1
اَلْحَآقَّةُ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமானது.
அப்துல் ஹமீது பாகவி
(நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)
IFT
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உறுதியாக நடந்தேறக்கூடியதா(ன மறுமைநாளா)னது-
2
مَا الْحَآقَّةُ ۟ۚ
முஹம்மது ஜான்
நிச்சயமானது எது?
அப்துல் ஹமீது பாகவி
அந்த உண்மை(ச் சம்பவம்) எது?
IFT
நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உறுதியாக நடந்தேறக்கூடியது என்ன?
3
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ
முஹம்மது ஜான்
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா?
IFT
நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உறுதியாக நடந்தேறக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
4
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟
முஹம்மது ஜான்
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்.
IFT
ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸமூது (கூட்டத்தினரும், ஆது) கூட்டத்தினரும் (இதயங்களைத்) திடுக்கிடச் செய்யக்கூடியதை (மறுமைநாளை)ப் பொய்யாக்கினர்.
5
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
முஹம்மது ஜான்
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
IFT
எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய) ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
6
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.
IFT
ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (ஹூது நபியின் கூட்டத்தாராகிய) ஆது, பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
7
سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ
முஹம்மது ஜான்
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.
IFT
அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி (வீசச்செய்து) இருந்தான், ஆகவே, (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை-நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர்.
8
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
அப்துல் ஹமீது பாகவி
(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா?
IFT
இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (இன்றைக்கும்) அவர்களில் எஞ்சியிருப்போரை நீர் காண்கின்றீரா?
9
وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ
முஹம்மது ஜான்
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.
IFT
ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஃபிர் அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலை கீழாய்ப் புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (இணைவைத்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்துப்) பாவச்செயலைச் செய்து வந்தார்கள்.
10
فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟
முஹம்மது ஜான்
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.
IFT
அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் தங்கள் இரட்சகனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆகையால், அவன் அவர்களை மிகக் கடுமையான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
11
اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ
முஹம்மது ஜான்
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.
IFT
வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தண்ணீர் எல்லை மீறிய(தால் பெருக்கெடுத்து ஓடிய)பொழுது, நிச்சயமாக நாம் உங்(கள் முன்னோர்)களைக் கப்பலில் ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.
12
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟
முஹம்மது ஜான்
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).
IFT
இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்காகவும், பேணிப்பாதுகாக்கும் செவி, அதனை (க்கேட்ட பின் நினைவில் வைத்து) பேணிப் பாதுகாப்பதற்காகவும் (அவ்வாறு செய்தோம்).
13
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
அப்துல் ஹமீது பாகவி
(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,
IFT
பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்-
14
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
அப்துல் ஹமீது பாகவி
பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்,
IFT
மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்,
15
فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
முஹம்மது ஜான்
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.
IFT
அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்து விடும்.
16
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்.
IFT
மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.
17
وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ
முஹம்மது ஜான்
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.
IFT
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உமதிரட்சகனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டிருப்பார்கள்.
18
یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟
முஹம்மது ஜான்
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
IFT
அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே! அந்நாளில் நீங்கள் (உங்கள் இரட்சகன் முன்) எடுத்துக் காட்டப்படுவீர்கள்; உங்களிலிருந்து மறையக்கூடியது எதுவும் (அவனுக்கு) மறைந்துவிடாது.
19
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۙ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,
IFT
அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர், தன்னுடைய பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அவர், (மற்றவர்களிடம்) வாருங்கள், என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்று (மகிழ்ச்சியுடன்) கூறுவார்.
20
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''
IFT
நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை நிச்சயமாக சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்” (என்றும் கூறுவார்)
21
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,
IFT
அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர் திருப்தியான வாழ்வில் இருப்பார்.
22
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
மேலான சொர்க்கத்தில் இருப்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர்வான சுவனத்தில் இருப்பார்.
23
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
முஹம்மது ஜான்
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.
IFT
அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் கனிகள் (அவர்களின் கைக்கெட்டும் விதமாக பறிப்பதற்கு மிக) நெருங்கியவையாக இருக்கும்.
24
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟
முஹம்மது ஜான்
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
(இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களிடம்,) “சென்று போன நாட்களில் (உலகில் மறுமைக்காக நன்மையானவற்றை) நீங்கள் முற்படுத்தி வைத்திருந்த காரணத்திற்காக, மகிழ்வோடு (இவைகளை) உண்ணுங்கள், இன்னும், அருந்துங்கள்” (என்று கூறப்படும்)
25
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬ فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
அப்துல் ஹமீது பாகவி
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.
IFT
மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன், “என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
26
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
அப்துல் ஹமீது பாகவி
மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!
IFT
என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “என்னுடைய கணக்கு என்னவென்பதை நான் அறியவில்லையே!”
27
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
முஹம்மது ஜான்
“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
அப்துல் ஹமீது பாகவி
நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!
IFT
அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நான் இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படாது) “அதுவே முடிவாக இருந்திருக்க வேண்டுமே!”
28
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
அப்துல் ஹமீது பாகவி
என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!
IFT
இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!”
29
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
அப்துல் ஹமீது பாகவி
என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).
IFT
என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய அதிகாரமும் என்னைவிட்டு அழிந்துவிட்டதே!” (என்று புலம்புவான்)
30
خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ
முஹம்மது ஜான்
“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;
IFT
(ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (வல்ல அல்லாஹ் தன் மலக்குகளுக்கு) “அவனைப் பிடியுங்கள், அப்பால் அவனுக்கு விலங்கிடுங்கள்”
31
ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ
முஹம்மது ஜான்
“பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,
IFT
பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர் நரகத்தில் அவனைத் தள்ளுங்கள்”
32
ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ
முஹம்மது ஜான்
“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்).
IFT
பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர், அதன் நீளமானது எழுபது முழமுள்ள(தாக இருக்கும் சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்றும் கூறுவான்)
33
اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவன், மகத்துவமிக்க அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளாதவனாக அவன் இருந்தான்”
34
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
முஹம்மது ஜான்
“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.
IFT
ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஏழைக்கு (தான் ஆகாரமளிக்காததுடன் பிறரையும்) ஆகாரமளிக்கும்படி அவன் தூண்டவுமில்லை”.
35
فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ
முஹம்மது ஜான்
“எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை.
IFT
எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே இன்றையத் தினம் அவனுக்கு இங்கு (உதவ) நண்பன் (எவனும்) இல்லை.
36
وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ
முஹம்மது ஜான்
“சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).
IFT
சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) “சீழ் ஜலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவுமில்லை” (என்றும் கூறப்படும்).
37
لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠
முஹம்மது ஜான்
“குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”
அப்துல் ஹமீது பாகவி
அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.
IFT
தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனைப் பாவிகளை தவிர (மற்றெவரும்) புசிக்க மாட்டார்கள்.
38
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்,)
IFT
இல்லை! நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
39
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக!
IFT
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் பார்க்காதவற்றைக் கொண்டும், (நான் சத்தியம் செய்கிறேன்).
40
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.
IFT
இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது மிக்க சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும்.
41
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
IFT
யாரோ ஒரு கவிஞனின் சொல்லல்ல. நீங்கள் குறைவாகத்தான் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே விசுவாசிக்கின்றீர்கள்.
42
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
IFT
இது யாரோ ஒரு ஜோதிடனின் சொல்லும் அல்ல. நீங்கள் குறைவாகத்தான் சிந்திக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) ஒரு குறிகாரனின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுணர்வு பெறுகின்றீர்கள்.
43
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
முஹம்மது ஜான்
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.
IFT
இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இது) இறக்கப்பட்டுள்ளதாகும்.
44
وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
அப்துல் ஹமீது பாகவி
ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்,
IFT
மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் நம் மீது சொற்களில் (நாம் சொல்லாத) சிலவற்றை இட்டுக்கட்டி(க்கூறி)யிருப்பாரானால்-
45
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,
IFT
நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக அவருடைய வலக்கரத்தை நாம் பலமாகப் பிடித்துக் கொண்டிருப்போம்.
46
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ
முஹம்மது ஜான்
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்.
IFT
பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவருடைய (இதயத்தோடு சம்பந்தப்பட்ட) உயிர் நரம்பை நாம் தறித்துவிடுவோம்.
47
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟
முஹம்மது ஜான்
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.
IFT
பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மைத்) தடுப்பவராய் இருக்க முடியாது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது, உங்களில் அவரைவிட்டும் (நாம் செய்யும் வேதனையை) தடுத்துவிடக்கூடியவர்கள் எவருமிலர்.
48
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது.
IFT
உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது பயபக்தியுடையோர்களுக்கு நல்லுபதேசமாகும்.
49
وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟
முஹம்மது ஜான்
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
IFT
உங்களில் பொய்யென வாதிடுபவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (அதனைப்) பொய்யாக்குகிறவர்களும் உங்களில் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
50
وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது.
IFT
இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது மனவருத்தத்தை அளிக்கக்கூடியதே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக இது நிராகரிப்போருக்கு கைசேதமாகும்.
51
وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟
முஹம்மது ஜான்
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
IFT
மேலும், இது முற்றிலும் உறுதியான சத்தியமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும்.
52
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
முஹம்மது ஜான்
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக!
IFT
எனவே, (நபியே) உம்முடைய மகத்தான அதிபதியின் பெயரைத் துதிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!