ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தங்கத்தின் விலை உயர்வு அல்லது மார்க்கெட் சரிவு காரணமாக, ஸகாத் கொடுக்க வேண்டிய தங்கம்/நகைகளை தாமதித்து விற்று ஸகாத் கொடுக

ஸகாத் தங்கம் விலை வட்டி தாமதம்

← முந்தையஅடுதது →
கேள்வி
தங்கத்தின் விலை உயர்வு அல்லது மார்க்கெட் சரிவு காரணமாக, ஸகாத் கொடுக்க வேண்டிய தங்கம்/நகைகளை தாமதித்து விற்று ஸகாத் கொடுக்கலாமா?
பதில்
பதில்:

ஸகாத் என்பது தொழுகையைப் போன்று உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயக் கடமையாகும். எனினும், ஒருவரிடம் ஸகாத் கொடுப்பதற்குத் தேவையான ரொக்கப் பணம் கையில் இல்லை, தன்னிடம் உள்ள தங்கம் அல்லது நகையை விற்றுத்தான் அவர் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்த நிலை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் மார்க்கெட்டில் தங்கத்தின் விலை மிகவும் சரிந்து காணப்பட்டு, இப்போது நகையை விற்றால் பெருமளவு நஷ்டம் ஏற்படும், அல்லது நகையின் டிசைன் உடைந்து அதன் முழுப் பெறுமதியும் வீணாகிவிடும் என்ற அதியுச்ச நஷ்ட நிலை இருந்தால், அவர் ஸகாத்தை தாமதப்படுத்த மார்க்கத்தில் சலுகை உள்ளது.

ஒரு வருடம் கழித்தோ அல்லது இரண்டு, மூன்று வருடங்கள் கழித்தோ மார்க்கெட் நிலைமை சீரான பின் அதை விற்று, எத்தனை வருடங்கள் தாமதப்படுத்தினாரோ அத்தனை வருடங்களுக்கும் சேர்த்து (உதாரணமாக 3 வருடம் தாமதப்படுத்தினால் 3 வருடத்திற்கான ஸகாத்தை) அவர் தவறாமல் கொடுத்தாக வேண்டும். மார்க்கெட் சரிவு காரணமாக பெரிய நஷ்டம் ஏற்படும் போது இஸ்லாம் எல்லாவற்றையும் உடனே விற்று ஸகாத் கொடுக்குமாறு யாரையும் சிரமப்படுத்தவில்லை.

ஆனால், மிகச் சிறிய அளவு நஷ்டம் (உதாரணமாக ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் நஷ்டம்) மட்டுமே ஏற்படும் என்றால், அதை ஒரு காரணமாகக் காட்டி ஸகாத்தைத் தாமதப்படுத்தக் கூடாது. அந்தச் சிறிய நஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு உடனடியாக நகையை விற்றாவது ஸகாத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதே மார்க்கச் சட்டமாகும்.

← முந்தையஅடுதது →