44- بَابُ مَا يُجْزِئُ مِنَ الْمَاءِ فِي الْوُضُوءِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ» قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ أَبَانُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ صَفِيَّةَ
AbuDawood-JawamiulKalim-.
உளூச் செய்ய போதுமான அளவு தண்ணீர். நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து (இரு கை கொள்ளளவு) தண்ணீரில் உலூச் செய்து விடுபவர்களாகவும் ஒரு ஸாவு (இரு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) தண்ணீரில் குளித்து விடுபவர்களாகவும் இருந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இதை அப்பான் அவர்கள் கதாதா வாயிலாக அறிவிக்கும் போது ஸபிய்யா அவர்களிடம் கேட்டதாக இமாம் அபூதாவூத் கூறுகிறார்கள். (குறிப்பு: முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)