அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.
IFT
அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி (வீசச்செய்து) இருந்தான், ஆகவே, (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை-நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர்.
8
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
அப்துல் ஹமீது பாகவி
(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா?
IFT
இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (இன்றைக்கும்) அவர்களில் எஞ்சியிருப்போரை நீர் காண்கின்றீரா?
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.
IFT
ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஃபிர் அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலை கீழாய்ப் புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (இணைவைத்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்துப்) பாவச்செயலைச் செய்து வந்தார்கள்.
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).
IFT
இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்காகவும், பேணிப்பாதுகாக்கும் செவி, அதனை (க்கேட்ட பின் நினைவில் வைத்து) பேணிப் பாதுகாப்பதற்காகவும் (அவ்வாறு செய்தோம்).
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,
IFT
அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர், தன்னுடைய பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அவர், (மற்றவர்களிடம்) வாருங்கள், என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்று (மகிழ்ச்சியுடன்) கூறுவார்.
20
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''
IFT
நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை நிச்சயமாக சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்” (என்றும் கூறுவார்)
21
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,
IFT
அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர் திருப்தியான வாழ்வில் இருப்பார்.
22
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
மேலான சொர்க்கத்தில் இருப்பார்.
IFT
உன்னதமான சுவனத்தில்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர்வான சுவனத்தில் இருப்பார்.
23
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
முஹம்மது ஜான்
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.
IFT
அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் கனிகள் (அவர்களின் கைக்கெட்டும் விதமாக பறிப்பதற்கு மிக) நெருங்கியவையாக இருக்கும்.
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
(இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களிடம்,) “சென்று போன நாட்களில் (உலகில் மறுமைக்காக நன்மையானவற்றை) நீங்கள் முற்படுத்தி வைத்திருந்த காரணத்திற்காக, மகிழ்வோடு (இவைகளை) உண்ணுங்கள், இன்னும், அருந்துங்கள்” (என்று கூறப்படும்)
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
அப்துல் ஹமீது பாகவி
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.
IFT
மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன், “என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
26
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
அப்துல் ஹமீது பாகவி
மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!
IFT
என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “என்னுடைய கணக்கு என்னவென்பதை நான் அறியவில்லையே!”
27
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
முஹம்மது ஜான்
“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
அப்துல் ஹமீது பாகவி
நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!
IFT
அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நான் இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படாது) “அதுவே முடிவாக இருந்திருக்க வேண்டுமே!”
28
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
அப்துல் ஹமீது பாகவி
என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!
IFT
இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!”
29
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
முஹம்மது ஜான்
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
அப்துல் ஹமீது பாகவி
என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).
IFT
என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!”