உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்.
IFT
அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகன், அவன் வழியைவிட்டுத் தவறியவர் யார் என்பதை அவனே மிக அறிந்தவன், (அதுபோலவே) நேர் வழி அடைந்தோரையும் அவனே மிக அறிந்தவன்.
8
فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟
முஹம்மது ஜான்
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
IFT
எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே! உம்மைப்) பொய்யாக்கக் கூடியவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
9
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்.
IFT
நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களின் வணக்க வழிபாடுகளில் சலுகை அளித்து) நீர் தளர்த்தினால் (உமக்கு) அவர்களும் தளர்ந்து செல்வதை விரும்புகின்றனர்.
10
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
IFT
அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இழிந்தவனாக, அதிகமாக சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
11
هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்.
IFT
அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.
12
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
அப்துல் ஹமீது பாகவி
(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி;
IFT
நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நன்மையானவற்றை அதிகமாகத் தடுத்துக்கொண்டிருப்பவன், வரம்பு மீறியவன், பாவம் செய்பவன்.
13
عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட.
IFT
கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முரட்டுச் சுபாவமுடையவன், அதற்குப் பிறகு (தந்தை பெயர் தெரியா) இழி பிறப்புடையவன்.
14
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
அப்துல் ஹமீது பாகவி
ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),
IFT
அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தன்மையுடையவன்) செல்வமும், ஆண்மக்களும் உடையவனாக அவனிருக்கிறான் என்பதால், (அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்)
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.
IFT
நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் (யமன் நாட்டிலுள்ள “ஸன் ஆ”வை அடுத்துள்ள ஊர்வாசிகளில்) அத்தோட்டத்திற்குரியவர்களைச் சோதித்தவாறே (மக்கத்து காஃபிர்களான) அவர்களை நாம் சோதித்தோம், (அத்தோட்டத்திற்குரியவர்களான) அவர்கள் அதனை அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்த சமயத்தில்,
18
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
முஹம்மது ஜான்
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
அப்துல் ஹமீது பாகவி
எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.
IFT
அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“இன்ஷா அல்லாஹ்”) அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை.
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்.
IFT
ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அங்கு சென்று, அழிந்துவிட்ட நிலையில்) அதனை அவர்கள் பார்த்தபோது (இது நம்முடையதல்ல,) நிச்சயமாக நாம் வழி தவறிவிட்டவர்கள்” என்று கூறினார்கள்.
27
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
முஹம்மது ஜான்
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).
IFT
இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர், அதனைத் தங்களுடையதுதான் என அறிந்து,) இல்லை! நாம் தடுக்கப்பட்டு (பாக்கியமற்றவர்களாகி) விட்டவர்கள் (என்று கூறினார்கள்.)
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிலுள்ள மிகுந்த நடுநிலையாளர் ஒருவர் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வைத்) துதி செய்திருக்க வேண்டாமா, என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்).
IFT
எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நிச்சயமாக நாங்கள் இரட்சகனின் பக்கமே (அவனது அருளை) ஆசிக்கிறவர்களாக இருக்கிறோம் (என்றும் கூறினார்கள்)
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வாறே வேதனை (அல்லாஹ் நாடியவர்களை வந்தடையும்) மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பார்களானால் திட்டமாக மறுமையின் வேதனை மிகப் பெரியதாகும்.
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா?
IFT
அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது நீங்கள் தீர்ப்புச் செய்பவை நிச்சயமாக உங்களுக்கு உண்டு என நம் மீது மறுமை நாள்வரை உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சத்திய(ப்பிரமாண)ங்கள் உண்டா? (அவ்வாறு எதுவும் நம்முடன் உங்களுக்கில்லை)
40
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
முஹம்மது ஜான்
(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி?
IFT
உங்களில் எவர் இதற்குப் பொறுப்பாளி என்று இவர்களிடம் நீர் கேளும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “(அவ்வாறெல்லாம் கூறுகின்ற) அவர்களில் அதற்குப் பொறுப்பேற்பவர் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராக
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்.
IFT
அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (இவ்வாறு அவர்கள் கூறிக் கொண்டிருப்பவற்றில்) அவர்களுக்கு இணையாளர்கள் இருக்கிறார்களா? (அக்கூற்றில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் (அவர்களுக்குப் பொறுப்பாளர்களாக) அவர்களின் இணையாளர்களைக் கொண்டு வரட்டும்.
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
IFT
எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கெண்டைக்காலைவிட்டு (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில், அவர்களோ (அந்நாளின்போது) சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர், ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள்.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.)
IFT
இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும், (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்.
IFT
ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, என்னையும் இச்செய்தியைப் பொய்யாக்குபவரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை நாம் பிடிப்போம்.
45
وَاُمْلِیْ لَهُمْ ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
முஹம்மது ஜான்
அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)
IFT
நான் இவர்களுடைய கடிவாளத்தைத் தளர்த்தி விட்டிருக்கின்றேன். எனது சூழ்ச்சி மிக உறுதியானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்குச் சிறிது தாமதம் கொடுப்பேன், நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி மிக்க பலமானது.
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா?
IFT
என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நபியே!) அவர்களிடம் ஏதாவது கூலியை நீர் கேட்கின்றீரா? அதனால், அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
47
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
முஹம்மது ஜான்
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா?
IFT
அல்லது மறைவானவற்றைப் பற்றிய ஞானம் இவர்களுக்கு இருந்து அதனை இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது மறைவானது அவர்களிடம் இருந்து (அதிலிருந்து தங்களுக்கு வேண்டிய ஆதாரங்களை) அவர்கள் எழுதுகின்றார்களா?
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!
IFT
சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிட வேண்டாம், அவர் துக்கம் நிரம்பப்பெற்றவராக (பிரார்த்தனை செய்து) அழைத்தபொழுது,
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
IFT
இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிராகரிப்போர் (குர் ஆனுடைய) உபதேசத்தைக் கேட்கும்பொழுது அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர், (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்(தாம்) என்றும் கூறுகின்றனர்.
52
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
முஹம்மது ஜான்
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
IFT
ஆனால் உண்மை நிலை யாதெனில், இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நாம் உம்மீது இறக்கிவைத்திருக்கும் திக்ரு எனும்) இது, அகிலத்தார்க்கு உபதேசமே தவிர (வேறு) இல்லை.