ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பெரும்பாலான ஷாபிஈ மத்ஹபினர் பின்பற்றும் அகீதா எது? இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் தூய அகீதாவை அவர்கள் பின்பற்றுகிறார்களா?

அல்லாஹ் ஷாபிஈ மத்ஹப் அஷ்அரி மாத்துரீதி

← முந்தையஅடுதது →
கேள்வி
பெரும்பாலான ஷாபிஈ மத்ஹபினர் பின்பற்றும் அகீதா எது? இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் தூய அகீதாவை அவர்கள் பின்பற்றுகிறார்களா?
பதில்
பதில்:

இமாம் ஷாபியுடைய அகீதாவை அவர்கள் சொல்கிறார்களா இல்லையா என்று கேட்டால், எப்பொழுதுமே ஷாபி மத்ஹபை சேர்ந்தவர்கள், பெரும்பாலும் மிகப்பெரிய அறிஞர்களாக இருந்தால் ஷாபியுடைய அகீதாவை முழுமையாக ரிசர்ச் பண்ணியிருப்பார்கள். ஆனால் பொதுமக்களிடம் சாதாரணமாகப் பார்க்கலாம், "நாங்கள் மத்ஹபில் ஷாபி" என்று சொன்னாலே அவர்களுடைய டோட்டல் சப்ஜெக்ட் அதுவாகவே இருக்கும் (அதேபோல் ஹனபி மக்கள் "நாங்கள் அபூ ஹனீபா, ஹனபி" என்று சொல்வார்கள்). ஆனால், ஷாபியாக்கள் பெரும்பாலும் அகீதாவில் அஷ்அரியாவாகவே இருப்பார்கள். அகீதா இமாம் யார் அவர்களுக்கு என்று கேட்டால் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி. நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க, ஷாபி மத்ஹபினர் பெரும்பாலும் அகீதாவில் அபுல் ஹஸன் அல்-அஷ்அரியையே பின்பற்றுவார்கள் (அஷ்அரி அகீதா).

உதாரணமாக, சவுதி அரேபியா மக்காவில் நிற்கக்கூடிய பல அறிஞர்கள், மத்ஹபில் ஷாபியாக இருந்து சுபுஹுக்கு குனூத் கைகளைத் தூக்குவார்கள், ஆனால் அகீதாவில் சலஃபி அகீதாவில் மிகச் சரியான அகீதாவில் இருப்பார்கள். அப்படியென்றால் அவங்கதான் உண்மையிலேயே ஷாபி இமாமை சரியாக விளங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம் (ஃபிக்ஹ் மற்றும் அகீதா இரண்டிலுமே). ஆனால் நமது நாடுகளைப் பார்ப்பது அப்படி இல்லை. மத்ஹப் எடுத்துக்கொண்டால் ஹனபியாக இருப்பார்கள். ஆனால் அகீதாவில் அபூ ஹனீபாவைப் பின்பற்ற மாட்டார்கள்; அவர்கள் அபு மன்சூர் அல்-மாத்துரீதி என்பவரைப் பின்பற்றுவார்கள் (மாத்துரீதி அகீதா).

நமது ஊர் நாடுகளில் உள்ள மக்கள் எப்படி இருப்பார்கள் என்றால் மூன்று இமாம்களைப் பின்பற்றுவார்கள். மத்ஹபில் ஷாபி, அகீதாவில் அபுல் ஹஸன் அஷ்அரி, தரீக்காவில் காதிரி (அப்துல் காதிர் ஜீலானி) அல்லது நக்ஷபந்தி அல்லது சிஷ்தியா. தரீக்காவில் காதிரி என்றால் அது பெரும்பாலும் ஷாபியாக இருக்கும். வேறு சில தரீக்காக்கள் ஹனபியாக இருக்கும். இப்படி மூன்று இமாம்கள் ஒரே நேரத்தில் இருப்பார்கள். தரீக்காவில் சுலூக், இது மத்ஹப், அது அகீதா என மூன்றாகப் பிரிந்திருப்பார்கள். ஆனால் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தினர், சலஃபி கொள்கை உள்ள மக்கள் எப்படி இமாம்களைப் பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் குர்ஆன் சுன்னாவை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடிஞ்ச அளவுக்கு பாடுபட்டார்கள். அவர்களிடம் உள்ள குர்ஆன் சுன்னாவுக்கு உடன்பட்ட கருத்தை நாம் எடுப்போம். அது அகீதாவாக இருந்தாலும் சரி, ஃபிக்ஹ் ஆக இருந்தாலும் சரி, சுலூக் (தர்பியா, தஸ்கியா) ஆக இருந்தாலும் சரி. ஆனால் இதில் தப்பிய ஒரு மத்ஹப் ஹம்பலி மத்ஹப். ஏனென்றால், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களுடைய போராட்டத்தில் குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா? போன்ற அகீதாவுடைய பகுதி மிகவும் ஹைலைட்டாகப் பேசப்பட்டது. அதனால்தான் அவருடைய சலஃபி அகீதாவையும் சேர்த்துப் பின்பற்றுபவர்களாக அங்கேயுள்ள மக்களை நாம் பார்க்கிறோம்.

← முந்தையஅடுதது →