Dr. ஷேக் முபாரக் மதனி

ஆண்கள் சட்டை அணியாமல் தொழலாமா?

தொழுகை ஆடை அவ்ரத் சட்டை

← முந்தையஅடுதது →
கேள்வி
ஆண்கள் சட்டை அணியாமல் தொழலாமா?
பதில்
பதில்:

தொழுகைக்குச் செல்லும்போது மனிதன் தன்னை ஆடைகளால் அழகாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்று அல்குர்ஆன் (7:31) கட்டளையிடுகிறது. ஆணின் அவ்ரத் என்பது தொப்புளிலிருந்து முழங்கால் வரை உள்ள பகுதியாகும். இந்தப் பகுதியை மறைப்பது தொழுகை நிறைவேறுவதற்கான கட்டாய நிபந்தனையாகும். இந்தப் பகுதி திறந்த நிலையில் ஒருவர் தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதேநேரத்தில், போதிய ஆடைகள் இருக்கும்போது வெறுமனே தொப்புளிலிருந்து முழங்கால் வரை மட்டும் மறைத்துக்கொண்டு, சட்டை அணியாமல் தொழுவது பொருத்தமற்ற செயலாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்களில் எவரும் தமது தோள்புஜங்களில் (Shoulders) எதுவும் இல்லாத நிலையில் தொழ வேண்டாம்" என்று தடுத்துள்ளார்கள். எனவே, குறைந்தபட்சம் தோள்பட்டைகளை மறைத்துக் கொண்டாவது தொழ வேண்டும்.

இறைவனுக்கு முன்னால் நிற்கிறோம் என்ற கண்ணியத்தையும் மரியாதையையும் உள்ளத்தில் கொண்டு, ஒரு மனிதருக்கு முன்னால் செல்லும்போது எப்படி நம்மை அலங்கரிப்போமோ, அதைவிடச் சிறப்பாக இறைவனுக்கு முன்னால் முறையான ஆடைகளை அணிந்து தொழுவதே இஸ்லாமியச் சட்டத்தின் முழுமையான வழிகாட்டலாகும்.

← முந்தையஅடுதது →