Dr. ஷேக் முபாரக் மதனி

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைக் கொல்லலாமா?

பாம்பு கொல்லுதல் வீடுகள் பாதுகாப்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைக் கொல்லலாமா?
பதில்
பதில்:

பாம்புகளைக் கொல்வது தொடர்பாக ஹதீஸ்களில் இரு வேறுபட்ட செய்திகள் உள்ளன. புகாரி மற்றும் அபூதாவூதில் இடம்பெறும் பொதுவான ஹதீஸ்களில், "அனைத்துப் பாம்புகளையும் கொன்றுவிடுங்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். எனவே, வீட்டுக்கு வெளியே, தோட்டங்களில் அல்லது பாதைகளில் காணப்படக்கூடிய பாம்புகளைக் கொல்வது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, வீடுகளுக்குள் வரக்கூடிய பாம்புகளைப் பொறுத்தவரையில், "வால் குட்டையான மற்றும் முதுகில் இரண்டு கோடுகள் உள்ள பாம்புகளைத் தவிர, ஏனைய பாம்புகளை உடனடியாகக் கொல்லாமல் மூன்று நாட்கள் எச்சரிக்கை செய்து வெளியேற அவகாசம் அளிக்க வேண்டும்" என்ற ஹதீஸ்களும் முஸ்லிம் போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளன. வீடுகளுக்குள் வரும் பாம்புகளை எச்சரிக்கும் இந்தச் சட்டம் மதீனா நகரின் வீடுகளுக்கு மட்டுமானதா அல்லது உலகெங்கும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பொதுவானதா என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

இருப்பினும், தற்கால அறிஞர்களின் தீர்ப்பின்படி, வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இருப்பின், குடும்பத்தாரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்தப் பாம்புகளை ஒருவர் கொன்றுவிடுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. இதற்காக அவர் பாவியாக மாட்டார்.

← முந்தையஅடுதது →