கேள்வி
ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றாத, பள்ளியுடன் தொடர்பில்லாத ஒருவர் ரமழானில் பள்ளிக்கு நோன்புக் கஞ்சி தந்தால் அதை எடுக்கலாமா?
பதில்
பதில்:
மார்க்க ரீதியாக காஃபிரான ஒருவர் பள்ளிக்கு உதவி செய்தாலும் அதை எடுப்பதற்கு எவ்விதத் தடையுமில்லை. அதுபோல, தொழுகையை நிறைவேற்றாத ஒரு முஸ்லிம் பள்ளிக்குக் கஞ்சி தந்தால் அதனை மார்க்க ரீதியாக எடுப்பதில் தடை இல்லை.
ஆனால், இதை எடுப்பதன் மூலம் பள்ளியின் நிர்வாக ரீதியான விஷயங்களில் அவர் செல்வாக்கு செலுத்துவாரோ அல்லது ஏதேனும் தர்மசங்கடங்களை ஏற்படுத்துவாரோ என்பதை மட்டும் பள்ளி நிர்வாகம் கவனித்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, அவர் தருவதைப் பெற்றுக்கொள்வதில் மார்க்க ரீதியாகத் தடை ஏதுமில்லை.