ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

குர்ஆன், சுன்னா அடிப்படையில் இயங்காத (பித்அத்தான) மத்ரஸாக்களுக்கு உதவிப் பணம் கொடுக்கலாமா?

மத்ரஸா பித்அத் உதவி செய்தல் ஸகாத்

← முந்தையஅடுதது →
கேள்வி
குர்ஆன், சுன்னா அடிப்படையில் இயங்காத (பித்அத்தான) மத்ரஸாக்களுக்கு உதவிப் பணம் கொடுக்கலாமா?
பதில்
பதில்:

குர்ஆன் சுன்னா அடிப்படையில் இயங்காத மதரஸாக்களைப் பொறுத்தவரைக்கும், எதற்காகக் கொடுக்கலாம், எதற்காகக் கொடுக்கக் கூடாது என்ற வரைமுறை உள்ளது.

அந்த மதரஸாவிலே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடைய உணவு விஷயங்கள், அவர்களது ஆடையோடு சம்பந்தப்பட்ட செலவீனங்கள் இருந்தால் அவைகளைக் கொடுப்பதில் மார்க்க ரீதியாக எந்தத் தடையுமில்லை. ஏனென்றால் பொதுவாக எந்தக் கொள்கையில் இருப்பவர்களுக்கும் உணவு கொடுப்பதும், ஆடை கொடுப்பதும், உலக வசதிகளை செய்து கொடுப்பதும் மார்க்கத்திற்கு முரணான காரியம் அல்ல.

ஆனால், மார்க்கத்துக்கு முரணான கொள்கை விஷயங்களுக்கு நாம் ஒருபோதும் உதவியாக இருக்கக்கூடாது. உதாரணமாக, குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான பித்அத்தான அகீதாக்களை படித்துக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு நாம் சேலரி (சம்பளம்) வழங்கினோம் என்று சொன்னால், பித்அத்தை போதிப்பதற்கான ஊக்கத்தொகையை நாங்களே கொடுக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். அதேபோல அந்த பித்அத்தான கல்வி கற்பிக்கப்படுவதற்கான கட்டிடங்களை கட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளை நாம் செய்யக் கூடாது. அது மார்க்கத்திற்கு முரண் என்று தெரிந்தும் நாம் பணம் கொடுத்து உதவுவது எங்களை குற்றவாளியாக்கிவிடும்.

அவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புப் பெறுவார்களா தண்டிக்கப்படுவார்களா என்பது வேறு விஷயம்; ஆனால் இது பித்அத் என்று தெரிந்தும் நாம் அதை வளர்ப்பதற்கு உதவி செய்தால், தீமையை வெறுக்க வேண்டிய இடத்தில் நாம் வளர்ப்பதற்கு உதவி செய்த பாவத்தில் வீழ்ந்துவிடுவோம். எனவே உணவு, உடை போன்ற பொதுவான தர்மங்களைச் செய்வதில் தவறில்லை; ஆனால் பித்அத்தை வளர்க்கும் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளுக்குத் துணைபோகக் கூடாது.

← முந்தையஅடுதது →