عبس
ஸூரா 80 — அபஸ | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
42 வசனங்கள் · ஜுஸ் 30
1
عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
முஹம்மது ஜான்
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
IFT
முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.
2
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
முஹம்மது ஜான்
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
அப்துல் ஹமீது பாகவி
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
IFT
அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக-
3
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
முஹம்மது ஜான்
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
IFT
அவர் சீர்திருந்தக்கூடும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?
4
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
முஹம்மது ஜான்
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
IFT
அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகலாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும்.
5
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
முஹம்மது ஜான்
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
IFT
எவன் அலட்சியம் செய்கின்றானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ-
6
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
முஹம்மது ஜான்
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
IFT
அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.
7
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
முஹம்மது ஜான்
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
IFT
அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.
8
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
அப்துல் ஹமீது பாகவி
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
IFT
மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்,
9
وَهُوَ یَخْشٰى ۟ۙ
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
அப்துல் ஹமீது பாகவி
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
IFT
(இறைவனை) அஞ்சியவராக
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரோ (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் (உம்மிடம் வர)
10
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
முஹம்மது ஜான்
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
IFT
அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவரை விட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.
11
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
IFT
அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உபதேசமாகும்.
12
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
முஹம்மது ஜான்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
IFT
எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.
13
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
IFT
இது கண்ணியமிக்க,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதமானது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் (இருக்கிறது).
14
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ
முஹம்மது ஜான்
உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
IFT
உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர்வாக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட (ஏடுகளில் இருக்கிறது).
15
بِاَیْدِیْ سَفَرَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
அப்துல் ஹமீது பாகவி
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
IFT
(அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வானவர்களான) எழுதுவோரின் கரங்கள் கொண்டு (எழுதப்படுகின்றது)
16
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
முஹம்மது ஜான்
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
IFT
(அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள்) நல்லோர்களான சங்கை மிக்கவர்கள்.
17
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
அப்துல் ஹமீது பாகவி
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
IFT
மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காஃபிரான) மனிதன் சபிக்கப்பட்டுவிட்டான்; (நன்றி கெட்டு) அவனை நிராகரிக்கிறவனாக இருக்கச் செய்தது எது?
18
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
அப்துல் ஹமீது பாகவி
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
IFT
அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எப்பொருளிலிருந்து (நிராகரிக்கும்) அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான் (என்று சிந்தித்தானா?)
19
مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
முஹம்மது ஜான்
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
IFT
ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு துளி (இந்திரியத்திலிருந்து, அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான்; பின்னர் அவனுக்கு (உரிய அனைத்தையும்) அவன் நிர்ணயித்தான்.
20
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
முஹம்மது ஜான்
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
IFT
பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்பால் அவனுக்கு (விசுவாசம், விசுவாசமின்மை, நல்லவை, கெட்டவை, தாய் வயிற்றிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றின்) வழியை அவன் எளிதாக்கினான்.
21
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
முஹம்மது ஜான்
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
IFT
பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, அவனை அவன் மரணிக்கச் செய்தான்; அப்பால் மண்ணறையில் அவனை அவன் ஆக்குகின்றான்.
22
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
IFT
பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் தான் நாடும்போது அவனுக்கு (உயிர் கொடுத்து) அவன் எழுப்புவான்.
23
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
IFT
ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கடமையை நிறைவேற்றி விட்டதாக காஃபிரானவன் கூறுவது போன்று) அல்ல! (அல்லாஹ்வாகிய) அவன் இவனுக்கு ஏவியதை இவன் நிறைவேற்றவில்லை.
24
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
முஹம்மது ஜான்
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
IFT
பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மனிதன் தன்னுடைய உணவின்பால் பார்க்கவும்,
25
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
IFT
நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதை உண்டாக்குவதற்கு) நிச்சயமாக நாமே (வானத்திலிருந்து ஏராளமான) நீரைத் தாராளமாகப் பொழியச் செய்தோம்.
26
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
முஹம்மது ஜான்
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
IFT
பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் பூமியை நன்கு பிளக்கச்செய்தோம்.
27
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
முஹம்மது ஜான்
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
IFT
பிறகு, அதில் தானியங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அதிலிருந்து தானியங்களை முளைப்பிக்கச் செய்கின்றோம்.
28
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
முஹம்மது ஜான்
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
IFT
திராட்சைகளையும், காய்கறிகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) திராட்சை)க் கனிகளையும் (மற்ற) காய்கறிகளையும்,
29
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
முஹம்மது ஜான்
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
அப்துல் ஹமீது பாகவி
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
IFT
ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஜைத்தூனையும், பேரீச்சையையும்-
30
وَّحَدَآىِٕقَ غُلْبًا ۟ۙ
முஹம்மது ஜான்
அடர்ந்த தோட்டங்களையும்,
அப்துல் ஹமீது பாகவி
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
IFT
அடர்ந்த தோட்டங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மரங்கள் அடர்ந்த தோப்புக்களையும்,
31
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
முஹம்மது ஜான்
பழங்களையும், தீவனங்களையும்-
அப்துல் ஹமீது பாகவி
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
IFT
விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கனியையும், புல்லை (-தீவனங்களையும்)-
32
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
முஹம்மது ஜான்
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
IFT
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (முளைக்கச் செய்தோம்)
33
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
முஹம்மது ஜான்
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
அப்துல் ஹமீது பாகவி
(உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
IFT
இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,
34
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
முஹம்மது ஜான்
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
IFT
அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்-
35
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
முஹம்மது ஜான்
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
அப்துல் ஹமீது பாகவி
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
IFT
தாயையும் தந்தையையும் விட்டும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் தாயையும், தன் தந்தையையும் (விட்டு)- விட்டும் வெருண்டோடுவான்
36
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
முஹம்மது ஜான்
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
அப்துல் ஹமீது பாகவி
தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
IFT
தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் மனைவியையும், தன் மக்களையும் (விட்டும் வெருண்டோடுவான்_)
37
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
முஹம்மது ஜான்
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
IFT
அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் (தன் சுற்றத்தாரை விட்டும்) அவரைத் திருப்பிவிடும் ஒரு காரியம் உண்டு.
38
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
IFT
சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்,) அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாக (இருக்கும்)
39
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
முஹம்மது ஜான்
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
IFT
சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிரித்தவையாக மகிழ்வுடையவையாக (இருக்கும்)-
40
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
IFT
மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், சில முகங்கள் அவற்றின் மீது அந்நாளில் புழுதி படிந்திருக்கும்.
41
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
முஹம்மது ஜான்
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
IFT
அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(துக்கத்தால்) கருமை இருள் அவற்றை மூடியிருக்கும்-
42
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
முஹம்மது ஜான்
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
IFT
அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் தாம் (இதயத்தால்) நிராகரித்தவர்கள்; (அவர்களின் செயல்களால்) பாவிகள்.