ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

குர்ஆன், சுன்னாவை பின்பற்றும் மக்கள் மத்தியில் ஏன் அதிக பிளவுகள் காணப்படுகின்றன?

குர்ஆன் சுன்னா தொழுகை பிளவு ஒற்றுமை

← முந்தையஅடுதது →
கேள்வி
குர்ஆன், சுன்னாவை பின்பற்றும் மக்கள் மத்தியில் ஏன் அதிக பிளவுகள் காணப்படுகின்றன?
பதில்
பதில்:

குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றக்கூடியவர்களுக்கு மத்தியில் பிளவு இருக்கிறது என்று சொன்னால் அது தவறான புரிதல். குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றக்கூடியவர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பிளவுதான் வரும்: அது சொந்தப் பிரச்சனைகள், பொறாமை, போட்டி, ஆசை, "நானா நீயா? உன் ஜமாஅத்தா என் ஜமாஅத்தா?" என்கின்ற உலக ரீதியான பிளவுகள்தான் வருமே தவிர, கொள்கை ரீதியான பிளவு வராது.

ரசூல் (ஸல்) அவர்கள் ஒருமுறை திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃபா) பசியில் இருந்த நேரத்தில் சொன்னார்கள்: "இன்றைய தினம் நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள். நாளை உங்களுக்கு வளம் பெருகும், உலகம் உங்கள் வசப்படும். அந்த நேரத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு குரோதம் வளர்த்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பீர்கள்" என்று எச்சரித்தார்கள். எனவே வளம் பெருகி, பொருளாதாரம் பெருகிற நேரத்தில் "நீயா நானா" என்ற போட்டி வரத்தான் செய்யும். குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் மக்கள் மத்தியில் ஷைத்தான் இப்படித்தான் உலக பிளவை ஏற்படுத்துவானே தவிர, கொள்கையில் பிளவை ஏற்படுத்த முடியாது.

ஒருவேளை ஒருவர் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, சுன்னாவில் ஒரு பகுதியை முற்றாக நிராகரித்தால் அல்லது குர்ஆன் சுன்னாவில் இல்லாத ஒரு புதிய அகீதாவை (பித்அத்தை) உருவாக்கினால், அவர் குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுபவர் என்ற பட்டியலிலேயே வரமாட்டார்; அவர் வழிகேட்டில் இருக்கிறார் என்று அர்த்தம். எனவே கொள்கை ரீதியான பிளவு என்பது குர்ஆன் சுன்னாவுக்கும் வழிகேட்டுக்கும் இடையில்தான் நடக்கும்.

இன்று நீங்கள் பார்க்கக்கூடிய பிளவுகள் (உதாரணமாக இலங்கையில் ACJU, SLTJ, JTJ போன்ற பெயர்களில் இயங்குவது) கொள்கைப் பிளவுகள் அல்ல. கொழும்பில் உள்ளவன் ஒரு பெயரில் அழைக்கிறான், வேறு ஊரில் உள்ளவன் இன்னொரு பெயரில் அழைக்கிறான். இருவருமே தஃவா செய்கிறார்கள். இது "நான் பெஸ்ட்டா நீ பெஸ்ட்டா" என்ற போட்டியே தவிர, ரசூல் (ஸல்) எச்சரித்த 72 கூட்ட நரகப் பிளவுகள் அல்ல. இவை மனித இயல்பால், நிர்வாகத்தால், பொருளாதாரத்தால் வரக்கூடிய சாதாரணப் பிளவுகள். இதை நாம் விகாரமாகப் பார்க்கக்கூடாது. உண்மையான பிளவு என்பது குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான கொள்கைகளை உருவாக்குவதுதான். எனவே இயக்கப் பிளவுகளை கொள்கைப் பிளவுகளாகக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

← முந்தையஅடுதது →