திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது

📅 2020-03-31✍ Naeem
திருமண சட்டம்✍ அல்பானி
🗂 திருமண சட்டம்
👤 அல்பானி
திருமணத்திற்கு பின் முதல் முறை, கணவர் தாம்பத்ய உறவை துவங்கும்போதோ , அல்லது அதற்க்கு முன்னரோ அவளின் முன்தலையில் கை வைத்து அல்லாஹ்வின் பேரைக்கூறி , நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை ஓதி பரக்கத் தேடவேண்டும் : நபி صلى الله عليه و سلم கூறினார்கள் : உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ , அவரின் நெற்றிக்கு மேல் கைவைத்து , அல்லாஹ்வின் பெயரை கூறி , பரகத் கேட்கட்டும் , அவர் கூறட்டும் . اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஃ கைரஹா வா ஃ கைரமா ஜபல்தஹா அலைஹி வ அஊதுபிக மின் ஷர்ரிஹா வ மின் ஷர்ரி மா ஜபல்தஹா அலைஹி யா அல்லாஹ் உன்னிடத்தில் நான் அவளிடத்தில் உள்ள நன்மைகளையும் , அவளை நீ எந்த நன்மைகளுடன் படைத்தாயோ அந்த நன்மைகளையும் கேட்கிறேன் மேலும் உன்னிடத்தில் நான் அவளின் தீங்குகளை விட்டும் , அவளை நீ எந்த தீங்குகளை கொண்டு படைத்தாயோ அந்த தீங்குகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் ஒருவர் ஒட்டகம் வாங்கினால் அதன் திமிலை பிடித்து அவ்வாறே கூறட்டும் . [ அபூ தாவூத் , இப்னு மாஜா , அல்ஹாகிம் , பைஹகீ , அபூ ய ‘ லா ஆகியோர் ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கின்றனர் , ஹாகிம் இதை ஸஹீஹ் என்று கூறினார் , தஹபியும் அவ்வாறே கூறினார் , அல்இராகி இதை வலுவான ஸனத் என்றார் ] – இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி
மூலம்: https://islamqatamil.com/marriage-etiquette-dua/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு