எந்தவித காரணமுமின்றி ரமழானின் ஒரு நோன்பை விட்டால்? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்

📅 2020-05-03✍ Naeem
நோன்பு✍ உஸைமீன்
🗂 நோன்பு
👤 உஸைமீன்
கேள்வி : எந்தவித காரணங்களுமில்லாமல் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை விட்ட காரணத்தினால் அதற்காக ஒரு நோன்பு நோற்றால் போதுமானதா அல்லது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டுமா? பதில் : ஏன் அவர் நோன்பை விட்டார் என்பது தெரியாது. நோன்பு காலத்தில் பகல்பொழுதில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமான விடயம் என்பது அறிந்தநிலையில்; மனைவியுடனான உடலுறவினால் நோன்பை விட்டார் என்றிருந்தால், அவர்மீது (கீழ்வரும் ஒன்றில்) குற்றப்பரிகாரம் கடமையாகின்றது, – ஒரு அடிமையை விடுதலை செய்வது. (இது முடியவில்லை என்றால்) – தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது. (இதுவும் முடியவில்லை என்றால்) – அறுபது (60) ஏழைகளுக்கு உணவு கொடுத்தல். உடலுறவு என்ற காரணத்தினால் இல்லாமல் நோன்பை விட்டிருந்தால்; அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்பதுடன் அவர் விட்ட அந்த நோன்பை வேறுநாளில் கழா செய்யவேண்டியது அவர் மீது கடமையாகின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
மூலம்: https://islamqatamil.com/kaffarah-leaving-a-fast/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு