பொதுவாக ஒரு ஜனாஸாவுக்குத் தொழ வாய்ப்பில்லாதவர்கள் பின்னர் பள்ளியிலோ அல்லது அடக்கப்பட்ட பின் கப்ரடியோ பலமுறை ஜனாஸாத் தொழுகை நடத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதேயாகும்.
ஆனால், ஜமாஅத் வேறுபாடு மற்றும் மத்ஹப் வெறியைக் காரணம் காட்டி, "ஜமாஅத்தை சாராதவர்கள் ஒரு முறை, ஹனபி மத்ஹபினர் ஒரு முறை" எனப் பிரிந்து நின்று தொழுவிப்பது மார்க்கத்தில் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு பித்அத்தான (மார்க்கத்திற்கு முரணான) செயலாகும். ஜனாஸாத் தொழுகை என்பது குர்ஆன், சுன்னா அடிப்படையில் ஒரே முறையாகத்தான் நிறைவேற்றப்பட வேண்டும். குர்ஆன், சுன்னா அடிப்படையில் தொழுவிப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் முறையாகத் தொழுவிக்க வேண்டும். அதன் பின் மத்ஹப் வெறியர்கள் பிரிந்து நின்று தொழுதால் அது அவர்களுடைய குற்றமாகும். இதற்காக, குர்ஆன், சுன்னா வழியில் நடப்பவர்கள் ஜனாஸாத் தொழுகையை விட்டுவிட்டு ஒதுங்க வேண்டிய அவசியமில்லை.