(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
IFT
(இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓட்டகத்தை – அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது? என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்க மாட்டார்களா?
18
وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ
முஹம்மது ஜான்
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
IFT
மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்தின் பால்_ அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? (என்பதையும்)
19
وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ
முஹம்மது ஜான்
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
IFT
மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அசையாது ஸ்திரப்படுத்தப்பட்ட) மலைகள் பால் அவை எவ்வாறு நடப்பட்டுள்ளன? (என்பதையும்)-
20
وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟ۥ
முஹம்மது ஜான்
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
IFT
மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அவர்கள் வசிக்கும்) பூமியின் பால் - அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் அவர்கள் கவனிக்கமாட்டார்களா?)
21
فَذَكِّرْ ؕ۫ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
IFT
சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நபியே! நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தாம்.
22
لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ
முஹம்மது ஜான்
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
IFT
அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறே நடக்கும்படி அவர்கள் மீது நீர் பொறுப்புச்சாட்டப்பட்டவரல்லர்.
23
اِلَّا مَنْ تَوَلّٰی وَكَفَرَ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
அப்துல் ஹமீது பாகவி
எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
IFT
ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆயினும் எவர் புறக்கணித்து நிராகரிக்கின்றாரோ –
24
فَیُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ۟ؕ
முஹம்மது ஜான்
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
IFT
அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையாக வேதனை செய்வான்.
25
اِنَّ اِلَیْنَاۤ اِیَابَهُمْ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
IFT
திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்களின் மீட்சி நம் பக்கமேயாகும்.
26
ثُمَّ اِنَّ عَلَیْنَا حِسَابَهُمْ ۟۠
முஹம்மது ஜான்
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
IFT
பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பது நம்மீதேயாகும்.