கள்! அவர்களுடைய தோழர்களும் மிக மோசமானவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவனுடைய தீங்கு அவனுடைய பயனைவிட மிகச் சமீபமாக இருக்கிறதோ, அவனையே இவன் அழைக்கிறான், திடமாக (அவன் அழைக்கும்) பாதுகாவலன் மிகக் கெட்டவன், (அவனின்) நண்பனும் திடமாக மிகக் கெட்டவன்.
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கங்களுக்குள் புகச்செய்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.
IFT
(இதற்கு மாறாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அல்லாஹ் நுழைவிப்பான். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றவர்களைச் சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்வான்.
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
அப்துல் ஹமீது பாகவி
எவன் (நம் தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன் பொறாமையின் காரணமாக) எண்ணுகிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன் சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும்.
IFT
இம்மையிலும் மறுமையிலும், தனக்கு எவ்வித உதவியும் அல்லாஹ் புரிந்திட மாட்டான் என்று எவன் சந்தேகம் கொள்கின்றானோ அவன் ஒரு கயிற்றின் துணையால் வானத்திற்குச் சென்று அதைப் பிளக்கட்டும். பின்னர், தனது உபாயத்தைக் கொண்டு தனக்கு எது வெறுப்பாய் உள்ளதோ அதைத் தடுத்திட முடியுமா என்று பார்க்கட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தூதராகிய அவருக்கு எவன் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் உதவி செய்யவே மாட்டான் என்று (தன்னுடைய காழ்ப்புணர்ச்சியின் காரணமாக) எண்ணுகின்றானோ அவன், ஒரு கயிற்றை வானத்தின் பால் (அதன் அளவிற்கு) நீட்டவும், பின்னர் (நபிக்கு கிடைத்துவரும் உதவியை தடுக்க முடிந்தால்) அவன் துண்டித்துவிடவும், இப்பொழுது அவனுடைய சூழ்ச்சி அவன் கோபம் கொண்டதைத் திண்ணமாகப் போக்கி விட்டதா என்று (கவனித்துப்) பார்க்கவும்.
இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான்.
IFT
இவ்வாறே தெளிவான விஷயங்களைக் கொண்டதாக இந்தக் குர் ஆனை நாம் இறக்கியருளினோம். மேலும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழி அளிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இவ்வாறே தெளிவான வசனங்காளாகவே (குர் ஆனாகிய) இதனை நாம் இறக்கி வைத்தோம், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களையே (இதன் மூலம்) நேர்வழியில் செலுத்துகின்றான்.
திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணைவைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்(த்துக்கொண்டே இரு)க்கிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரி டையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்குபவர்களான) மஜூஸிகளும், இணைவைத்துக் கொண்டிருந்தோரும் - (ஆகிய இவர்களில் நேர்வழியில் இருந்தவர்கள் யார் என்பதை) இவர்களுக்கிடையில், நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கிறான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல)
வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கிறான்.
IFT
வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காணவில்லையா? அல்லாஹ் யாரைக் கேவலப்படுத்துகின்றானோ, அவரைக் கண்ணியப்படுத்துபவர் எவருமில்லை. திண்ணமாக, அல்லாஹ், தான் நாடியதைச் செய்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கு வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், (பூமியின் மீது) ஊர்ந்து திரியும் பிராணிகளும், மனிதர்களில் அதிகமானோரும் சிரம்பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும், பெரும்பாலோர் அவர்கள் மீது வேதனை விதியாகிவிட்டது, மேலும், அல்லாஹ் யாரை இழிவு படுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவர் எவருமில்லை, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.
(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்னியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.
IFT
இவர்கள் தங்களுடைய இறைவனைப் பற்றி தர்க்கம் புரிந்து கொண்டிருக்கும் இரு பிரிவினர் ஆவர். (இவர்களில்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நெருப்பு ஆடைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய தலைகளின் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளும், நிராகரிக்கும் காஃபிர்களும் ஆகிய) இவ்விரு வழக்காளிகள் தங்கள் இரட்சகனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர், ஆகவே, நிராகரிக்கின்றார்களே அவர்கள்-நெருப்பு ஆடைகள் அவர்களுக்கு வெட்டி வைக்கப்பட்டு (தயார் படுத்தப்பட்டு) இருக்கின்றன, (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்.
(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' (எனவும் கூறப்படும்).
IFT
மன வேதனையினால், நரகத்திலிருந்து வெளியேற அவர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், “சுட்டெரிக்கும் தண்டனையைச் சுவையுங்கள்” என்று மீண்டும் அதிலேயே தள்ளப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
துக்கத்தால், (நரகமாகிய) அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும்போதெல்லாம், அதிலேயே திருப்பப் படுவார்கள், இன்னும், “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்” (எனவும் கூறப்படும்.)
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும்.
IFT
(மறுபுறத்தில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்கு தங்கக் காப்புகளும் முத்துகளும் அணிவிக்கப்படும். மேலும், அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அவர்களை, நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளில் நுழைவிப்பான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், (பின்னும்) அவற்றில் தங்கத்தினாலான கடகங்களும், முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவர், அதில் அவர்களுடைய உடைகளும் பட்டாகும்.
ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள்.
IFT
பரிசுத்த வாக்கியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது. மேலும், மாபெரும் புகழுக்குரிய தன்மைகளைக் கொண்ட இறைவனின் வழி அவர்களுக்குக் காட்டப்பட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (கலிமா தைய்யியா எனும்) பரிசுத்தமான கூற்றின் பால் அவர்கள் வழிகாட்டப்பட்டிருந்தனர்; இன்னும் புகழுக்குரியவனின் பாதையின்பாலும் அவர்கள் (இம்மையில்) செலுத்தப்பட்டிருந்தனர்.
நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்கள் ஆயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதை விட்டும் தடை செய்து கொண்டு இருக்கிறார்களோ, (அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.) எவராவது அதில் மார்க்கத்திற்கு விரோதமாக அநியாயம் செய்ய விரும்பினால், அவர்களை, துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்க வைப்போம்.
IFT
திண்ணமாக, எவர்கள் நிராகரித்தார்களோ மேலும், எவர்கள் (இன்று) அல்லாஹ்வின் வழியை விட்டு தடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ, இன்னும் மக்கள் அனைவருக்காகவும் நாம் நிர்மாணித்த மஸ்ஜிதுல் ஹராமை உள்ளூர் மக்களுக்கும் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் சம உரிமை உள்ள மஸ்ஜிதுல் ஹராமை தரிசிப்பதைத் தடை செய்கிறார்களோ (அத்தகையோரின் நடத்தை கண்டிப்பாக தண்டனைக்குரியதாக இருக்கிறது) மேலும், எவர்கள் இ(ந்த மஸ்ஜி)தில் நேர்மை தவறிக் கொடுமை இழைக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு நாம் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நிராகரித்து, அல்லாஹ்வின் பாதையை (அதில் விசுவாசிகள் செல்வதை) விட்டும், (மற்றும் மஸ்ஜிதுல் ஹராம்) அதில் வசிப்போராயினும், (அதற்கு தூரமாக) வெளியில் வசிப்போராயினும், மனிதர்களில் யாவருக்குமே சமமாக அதை நாம் ஆக்கியிருக்கிறோமே, அத்தகைய புனிதமான பள்ளியை (அதனுள் செல்வதை)விட்டும் தடுக்கிறார்களே, அத்தகையோர் (நஷ்டவாளிகளாவர்.) இன்னும் அதில் (பாவம் செய்தலெனும்) அநியாயத்தைக் கொண்டு யார் (அசத்தியத்தின்பால்) சாய்வதை நாடுகிறாரோ அவருக்கு நோவினைதரும் வேதனையிலிருந்து நாம் சுவைக்கச் செய்வோம்.
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இப்றாஹீமை நம் வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர். என் (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதைப் பரிசுத்தமாக்கி வைப்பீராக'' என்று நாம் கூறிய சமயத்தில்,
IFT
நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இப்றாஹீமுக்கு (நமது) வீட்டின் இடத்தை நிர்ணயித்து, “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர், என்னுடைய வீட்டை சுற்றி வருவோருக்கும், அதில் (தொழுகைகளை நிறைவேற்ற) நிற்போருக்கும், அதில் குனிந்து சிரம்பணிந்து தொழு)வோருக்கும் அதனைப் பரிசுத்தப்படுத்தி வைப்பீராக!” என்று நாம் கூறியதை (நீர் நினைவு கூர்வீராக!)
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
(அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த (ஒட்டக) வாகனங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்.
IFT
ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஹஜ்ஜுக்காக (அதைச் செய்ய வருமாறு) நீர் மனிதர்களை அழைப்பீராக!” (அவ்வழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள், இன்னும், இளைத்த (களைப்புற்ற) ஒட்டகங்களின் மீது (சவாரி செய்தவர்களாகவும் வருவார்கள்.) அவை தூரமான ஒவ்வொரு வழியிலிருந்தும் (அவர்களைக்கொண்டு) வரும்.
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள்.
IFT
அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களுக்குரிய (இம்மை மறுமையின்) பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அல்லாஹ்வின் பெயரை – அவன் அவர்களுக்குக் கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிடப்பட்ட நாட்களில் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) ஆகவே, அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து, நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள்.
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.
IFT
பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தறித்து, குளித்து இஹ்ராமை களைவதன் மூலம்) தங்கள் அழுக்குகளை அவர்கள் நீக்கிக் கொள்ளவும், தம் நேர்ச்சைகளையும் அவர்கள் நிறைவேற்றவும், (ஹஜ்ஜின் அடிப்படைக் கடமையான தவாபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் தவாஃப் செய்யவும்,
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவற்றை எவர் மகிமைப்படுத்துகிறாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வற்றைத் தவிர மற்றவை ஆகுமாக்கப்பட்டு விட்டன. (அவற்றை நீங்கள் புசிக்கலாம்.) ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்.''
IFT
இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதுவே (ஹஜ்ஜுடைய கிரியைகள் பற்றிய முறையாகும்), மேலும், அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவைகளை எவர் மேன்மைப்படுத்துகிறாரோ, அது அவருடைய இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும், மேலும், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைப் பிராணிகளிலிருந்து உங்களுக்கு (விலக்கபபட்டவையென) ஓதிக்காட்டப்பட்டதைத் தவிர, மற்றவை உங்களுக்கு (உண்ண) அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆகவே, விக்ரக (வணக்க)ங்களிலுள்ள அசுத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், பொய்க்கூற்றையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து (தலைகீழாக) விழுந்தவனைப் போலாவான். அவனை (கழுகு போன்ற) பறவைகள் இறாஞ்சி (கொத்தி)க் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக் கொண்டு சென்றுவிடும்.
IFT
அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அவரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுக்காக (அசத்தியத்தை விட்டும் சத்தியத்தின்பால்) சாய்ந்தவர்களாக, அவனுக்கு எதனையும் இணை வைக்காதவர்களாக, (வழிப்பட்டுவிடுங்கள்.) இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப்போன்றோ இருக்கின்றான்.
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது.
IFT
உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுவே (அவனுடைய கதியாகும்.) இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அப்போது நிச்சயமாக, அது இதயங்களிலுள்ள பயபக்தியில் (ஏற்பட்டது) ஆகும்.
(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(குர்பானிக்காக உள்ள ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலை அருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அவற்றைக் கொண்டு பயனடையலாம். பின்னர், அவற்றை கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்திடம் சேர்ப்பித்து விட வேண்டும்.
IFT
(பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குர்பானிப் பிராணிகளான, ஆடு, மாடு, ஒட்டகங்கள் ஆகியவைகளான) அவைகளில் (அவற்றின் பாலை அருந்துதல், சவாரி செயதல், அவற்றின் உரோமங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் போன்ற) பலன்கள் குறிப்பிட்ட நேரம் வரை உங்களுக்குண்டு, பின்னர், அவைகளுக்குரிய இடம் பூர்வீக வீட்டின்பாலாகும்.
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
IFT
மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந்தச் சமூக) மக்கள் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைப் பிராணிகளிலிருந்து அவன் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் கூறுவதற்காக ஒவ்வொரு சமூகத்தாருக்கும் குர்பானி செய்வதை நாம் ஏற்படுத்தியிருந்தோம், ஆகவே உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் (ஒரே) ஒரு நாயன்தான், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்து நடங்கள், மேலும், உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் தானமும் செய்வார்கள்.
IFT
அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால், அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன. அவர்களுக்கு எவ்விதத் துன்பம் நேரிடினும் அதனைப் பொறுத்துக் கொள்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றார்கள். நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்(வுடைய பெயர்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் (அச்சத்தால் பயந்து) நடுங்கிவிடும், (துன்பங்களிலிருந்து) அவர்களுக்கு ஏற்பட்டதின் மீது பொறுமையாளர்களாகவும், தொழுகையை நிறைவேற்றுபவர்களாகவும் இருப்பர், அவர்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து (தர்மமாகச்) செலவும் செய்வார்கள்.
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத் தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்தி வைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.
IFT
மேலும் (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்குப் பெரும் நன்மை இருக்கின்றது. எனவே, நிற்க வைத்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள். (குர்பானி கொடுத்த பின்) அவற்றின் விலாப்புறங்கள் பூமியில் சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்; இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்க்கும் மற்றும் தங்களுடைய தேவையை வெளிப்படுத்துகின்றவர்களுக்கும் புசிக்கக் கொடுங்கள். இவ்வாறே இப்பிராணிகளை நாம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளோம்; நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் பெயரால் ஹரமின்பால் கொண்டு செல்லப்படும் கொழுத்த) ஒட்டகங்களை – அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வுடைய அடையளங்களில் உள்ளவையாக நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் பெரும் நன்மை இருக்கிறது; ஆகவே (அதன் இடது முன் காலை மடக்கிக் கட்டி மீதமுள்ள மூன்று மூன்று கால்களில் அது நிற்குமாறு) நிறுத்தி வைத்து, அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள்; அது விலாப்புறமாக கீழே விழுந்துவிட்டால், அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (தேவையுடையோராய் இருந்தும் பிறரிடம்) கேட்காதவர்களுக்கும், அதை யாசித்துக் கேட்டவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
IFT
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட,) அவற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்துவிடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும், உங்களை அவன் நேர்வழியில் செலுத்தியதற்காக (தக்பீர் கூறி) அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக, இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான், மேலும், (நபியே!) நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கிலிருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு திண்ணமாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கின்றான். நம்பிக்கைத்துரோகம் செய்யக்கூடிய, நன்றி கொல்லக் கூடிய எவரையும் நிச்சயம் அல்லாஹ் நேசிப்பதில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ் விசுவாசங்கொண்டவர்களை (நிராகரிப்போரின் தீங்கு அவர்களை அணுகாது) தடுத்துக்கொள்கிறான், (உடன்படிக்கைகளை உடைத்தெறிகின்ற) அதிமோசக்காரர்களை, (அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்யாது) மறுப்பவர்களை நிச்சயமாக, அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
எவர்களுக்கு எதிராகப் போர்புரியப்படுகின்றதோ அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டது. ஏனெனில், அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நிராகரிப்போரால்) போர் தொடுக்கப்பட்டோர்க்கு அவர்கள் அநீதமிழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற காரணத்ததால் (போர்த்தொடுத்தோரை எதிர்த்து) யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுவிட்டது, நிச்சயமாக அல்லாஹ்வோ, இவர்களுக்கு உதவி செய்ய மிக்க ஆற்றலுடையவன்.
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள், தங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.
IFT
தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் நியாயமின்றி வெளியேற்றப்பட்டார்கள். ‘அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று அவர்கள் கூறியதுதான் அவர்கள் செய்த குற்றம். அல்லாஹ் மக்களில் சிலரைக்கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிக அளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும்! திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயம் அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால் நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்) வெளியேற்றப்பட்டார்கள், “எங்களுடைய இரட்சகன் அல்லாஹ் ஒருவன்)தான்” என்று கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் வாக்காக இருக்கவில்லை.) மேலும், மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (மற்ற) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், (பாதிரிகளின்,) மடங்களும், கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலங்களும், யூதர்களின் வணக்கஸ்தலங்களும் மஸ்ஜிதுகளும்- இவற்றில் அல்லாஹ்வுடைய பெயர் அதிகமாக கூறப்படுபவை (யாவும்) இடிக்கப்பட்டுப் போயிருக்கும், அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான், நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன்.
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
IFT
அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், நாம் அவர்களுக்கு பூமியில் (காரியங்களை நிர்வகிக்கும்) ஆற்றலை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள், ஜகாத்தையும் கொடுத்து வருவார்கள், நன்மையை ஏவி தீமையை விட்டும் விலக்குவார்கள், மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நிராகரிக்கும்) இவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்) இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய மக்களும், ஆது, ஸமூது என்னும் மக்களும் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாக பொய்யாக்கியே இருந்தனர்.
IFT
(நபியே! இறைநிராகரிப்பாளர்களான) அவர்கள் உம்மைப் பொய்யர் எனத் தூற்றுகின்றனர் எனில், அவர்களுக்கு முன்னர் நூஹின் சமுதாயத்தினரும் ஆத், ஸமூத் இனத்தார்களும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்கினால், (அதனால் நீர் கலக்கமுற வேண்டாம், ஏனெனில்) இவர்களுக்கு முன்னிருந்து நூஹ்வுடைய சமூகத்தாரும் ஆது (கூட்டத்தாரு)ம் ஸமூது(கூட்டத்தாரு)ம் (தங்கள் நபிமார்களை) நிச்சயமாகப் பொய்யாக்கினர்.
(இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர்). (இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். என் வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனித்தீரா)?
IFT
மற்றும் மத்யன்வாசிகள் ஆகிய அனைவரும் பொய்யர் எனத் தூற்றியுள்ளார்கள். மூஸாவும் பொய்யர் எனத் தூற்றப்பட்டிருக்கிறார். சத்தியத்தை நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் முதலில் சிறிது அவகாசமளித்தேன்; பின்னர், அவர்களைப் பிடித்துக் கொண்டேன். (பாருங்கள்;) எனது தண்டனை எப்படியிருந்தது என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) மத்யன் வாசிகளும், (அல்லாஹ்வின் தூதரைப் பொய்ப்படுத்தினர், இவ்வாறே) மூஸாவும், (தம் சமூகத்தாரால்) பொய்யாக்கப்பட்டார், ஆகவே, நிராகரித்தோருக்கு நான் அவகாசம் கொடுத்தேன், பின்னர் அவர்களை நான் பிடித்துக்கொண்டேன், (என்னுடைய) வேதனை(யின் பயங்கரம்) எவ்வாறிருந்தது? (என்பதை கவனிப்பீராக)
அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).
அப்துல் ஹமீது பாகவி
அநியாயக்காரர்கள் வசித்திருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. அவற்றின் (எத்தனையோ) கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றின் மாட மாளிகைகள் (மக்கள் வசிக்காது) பாழாய் கிடக்கின்றன.
IFT
அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். (இன்று) அவை தலைகீழாக கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் பாழடைந்தும் எத்தனையோ மாடமாளிகைகள் சீரழிந்தும் கிடக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏத்தனையோ ஊர்களை – அவை அநியாயம் செய்து கொண்டிருக்க, நாம் அவற்றை அழித்துள்ளோம், அவை அவற்றின் முகடுகளின் மீது விழுந்து கிடக்கின்றன, இன்னும், பாழடிக்கப்பட்ட கிணறுகளின் மீதும், உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளின் மீதும், (அவை விழுந்தழிந்து கிடக்கின்றன.)
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன.
IFT
பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக்கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே! உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை; ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகிவிடுகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய காதுகள் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களுடைய (வெளிப்)பார்வைகள் குருடாகவில்லை, எனினும் நெஞ்சங்களிலுள்ள (அவர்களுடைய) இதயங்கள் குருடாகிவிட்டன.
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உம்மிடம் அவசரப்படுகின்றனர். (நீர் கூறுவீராக: உங்கள் மீது வேதனையை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்றமாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்கள்) ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
IFT
வேதனை விரைவில் வரவேண்டுமென உம்மிடம் இம்மக்கள் அவசரப்படுகின்றார்கள்! அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்! ஆனால், உம் இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் வேதனையை (அது எங்கே எனக்கேட்டு) உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர், அல்லாஹ் தன் வாக்கிற்கு ஒருபோதும் மாற்றம் செய்யமாட்டான், மேலும் நிச்சயமாக, உம் இரட்சகனிடத்தில் ஒரு நாளாகிறது, நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.
அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) மேலும், அவர்கள் அநியாயம் செய்யவே முற்பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம்தான் வரவேண்டியது இருக்கிறது.
IFT
கொடுமை புரிந்த எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. நான் (முதலில்) அவற்றுக்கு அவகாசம் அளித்து, பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன். மேலும், (அனைவரும்) என்னிடமே திரும்பி வர வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எத்தனையோ ஊர்(வாசி)கள் - அவை அநியாயம் செய்து கொண்டிருந்த நிலையில் நான் அவற்றுக்கு அவகாசம் அளித்திருந்தேன், “(ஆனால் அவர்கள் அக்கிரமமே செய்து வந்தார்கள்.) பின்னர், நான் அவற்றைப் பிடித்துக் கொண்டேன், (அவர்கள் இறந்த பின்னரும்) என்பாலே மீண்டும் வரவேண்டியதிருக்கின்றது.
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபியும், ரசூலும் (வேதத்தை) ஓதிய சமயத்தில் அவருடைய ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தை உண்டுபண்ண முயற்சிக்காமல் இருக்கவில்லை. (அவர்களுடைய ஓதுதலில்) ஷைத்தான் உண்டுபண்ணிய (தப்பான)தை அல்லாஹ் நீக்கிய பின்னர் தன் வசனங்களை உறுதிப்படுத்திவிடுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
(நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும் நபியானாலும் ஒரு விஷயம் நடைபெற வேண்டு மென அவர் விரும்பும்போது ஷைத்தான் அவருடைய விருப்பத்தில் இடையூறு விளைவிக்காமல் இருந்ததில்லை. இவ்வாறு ஷைத்தான் ஏற்படுத்தும் இடையூறுகளை அல்லாஹ் நீக்கிவிடுகின்றான். பின்னர் தன்னுடைய வசனங்களை அல்லாஹ் உறுதிப்படுத்திவிடுகின்றான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே) உமக்கு முன் எந்தத் தூதரையும், எந்த நபியையும் அவர் ஒதினால், அவருடைய ஓதுதலில் ஷைத்தான் (நோயிருப்பவர்களின் நெஞ்சங்களில்) குழப்பத்தைப் போட்டே அல்லாமல் நாம் (அவர்களை) அனுப்பவில்லை, (அவர்களுடைய மனதில்) ஷைத்தான் போட்டதை அல்லாஹ் நீக்கிவிட்டு அதன் பின்னர், தன்னுடைய வசனங்களை (அறிவுடையோர்களுடைய இதயங்களில்) உறுதிப்படுத்திவிடுகிறான், இன்னும் அல்லாஹ் யாவையும் நன்கறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு ஒரு காரணமாகவும் (அல்லாஹ்) ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்.
IFT
(அவன் இவ்வாறு நிகழச் செய்வது) எதற்காகவெனில், இதயங்களில் (வஞ்சகப்) பிணி உள்ளவர்களுக்கும், உள்ளங்கள் இறுகிப் போய்விட்டவர்களுக்கும் ஷைத்தான் விளைவிக்கின்ற தீமையை ஒரு சோதனையாய் ஆக்கிட வேண்டும் என்பதற்காக! உண்மையில், இந்தக் கொடுமையாளர்கள் பிணக்கிலும், பகைமையிலும் வெகுதூரம் சென்று விட்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு) ஷைத்தான் போட்ட (குழப்பத்)தை எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (கல்லைப்போல்) கடினமாயிருக்கின்றனவோ அவர்களுக்கும் சோதனையாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் அவ்வாறு செய்தான்.) நிச்சயமாக, அநியாயக்காரர்கள் வெகு தூரமான பிளவில்தான் இருக்கின்றனர்.
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய உள்ளங்கள் பணிந்து அவனுக்கு கட்டுப்பட்டுவிடும். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைத்தான், அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
IFT
மேலும், திண்ணமாக இவ்வேதம் உம்முடைய அதிபதியிடமிருந்து வந்த உண்மையாகும் என்பதை அறிவு வழங்கப்பட்டவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் இதன் மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதற்காகவும் மேலும், அவர்களின் இதயங்கள் அவன் முன் பணிந்து விடுவதற்காகவும்தான் (இவ்வாறெல்லாம் நிகழச் செய்தான்). உறுதியாக, அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு என்றென்றும் நேர்வழியைக் காண்பிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அறிவு கொடுக்கப்பட்டிருந்தார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம் இரட்சகனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை அவர்கள் விசுவாசிப்பதற்காகவும், இன்னும் (இதனால்) அவர்களின் இதயங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (அவ்வாறு செய்தான்.) மேலும், விசுவாசங்கொண்டோரை நிச்சயமாக அவர்களை, அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவான்
நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரை அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும்வரை இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.
IFT
ஆனால், இறைவனை மறுக்கக்கூடியவர்கள் இதைப் பற்றி சந்தேகம் கொண்ட வண்ணமிருப்பார்கள்; எதுவரையெனில், இறுதித் தீர்ப்புநாள் அவர்களிடம் திடீரென வரும் வரை அல்லது துயரம் மிகுந்த ஒரு நாளின் வேதனை அவர்கள் மீது இறங்கும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர், தங்களிடம் மறுமைநாள் திடீரென வரும்வரை, அல்லது மலட்டுநாளின் வேதனை அவர்களிடம் வரும் வரையில், இ(வ்வேதத்)தைப் பற்றி சந்தேகத்திலேயே இருந்து கொண்டிருப்பர்.
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், ஆட்சி, அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சொர்க்கங்களில் தங்கி விடுவார்கள்.
IFT
அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு உரித்தான தாயிருக்கும். அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் அருட்கொடைகள் நிறைந்த சுவனபதிகளுக்குச் செல்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில், (சர்வ அதிகாரமும் கொண்ட) ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான், ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களே அத்தகையோர் அருட்கொடைகள் உடைய சுவனபதிகளில் இருப்பார்கள்.
இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) கொல்லப்படுகிறார்களோ அல்லது இறந்துவிடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன்.
IFT
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டார்களோ அல்லது மரணமடைந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அழகிய நற்பேறுகள் வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் நற்பேறுகள் வழங்குபவர்களில் மிகவும் சிறந்தவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடைய பாதையில் (ஹிஜ்ரத்துச் செய்து) புறப்பட்டு, பின்னர் (யுத்தத்தில்) கொல்லப்பட்டோ, அல்லது இறந்தோ விடுகின்றனரே) அத்தகையோர் - அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ், மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் உணவளிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலானவன்.
நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்: நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் அவர்களை சேர்த்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும், மிக்க பொறுமையுடையவனும் ஆவான்.
IFT
அவர்கள் திருப்திபடுகின்ற இடத்தில் அவர்களை நுழைவிப்பான். திண்ணமாக, அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே) நிச்சயமாக, எதனை அவர்கள் பொருந்திக் கொள்கிறார்களோ அப்பிரவேசிக்குமிடத்தில் அவன் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் யாவையும் நன்கறிகிறவன், மிகுந்த சகிப்புத் தன்மையுடையவன்.
அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே (காரியம் நடைபெறும்). எவரேனும் தான் துன்புறுத்தப்பட்ட அதே அளவுக்கு பழி வாங்கிய பிறகு, மீண்டும் (முதல் துன்புறுத்திய) அவன் மீது அதிகம் அநியாயம் செய்யப்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அ(நீதி இழைக்கப்பட்ட)வனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான்.
IFT
இதுதான் அவர்களின் நல்ல முடிவாகும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ப ஒருவன் பழிவாங்கிய பிறகு, மீண்டும் அவன் மீதே அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவனுக்கு அவசியம் உதவி புரிவான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அத்தகைய அருட்கொடைகள் அனைத்தும் கொண்ட) அது (அவர்களுக்கே உரியதாகும்.) மேலும், எவர் தான் எதனால் துன்புறுத்தப்பட்டாரோ அது போன்றே (துன்புறுத்தியவரை) தண்டித்துவிட்டு, அதன் பின்னர் அவர் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் (துன்பத்திற்குள்ளான) அவருக்கு உதவி புரிவான்; நிச்சயமாக அல்லாஹ, மிகவும் பிழை பொறுப்பவன், மிக்கமன்னிப்பவன்.
அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்டவனாகவும் ஆக்கி விடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
இது ஏனெனில், திண்ணமாக அல்லாஹ்தான் இரவில் இருந்து பகலையும், பகலிலிருந்து இரவையும் வெளிக் கொணர்கின்றான். மேலும், யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(வ்வாறு உதவி செய்த)து நிச்சயமாக அல்லாஹ், இரவைப் பகலில் புகுத்துகிறான், பகலை இரவில் புகுத்துகிறான் எனும் (அவனது வல்லமையின்) காரணத்தினாலாகும், இன்னும் (அனைத்தையும்) நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான். நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன்.
IFT
இது ஏனெனில், அல்லாஹ்தான் உண்மையானவன்; அல்லாஹ்வை விடுத்து இவர்கள் அழைக்கின்ற அனைத்தும் போலியானவை. மேலும், அல்லாஹ்தான் உயர்ந்தவனும் மாபெரியவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய) அது, (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் -அவன் தான் உண்மையானவன், மற்றும் நிச்சயமாக அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கின்றார்களோ அதுவே பொய்யானதாகும், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்பதினாலுமாகும்.
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்.
IFT
அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழிய வைக்கின்றான்; அதனால் பூமி பசுமையாகின்றது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? உண்மையில் அல்லாஹ் நுண்மையானவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து நீரை (மழையை) இறக்குகிறான், (அதனால்) பூமி பசுமையாகிவிடுகிறது என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? “நிச்சயமாக அல்லாஹ் நுட்பமாக அறிகிறவன், (யாவையும்) நண்குணர்பவன்.
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமுடையவன், கருணையுடையவன் ஆவான்.
IFT
நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக வசப்படுத்தி வைத்துள்ளான்; மேலும், கப்பலை ஒரு நியதிக்கு உட்படுத்தி வைத்திருப்பதும் அவன்தான். அது அவனுடைய கட்டளைப்படி கடலில் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், அவனே வானத்தைத் தன் பிடியில் வைத்திருக்கின்றான், தன் உத்தரவின்றி அது பூமியின் மீது விழுந்துவிடாமல் இருப்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் மனிதர்கள் மீது மிகவும் பரிவு கொண்டவனாகவும் பெரும் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ளவற்றையும், அவனுடைய கட்டளையைக் கொண்டு கடலில் செல்லும் கப்பலையும், உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான், வானத்தை – அது தன்னுடைய அனுமதியின்றி, பூமியின் மீது விழுந்து விடாதவாறும் அவன் அதனை தடுத்துக் கொண்டிருக்கிறான், நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன்.
இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன்தான் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவன் ஆவான்.
IFT
உங்களுக்கு வாழ்வு அளிப்பவன் அவனே. பின்னர், அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், அவனே உங்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பான். உண்மையில், மனிதன் பெரிதும் சத்தியத்தை நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு அவன் உயிரளித்தான், பின்னர் உங்களை அவன் மரணிக்கச்செய்வான், பின்னர் உங்களை அவன் உயிர்ப்பிப்பான், (எனினும்) நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உமது காலத்தில் உமக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். மேலும் நீர் அவர்களை உமது இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக. நிச்சயமாக நீர் நேரான வழியில்தான் இருக்கிறீர்.
IFT
நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை நிர்ணயித்திருக்கின்றோம்; அதனை அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்! எனவே, (நபியே!) இவ்விவகாரத்தில் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்ய வேண்டாம். நீர் உம் இறைவன் பக்கம் அழைப்பு விடுப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியிலேயே இருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வழிபாட்டுமுறையை நாம் ஆக்கினோம், அவர்கள் அதனை (முறையாக)ச் செய்கிறவர்களாக இருக்கின்றனர், ஆகவே, அவர்கள் திட்டமாக இக்காரியத்தில் உம்முடன் பிணங்கிக் கொள்ள வேண்டாம், இன்னும், நீர் அவர்களை உம்முடைய இரட்சகன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் தான் நேர்வழியில் இருக்கின்றீர்.
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!
IFT
நீங்கள் அறியவில்லையா? வானம் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். அவை அனைத்தும் ஓர் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்ணமாக, இது அல்லாஹ்வுக்குச் சற்றும் சிரமமானதன்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இது (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) புத்தகத்தில் இருக்கின்றது, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதேயாகும்.
மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) அத்தாட்சி எதையும் இறக்கவில்லை; அவர்களிடம் அது பற்றி கல்வியும் இல்லை. இந்த அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்.
IFT
இவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. மேலும், அவற்றைக் குறித்து இவர்கள் எந்தவிதமான ஞானத்தையும் பெற்றிருக்கவில்லை. கொடுமை புரியும் இம்மக்களுக்கு உதவிபுரிபவர் யாரும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும் அவர்கள் அல்லாஹ்வையன்றி – அதற்கு அவன் எந்தச் சான்றையும் இறக்கி வைக்காததையும், இன்னும், எதுபற்றிய அறிவு அவர்களுக்கில்லையோ அதையும் வணங்குகின்றனர், (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் எவருமில்லை.
இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் காண்பீர். நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! நான் உங்களுக்கு இதைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது.
IFT
மேலும், இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படும்பொழுது சத்தியத்தை நிராகரிப்பவர்களின் முகங்களில் வெறுப்பு ஏற்படுவதைக் காண்பீர். நம்முடைய வசனங்களை இவர்களுக்கு ஓதிக்காண்பிக்கின்றவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போல் தெரிகின்றது! (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “இதைவிடத் தீயதை உங்களுக்கு நான் அறிவித்துத் தரவா? நரகம்! சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அல்லாஹ் அதைத்தான் வாக்களித்திருக்கின்றான். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் தெளிவானவைகளான நம்முடைய வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், (அவற்றை) நிராகரிப்பவர்களுடைய முகங்களில் (கோபத்தினால் ஏற்பட்ட) வெறுப்பை நீர் அறிவீர்; நம்முடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்போரை அவர்கள் தாக்குவதற்கு நெருங்குவர், (ஆகவே,) இவர்களிடம் நீர் கூறுவீராக! “நான் உங்களுக்கு இதனைவிடக் கெட்டதை அறிவிக்கட்டுமா? (அது நரக) நெருப்புத்தான், அதனையே (உங்களைப் போன்ற) நிராகரிப்போருக்கு அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான், (அது) சேருமிடத்திலும் மிகக்கெட்டது.”
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!
IFT
மனிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டு போனாலும்கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! ஓர் உதாரணம் கூறப்படுகிறது, ஆகவே அதனை(ச்செவிதாழ்த்தி)க் கேளுங்கள், அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நீங்கள் (தெய்வங்களென) அழைக்கிறீர்களே அத்தகையவர்கள் - அவர்கள் அதற்காக ஒன்று கூடினாலும் சரியே! ஒரு ‘ஈ’யைக்கூட படைக்கவே மாட்டார்கள், மேலும் ஓர் ‘ஈ’ அவர்களிடமிருந்து ஏதேனும் ஒரு பொருளை பறித்துக் கொண்டாலும் அதனை அதனிடமிருந்து விடுவிக்கவும் அவர்களால் முடியாது, (ஏனென்றால் அவற்றை தெய்வங்களெனத்) தேடுபவரும் (அவர்களால் தெய்வங்களென) தேடப்படுகிறவரும் பலவீனமடைந்துவிட்டனர்.
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.
IFT
இவர்கள் அல்லாஹ்வின் மதிப்பை எந்த முறைப்படி உணர வேண்டுமோ அந்த முறைப்படி உணரவே இல்லை. உண்மை யாதெனில், பெரும் வலிமையும் கண்ணியமும் உடையவன் அல்லாஹ்வே ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்குத் தக்கவாறு அவர்கள் மதிக்கவில்லை, நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலம் வாய்ந்தவன் (யாவரையும்) மிகைத்தவன்.
அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்(னர் சென்று) இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவற்றையும் அவன் நன்கறிந்தவன். எல்லா விஷயங்களும் அல்லாஹ்விடமே திரும்ப கொண்டு வரப்படும்.
IFT
மக்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். மேலும், எல்லா விவகாரங்களும் அவன் பக்கமே திருப்பப் படுகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்(னர் சென்று) இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்(னர் வர) இருப்பவற்றையும் அவன் அறிவான், இன்னும் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்வின் பக்கமே (தீர்ப்புக்காக) திருப்பிக் கொண்டு வரப்படும்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். (மார்க்கத்திற்கும் மக்களுக்கும்) நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும்* செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணி ஆற்றுங்கள். (இதன் மூலமே) நீங்கள் வெற்றி அடையக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே” நீங்கள் (குனிந்து) ருகூஉச் செய்யுங்கள், இன்னும் (சிரம் பணிந்து) ஸுஜூதும் செய்யுங்கள், இன்னும் உங்கள் இரட்சகனை வணங்குங்கள், மேலும் வெற்றியடைவதற்காக நன்மையைச் செய்யுங்கள்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம் இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். ஆகவே, தொழுகையை கடைப்பிடியுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்). அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.
IFT
மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு இதே பெயர்தான்!) தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள்; மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய பாதுகாவலன். அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) இன்னும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (உங்களுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி) அறப்போர் செய்ய வேண்டிய முறைப்படி அறப்போர் (ஜிஹாது) செய்யுங்கள்; அவனே உங்களைத் தேர்ந்தெடுத்து மேன்மையாக்கி வைத்திருக்கிறான்; இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; உங்களுடைய தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை (கடைபிடியுங்கள்!) அவன்தான் (இதற்கு) முன்னர், உங்களுக்கு முஸ்லீம்கள் எனப் பெயரிட்டான்; இ(வ் வேதத்)திலும்தான் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது; இது ஏனெனில், நம்முடைய) இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் மற்ற மனிதர்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவுமேயாகும்; எனவே, தொழுகையை நீங்கள் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள், அல்லாஹ்வை (அவனின் மார்க்கத்தை)ப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், பாதுகாவலனில் அவன் நல்லவன், மேலும் நல்ல உதவியாளன்.