நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.
IFT
நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாம் (இவ்வேதத்தின் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.
4
فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
IFT
அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது.
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).
IFT
நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் இரட்சகன் (என்பதை) நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் (அறிவீர்கள்).
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர்களின் இறைவனுமாவான்.
IFT
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே இறக்குமாறும் செய்கிறான், (அவனே) உங்களின் இரட்சகனும், முன்னோர்களான உங்கள் மூதாதையரின் இரட்சகனுமாவான்.
9
بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!
IFT
(ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
“எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்).
IFT
(அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! நீ எங்களைவிட்டும் இவ்வேதனையை நீக்கி விடுவாயாக, நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசங்கொண்டவர்களாக இருக்கின்றோம்” (என்று அந்நாளில் மனிதர்கள், அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்).
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.
IFT
இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (சத்தியத்தை) விளக்குபவரான (நம்முடைய) தூதர் (இதற்குமுன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
அப்துல் ஹமீது பாகவி
(மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்.
IFT
நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவ்வேதனயை(ப் பின்னும்) சிறிது (காலத்திற்கு) நாம் நீக்குவோராய் இருக்கிறோம், (எனினும்) நிச்சயமாக நீங்கள், (நிராகரிப்பின்பாலே) மீளக்கூடியவர்களாக இருக்கிறீர்கள்.
அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்.)
IFT
மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வின் (கட்டளைகளுக்குக் கீழ்ப் படிவதை விட்டுவிடுவதன் மூலம் அவன்) மீது உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளாதீர்கள், நிச்சயமாக நான், உங்களிடம் தெளிவான ஒரு சான்றைக் கொண்டுவந்திருக்கிறேன்” (என்றும் கூறினார்.)
அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்.
IFT
நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னை நீங்கள் கல்லாலெறிந்து (கொன்று) விடுவதைவிட்டும் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனுமாகியவனிடம் நிச்சயமாக, நான் பாதுகாவல் தேடிக்கொண்டுவிட்டேன்” (என்றும்),
21
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
முஹம்மது ஜான்
“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி),
IFT
நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நீங்கள் என்னை (அல்லாஹ்வின்) நபியென) நம்பிக்கைக் கொள்ளவில்லையாயின், என்னை விட்டு நீங்கிவிடுங்கள் (என்றும் கூறினார்.)
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
IFT
இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தவராகவே இருக்கிறார்கள் என தன் இரட்சகனை அவர் அழைத்துப் பிரார்த்தித்தார்.
“என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
IFT
(பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்,) “நீர் (இஸ்ராயீலீன் மக்களாகிய) என்னுடைய அடியார்களை (அழைத்து)க்கொண்டு இரவில் செல்வீராக, நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்_
“அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்.)
IFT
கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும், (பிளந்த) அக்கடலை பிளவுபட்டதாக விட்டு (நீங்கள் அதை கடந்து) விடுங்கள், நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராக இருக்கிறார்கள் (என்று கூறி, அவ்விதமே மூழ்கடித்தான்).
25
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
முஹம்மது ஜான்
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.
IFT
எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எத்தனை(யோ) தோட்டங்களையும், நீரூற்றுகளையும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர்.
26
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
IFT
வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (எத்தனையோ) விவசாய (நில)ங்களையும், (அழகுமிகுந்த) மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
27
وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).
IFT
அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எதில் இன்பம் அனுபவித்துக்கொண்டிருந்தனரோ அத்தகைய (எத்தனையோ) சுகானுபவப் பொருளையும் (விட்டுச் சென்றனர்).
28
كَذٰلِكَ ۫ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
முஹம்மது ஜான்
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.
IFT
இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே_(நடந்தேறியது), அவற்றிக்கு வேறு சமூகத்தாரையும் அனந்தரக்காரர்களாக்கினோம்.
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.
IFT
மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எதில் தெளிவான சோதனை இருந்ததோ அத்தகைய அத்தாட்சிகளை (மன்னு, ஸல்வா என்னும் உணவை இறக்கிவைத்தது, கடலை பிளக்கவைத்தது போன்றவற்றை) அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
34
اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்.
IFT
இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் மிகச் சிறந்தவர்களா? அல்லது “துப்பஃஉ“ சமூகத்தாரும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? அவர்களை(யும்) நாம் அழித்துவிட்டோம், (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
IFT
அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய (உதவியும் புரிந்து) பயனும் அளிக்கமாட்டான், அன்றியும், அவர்கள் (மற்றவர்களிடமிருந்து) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
IFT
ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும்) அல்லாஹ் அருள் புரிந்தோர் தவிர (அவர்களுக்கு சகல உதவியும் கிடைக்கும்) நிச்சயமாக அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
43
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்
IFT
‘ஸக்கூம்’ மரம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளிமரம்.
44
طَعَامُ الْاَثِیْمِ ۟
முஹம்மது ஜான்
பாவிகளுக்குரிய உணவு;
அப்துல் ஹமீது பாகவி
பாவியின் உணவு.
IFT
பாவியின் உணவாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதுவே) பாவிகளின் ஆகாரமாகும்.
45
كَالْمُهْلِ ۛۚ یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
IFT
தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒருவரையொருவர் முன் நோக்கியவர்களாக மெல்லியதும், திடமானதுமான பட்டாடைகளை அணிந்து கொண்டிருப்பார்கள்.
54
كَذٰلِكَ ۫ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ
முஹம்மது ஜான்
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.
IFT
இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே (அது நடைபெறும்), மேலும், “ஹூருல்ஈன்” (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்போம்.
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
IFT
ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முந்திய மரணத்தைத் தவிர, அவற்றில் அவர்கள் (வேறு யாதொரு) மரணத்தையும் சுவைக்கமாட்டார்கள், மேலும், நரக வேதனையை விட்டும் அவர்களை (அல்லாஹ்வாகிய) அவன் காத்துக்கொண்டான்.
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்.
IFT
(நபியே!) இவர்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (வேதமாகிய) இதனை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கி வைத்திருப்பதெல்லாம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.
59
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.
IFT
இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நல்லுபதேசம் பெறாவிடில், அதனால் ஏற்படும் தீயமுடிவை) நீர் எதிர்பார்த்திரும், நிச்சயமாக, அவர்களும் எதிர்ப்பார்க்கக் கூடியவர்கள்தாம்.