(நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.
2
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
முஹம்மது ஜான்
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
அப்துல் ஹமீது பாகவி
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
IFT
அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக-
3
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
முஹம்மது ஜான்
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
IFT
அவர் சீர்திருந்தக்கூடும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?
4
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
முஹம்மது ஜான்
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
IFT
அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகலாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும்.
5
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
முஹம்மது ஜான்
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
IFT
எவன் அலட்சியம் செய்கின்றானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ-
6
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
முஹம்மது ஜான்
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
IFT
அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.
7
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
முஹம்மது ஜான்
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
IFT
அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.
8
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
அப்துல் ஹமீது பாகவி
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
IFT
மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்,
9
وَهُوَ یَخْشٰى ۟ۙ
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
அப்துல் ஹமீது பாகவி
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
IFT
(இறைவனை) அஞ்சியவராக
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரோ (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் (உம்மிடம் வர)
10
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
முஹம்மது ஜான்
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
IFT
அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவரை விட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.
11
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
IFT
அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உபதேசமாகும்.
12
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
முஹம்மது ஜான்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
IFT
எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.
13
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);