ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

📅 2023-03-31✍ Aasif
நோன்பு
🗂 நோன்பு
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣8️⃣ : ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..? 📝 பதில் : மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது. ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது : مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ، و مَنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ “(வேண்டுமென்றே இல்லாமல் எதேச்சையாக) ஒருவர் வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க தேவையில்லை. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க வேண்டும்.” பார்க்க : [முஸ்னத் அஹ்மத் 10463, அபூதாவூத் 2380, திர்மிதீ 720 || இமாம் அல்பானி رحمه الله அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என இர்வாவுல் ஙலீல் (4/51)-ல் கூறியுள்ளார்கள்]. கேள்வி 1️⃣9️⃣ : ரமழானின் பகல் நேரத்தில் நீச்சல் மற்றும் Diving செய்வதன் மார்க்கச் சட்டம் என்ன..? 📝 பதில் : (அவ்வாறு செய்யலாம்), ஆனாலும் தண்ணீர் அவரது தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியமானது. குறித்த நபர் கடலில் குளிக்கும்போது கடல்நீர் உப்பாக இருந்தால், அது தொண்டையை சென்றடைய வாய்ப்புள்ளது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் கடலில் நீந்தியுள்ளேன்; நாம் கவனிக்காத போது கடல்நீர் நம் தொண்டையை அடைந்துவிடும். எனவேதான் (நோன்பு நோற்ற நிலையில்) கடலில் குளிப்பதை தவிர்க்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். கடல்நீர் உப்பாக இல்லாவிட்டால், அது நம் தொண்டையை அடையாது, எனினும் சிலபோது அவ்வாறு அடைய வாய்ப்புள்ளது. 📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87-11/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு