(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.
IFT
ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களின் பேச்சுக்களை மறைந்திருந்து ஷைத்தான்களாகிய) இவர்கள் செவியேற்கமாட்டார்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரி கொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.
9
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
முஹம்மது ஜான்
(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
IFT
அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விரட்டப்படுவதற்காக (எறியப்படுவார்கள்), அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.
IFT
இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே “படைப்பால் அவர்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது நாம் படைத்திருப்பைவைகளா?” என இவர்களிடம் (நபியே! நீர்) விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கின்றோம்.
12
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
முஹம்மது ஜான்
(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர்.
IFT
உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், (நபியே!) நீர் ஆச்சரியப்படுகின்றீர்; அவர்களோ, (அதனைப்) பரிகசிக்கின்றனர்.
13
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.
IFT
விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்கள் உபதேசிக்கப்பட்டால், அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள்.
14
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
முஹம்மது ஜான்
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
IFT
ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் அளவு கடந்து பரிகாசம் செய்கின்றனர்.
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,
IFT
(இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அநியாயம் செய்தார்களே அவர்களையும், (அநியாயம் செய்வதில் அவர்களுக்கு நிகரானவர்களான) அவர்களின் துணைவர்களையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்களே அவர்களையும் ஒன்று திரட்டுங்கள்”.
“அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' (என்றும்),
IFT
பிறகு அவர்கள் அனைவருக்கும் நரகத்துக்கான வழியினைக் காட்டுங்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வையன்றி (வணங்கிக் கொண்டிருந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்) பின்னர் அவர்களுக்கு நரகத்தின் பாதையின்பால் வழிகாட்டுங்கள்.
24
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
“இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
அப்துல் ஹமீது பாகவி
‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்).
IFT
சற்றே அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கிறது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அங்கு) அவர்களை நிறுத்தியும் வையுங்கள், நிச்சயமாக அவர்கள் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள் (என்றும் கூறப்படும்).
25
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
முஹம்மது ஜான்
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்).
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் உதவி செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை? (என்றும் கேட்கப்படும்).
26
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்.
IFT
அடே! இன்று அவர்கள் தங்களையும் (ஒருவருக்கொருவர் மற்றவர்களையும் இறைவனிடம்) சரணடையச் செய்து கொண்டிருக்கின்றார்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இல்லை, இன்றையத்தினம் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) சரணடைந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்க்கிக் (கேள்விகளைக்) கேட்டுக் கொள்வார்கள்.
(தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
(பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வலப்பக்கத்திலிருந்து எங்களிடம் (உங்கள் பலத்தால் நல்லவற்றைச் செய்வதிலிருந்து தடுத்தும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதிலிருந்து எங்களைத் திருப்பி விட்டும்) வருபவர்களாகவும் இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
29
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அ(த்தலை)வர்கள் ‘‘அவ்வாறல்ல. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தான் நம்பிக்கை கொள்ளவில்லை.''
IFT
அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “இல்லை, நீங்கள்தான் நம்பிக்கை கொள்வோராய் இருக்கவில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “அவ்வாறல்ல! நீங்கள் தாம் விசுவசங்கொண்டவர்களாக இருக்கவில்லை” என்று அ(த்தலை)வர்கள் கூறுவார்கள்.
“அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,
IFT
இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வைத் தவிர வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை!” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள், பெருமையடிப்பவர்களாக இருந்தனர்.
“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
IFT
மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விட்டுவிடுகின்றவர்களா?” என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்.
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
IFT
அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் பைத்தியக்காரர்) அல்ல! அவர் உண்மையான(மார்க்கத்)தையே கொண்டு வந்தார், (தனக்கு முன்சென்ற) தூதர்களையும் அவர் உண்மைப்படுத்தினார்.
“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்.
IFT
நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) நாம் கூலி வழங்கப்படுவோரா? (என்றும் கூறுபவனாக இருந்தான்).
54
قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟
முஹம்மது ஜான்
(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கூறி,
IFT
(இப்போது அவன் எங்கிருக்கின்றான் என்பதை) நீங்கள் காண விரும்புகின்றீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே அவனை) நீங்கள் எட்டிப்பார்க்(கவிரும்பு)கின்றீர்களா? என்று கேட்டார்.
55
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟
முஹம்மது ஜான்
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,
IFT
இவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனிவார். அப்போது நரகின் ஆழத்தில் அவனைக் கண்டு கொள்வார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு அவர் எட்டிப் பார்க்கிறார்: அப்போது அவனை நரகத்தின் மத்தியில் அவர் காண்கிறார்.
56
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
அப்துல் ஹமீது பாகவி
(அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்.''
IFT
மேலும், அவனை நோக்கிக் கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்திருந்தாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனிடம்) “அல்லாஹ்வின்மீது சத்தியமாக, நீ என்னை (உலகில் இருக்கும் போது வழி கெடுத்து நரகக்) குழியில் தள்ளிவிடவே எத்தனித்தாய்” என்று கூறுவார்.
“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்).
IFT
நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்முடைய முந்தைய மரணத்தைத் தவிர (வேறில்லை), நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் (என்றும் சுவனவாசிகள் கூறுவர்).
60
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதுதான் மகத்தான பாக்கியமாகும்.
IFT
திண்ணமாக, இதுவே மகத்தான வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதுவே மகத்தானதொரு வெற்றியாகும்!
61
لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟
முஹம்மது ஜான்
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்.
IFT
செயல்படுவோர் இத்தகைய வெற்றிக்காகவே செயல்பட வேண்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது போன்றதற்காகவே, செயல்படக்கூடியவர்கள் செயல்படவும்.
அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை?
IFT
பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர் அவர்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களின் பால் (மறைவாகச்) சென்று (அங்கு அவர்களுக்கென படைக்கப் பட்டிருந்தவற்றைச் சுட்டிக்காட்டி) “நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கேட்டார்.
92
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
முஹம்மது ஜான்
“உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை.)
IFT
நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுக்கென்ன (நேர்ந்தது?) நீங்கள் (ஏன்) பேசுவதில்லை?”(என்று கேட்டார்).
93
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
முஹம்மது ஜான்
பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.
IFT
அதன் பிறகு அவர் அவற்றின் மீது பாய்ந்து வலக்கரத்தால் தாக்கினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவற்றின் பால் சென்று தன் வலக்கையினால் அவைகளை அடித்து (உடைத்து) விட்டார்.
94
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
முஹம்மது ஜான்
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர்.
IFT
பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(திருவிழாவிலிருந்து திரும்பி வந்து) அவர்பால் அவர்கள் விரைந்து (ஓடி) வந்தனர்.
95
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
அப்துல் ஹமீது பாகவி
அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?
IFT
அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் (அவர்களிடம்) “நீங்கள் செதுக்கியவைகளை நீங்களே வணங்குகிறீர்களா?” என்று கேட்டார்.
96
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்.
IFT
உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய அப்பொருள்களையும் படைத்தான்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” (என்றார்).
அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள் கோபங் கொண்டு) இவருக்காக ஒரு கிடங்கை எழுப்புங்கள், பின்னர், (அதில் நெருப்பை உண்டாக்கி) அந்நெருப்பில் அவரைப்போட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.
IFT
அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இஸ்மாயீல்) அவருடன் சேர்ந்து உழைக்ககூடிய பருவத்தை அவர் அடைந்தபொழுது, அவர் (தன் மகனிடம்) ”என் அருமை மகனே! நிச்சயமாக நான், உன்னை அறு(த்து)ப் ப(லியிடுவ)தாக, நிச்சயமாக நான் கனவில் கண்டேன், (இதைப் பற்றி) நீ என்ன அபிப்ராயப்படுகிறாய்?” என்று கேட்டார், அ(தற்க)வர், “என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்” என்று கூறினார்.
103
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
முஹம்மது ஜான்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்.
IFT
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவ்விருவரும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து, (இப்றாஹீமாகிய) அவர், (இஸ்மாயிலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது,
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
IFT
மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களை நல்கினோம். அவ்விருவரின் சந்ததியரில் நன்மை செய்பவரும், பகிரங்கமாகத் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொள்பவரும் இருக்கின்றனர்.
114
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் அருள் புரிந்தோம்.
IFT
மேலும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பேருபகாரம் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் மூஸா, இன்னும் ஹாரூன் மீதும் பேருபகாரம் புரிந்தோம்.
இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
IFT
நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்குச் சென்று திரும்புகின்ற போது) காலைப் பொழுதை அடைந்தவர்களாக நிச்சயமாக நீங்கள் அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.
138
وَبِالَّیْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?
IFT
நீங்கள் அறிவு பெறமாட்டீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவிலும் (அவ்வூர்ப்பக்கம் செல்கின்றீர்கள்). இதனைக்கொண்டு நீங்கள் நல்லறிவு பெறமாட்டீர்களா?
139
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
IFT
திண்ணமாக, யூனுஸும் இறைத்தூதர்களுள் ஒருவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக யூனுஸும் (நம் தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
140
اِذْ اَبَقَ اِلَی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
அப்துல் ஹமீது பாகவி
(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
IFT
அவர் ஒரு நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைத்துப் பாருங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிரப்பப்பட்ட கப்பலின் பக்கம் அவர் வெருண்டோடிய சமயத்தில் (அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதில் அவர் ஏறிக்கொண்டார்).
141
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِیْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
அப்துல் ஹமீது பாகவி
அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.
IFT
பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் தோற்றுப் போனார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுப்போட்டனர், (அதில் அவர் பெயர்வரவே கடலில் எறியப்பட வேண்டிய) தோல்வியுற்றோரில் அவர் ஆகிவிட்டார்.
142
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.
IFT
இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது; அவரோ பழிப்புக்குரியவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இவரை அவர்கள் கடலில் எறியவே) அவர் நிந்தனைக்கு ஆளானவராகயிருக்க, (ஒரு) மீன் அவரை விழுங்கிற்று.
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
IFT
மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமைக்காக படைப்பினங்களாகிய) அவர்கள் எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில், அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
145
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِیْمٌ ۟ۚ
முஹம்மது ஜான்
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
IFT
இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்தநிலையில் வெட்டவெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
IFT
நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறிந்து கொள்வீராக! நிச்சயமாக இவர்கள் தங்கள் பொய்யினால் கூறுகின்றனர்,
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
IFT
அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் (என்று)_ நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
153
اَصْطَفَی الْبَنَاتِ عَلَی الْبَنِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
அப்துல் ஹமீது பாகவி
(அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?
IFT
ஆண்மக்களை விட்டு விட்டு பெண்மக்களை அல்லாஹ் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதிலும்) ஆண்(மக்)களைவிட பெண்(மக்)களை அவன் தெரிவு செய்து கொண்டானா?
154
مَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
முஹம்மது ஜான்
உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்?
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எப்படிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இதைப் பற்றி) எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?
155
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் இதை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா?
IFT
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (என்ன கூறுகிறீர்களென்று) சிந்திக்கமாட்டீர்களா?
156
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
IFT
அல்லது (உங்களின் வாதங்களுக்கு) தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது உங்களுக்கு (இதற்காக ஏதேனும்) தெளிவான சான்று உண்டா?
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.
IFT
அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) இவர்கள், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சா வழி உறவை (கற்பனையாக) ஆக்குகின்றனர், ஜின்கள் (தண்டனைக்காக) நிச்சயமாக தாம் (அல்லாஹ்விடம்) கொண்டுவரப்படுபவர்கள் என்று திட்டமாக அறிந்தும் இருகின்றனர்.
159
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
IFT
(மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்:) அல்லாஹ் தூய்மை வாய்ந்தவன், அந்தத் தன்மைகளை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் வர்ணிக்கின்றவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
அல்லாஹ்வின் கலப்பற்ற நம்பிக்கையுள்ள அடியார்களைத் தவிர, (அவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.)
IFT
அதாவது, அவனுடைய வாய்மையான அடியார்களைத் தவிர மற்றவர்கள் (அவனைக் குறித்து) கற்பிக்கின்ற தன்மைகளை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் தண்டனைக்குரியவர்களாவர்).
161
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
IFT
ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் ,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவைகளும்,
162
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
IFT
அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒன்று சேர்ந்தபோதிலும் எவரையும் அல்லாஹ்வாகிய) அவனுக்கு விரோதமாக நீங்கள் வழி கெடுத்து விடுபவர்களல்லர்_
163
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
முஹம்மது ஜான்
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
அப்துல் ஹமீது பாகவி
நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.
IFT
ஆனால், கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் எரிந்து கரிந்து போகக் கூடியவனைத்தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகத்தில் புக இருக்கிறானே அவனை தவிர.
164
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
முஹம்மது ஜான்
(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;
IFT
மேலும், எங்களுடைய நிலைமை என்னவெனில், எங்களில் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடம் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மலக்குகளாகிய) எங்களில் எவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் (வானத்தில்) அவருக்கில்லாமலில்லை (என்றும்),
165
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம்.
IFT
மேலும், திண்ணமாக, நாங்களே அணிவகுத்து நின்று பணிபுரிபவர்களாய் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே இருக்கின்றோம் (என்றும்),
166
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
முஹம்மது ஜான்
“மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கிறோம்.
IFT
இன்னும் திண்ணமாக, நாங்களே துதி செய்பவர்களாய் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாங்கள் (அவனைப் புகழ்ந்து) துதிசெய்பவர்களாகவும் இருக்கிறோம் (என்றும் மலக்குகள் கூறுகிறார்கள்).
“முன்னுள்ளோர்களிடமிருந்து, (அல்லாஹ்வை) நினைவூட்டும் (வேதம்) ஏதேனுமொன்று நிச்சயமாக எங்களிடமிருந்திருந்தால்_
169
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்'' என்றார்கள்.
IFT
நாங்களும் அல்லாஹ்வின் வாய்மை மிக்க அடியார்களாக விளங்கி இருப்போம்” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வையே வணங்குவதற்கென) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான அல்லாஹ்வுடைய அடியார்களாக இருந்திருப்போம்.
170
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
IFT
ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது (இவ்வேதம் வரவே,) இதை அவர்கள் நிராகரித்துவிட்டனர், அவர்கள் அறிந்துகொள்வார்கள்.