ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

📅 2023-03-31✍ Aasif
நோன்பு
🗂 நோன்பு
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣0️⃣ : நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.? 📝பதில் : அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்). கேள்வி 2️⃣1️⃣ : மூச்சுவிடுதலில் சிரமப்படும் நபர்கள் நோன்பின்போது ஆஸ்துமா குழாயை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.? 📝பதில் : அது ஒரு உணவாகவோ/ பானமாகவோ கருதப்படாது. ஆகையால், இது நோன்பை முறிக்குமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87-12/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு