இமாம் அபூ ஹனீபா அவர்கள் நேரடியாக எழுதிய நூல் என்று எந்த நூலும் இல்லை. இதை வைத்து சிலர் "இமாம் அபூ ஹனீபா நூல் எழுதவில்லை பார்த்தீர்களா, ஒரு நூல் கூட அவருக்கு நீங்கள் காண முடியாது" என்று விமர்சிப்பார்கள். ஆனால், ரசூலுல்லாஹ் எழுதிய புக்கின் பெயர் என்ன? அபூபக்கர் (ரழி) எழுதிய புக்கின் பெயர் என்ன? எந்த நபித்தோழரிடம் புக் இருந்தது? ஒருவரை விமர்சிக்க முன்பு அந்த காலத்தின் இயல்பை முதலாவது விளங்க வேண்டும். இமாம் அபூ ஹனீபா அவர்கள் ஹிஜ்ரி 100-க்கு முன்பு பிறந்தவர்கள். இமாம் ஷாபிஈ 150-ல் பிறந்தவர்கள். அப்போ அந்த காலத்தில் நூல் எழுதுவது என்பது குறைவு. எழுதினாலும் கொஞ்சம் பேர்தான் எழுதினார்கள்.
இமாம் அபூ ஹனீபாவைப் பற்றி வந்த செய்திகள் நிறைய இருக்கின்றன. ரசூலுல்லாஹ்ட்ட இருந்து எப்படி நிறைய செய்திகள் வந்திருக்கின்றதோ, அதேபோல இமாம் அபூ ஹனீபாவுடைய மாணவர்கள் பிற்காலத்தில் "முஸ்னத் அபீ ஹனீபா" என்று ஒரு புக் போட்டார்கள். இமாம் அபூ ஹனீபா மத்ஹபில் பெரிய ஒரு அறிஞராக இருந்தாலும், அவர் ஹதீஸ் அறிவித்தால் ஹதீஸ் கலை அறிஞர்களின் பார்வையில் அது ழயீஃபான (பலவீனமான) ஹதீஸாகவே இருக்கும். ஏன்? அவர் நம்பகத்தன்மையில் பலவீனமானவர் அல்ல; ஆனால் மனனத்தில் (Hifz) அவர் பலவீனமானவர். அதனால், முஸ்னத் அபீ ஹனீபா என்ற தொகுப்பில் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை இமாம் அபூ ஹனீபாவில் சென்று முடிந்தால் அது பலவீனமாகிவிடும். அந்த ஹதீஸ் ஸஹீஹ் ஆக வேண்டும் என்றால், அபூ ஹனீபாவைப் போல வேறு யாரும் அதனை அறிவித்திருக்க வேண்டும்.
இமாம் அபூ ஹனீபாவுடைய புத்தகத்தில் எல்லாமே பலவீனம் என்று அர்த்தமல்ல; அங்கே ஸஹீஹான ஹதீஸ்களும் நிச்சயமாக இருக்கும். ஆனால் அவர் மட்டும்தான் தனித்து அறிவித்திருந்தால் அது பலவீனமாகிவிடும். ஆனால் பெரும்பாலும் இமாம் அபூ ஹனீபா மட்டும் தனித்து அறிவித்த ஹதீஸ்கள் இல்லை என்பதுதான் விஷயம்.