முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் பஹத் (சவூதி)
1
وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
முஹம்மது ஜான்
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
IFT
ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பாவிகளின் உயிர்களை) பலமாகப் பறிப்பவா்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
2
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
முஹம்மது ஜான்
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!
IFT
மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நல்லோரின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
3
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
முஹம்மது ஜான்
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!
IFT
மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதிவேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்குகளின் மீது சத்தியமாக-
4
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
முஹம்மது ஜான்
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக!
IFT
மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கைப்பற்றிய நல்லோர்களின் உயிர்களை அல்லாஹ்வின் சன்னிதிக்கு எடுத்துச் செல்லப் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்வோர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
5
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
முஹம்மது ஜான்
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
IFT
பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சகல காரியங்களையும் (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
6
یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ
முஹம்மது ஜான்
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்:
அப்துல் ஹமீது பாகவி
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
IFT
எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முதல் முறை குழல் ஊதப்பட்டபின் பூமியை) கடுமையாக நடுக்கக் கூடியது நடுக்கும் நாளில்-
7
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ
முஹம்மது ஜான்
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).
IFT
அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை அடுத்து வரக்கூடியது (இரண்டாவது முறை குழல் ஊதுவது) தொடரும்.
8
قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.
IFT
அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் இதயங்கள் (திடுக்கிட்டு) கலக்கமுடையவையாக இருக்கும்.
9
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ
முஹம்மது ஜான்
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
IFT
அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவைகளின் (அவ்விதயங்களை உடையோரின்) பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கி (தாழ்ந்தவையாக)யிருக்கும்.
10
یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ
முஹம்மது ஜான்
“நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?''
IFT
இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நாம் (இறந்த பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோரா? என்று அவர்கள் கேட்கின்றனர்.
11
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ
முஹம்மது ஜான்
“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
அப்துல் ஹமீது பாகவி
(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.
IFT
இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாம் உக்கிய எலும்புகளாக ஆகிவிட்ட போதிலுமா? (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவோம்?” (என்று கேட்கின்றனர்)
12
قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ
முஹம்மது ஜான்
“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்.
IFT
இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அது அப்போது (பெரும்) நஷ்டமான திரும்புதலாகும்” என்றும் அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றார்கள்.
13
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
அப்துல் ஹமீது பாகவி
(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.
IFT
உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அது ஒரே ஒரு (பெரும்) சப்தம்தான்-
14
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ
முஹம்மது ஜான்
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.
IFT
உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) பூமியின் மேல் பரப்பில் இருப்பர்.
15
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
முஹம்மது ஜான்
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?
IFT
மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
16
اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ
முஹம்மது ஜான்
“துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
அப்துல் ஹமீது பாகவி
‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்.
IFT
‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்:
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
‘துவா’ என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இரட்சகன் அவரை அழைத்தபோது,
17
اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
“நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
IFT
“ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் ஃபிர் அவ்னின் பால் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
18
فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா?
IFT
எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீ பரிசுத்தமடைய (ஈமான் கொள்ள) உனக்கு (விருப்பம்) உண்டா? என்று நீர் கேட்பீராக!
19
وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ
முஹம்மது ஜான்
“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).
IFT
மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உன் இரட்சகன் பக்கம் (செல்லும்) வழியினை நான் உனக்கு காட்டுகிறேன்; (அதன்) பின்னர் அவனுக்கு நீ பயந்து கொள்வாய் (என்று கூறுவீராக!)
20
فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.
IFT
பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், மிகப்பெரும் அத்தாட்சியை அவனுக்கு அவர் காண்பித்தார்.
21
فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.
IFT
ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவன், (மூஸாவையும், அவர் கொண்டு வந்ததையும்) பொய்யாக்கினான்; மேலும் (அவரின் இரட்சகனுக்கு) மாறு செய்தான்.
22
ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.
IFT
பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவன் பின்வாங்கி (அவருக்கு எதிராகக் குழப்பம் செய்ய) முயற்சித்தான்.
23
فَحَشَرَ فَنَادٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.
IFT
மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவன் (தன் கூட்டத்தாரை) ஒன்று திரட்டினான், பின்னர் அழைத்தான்.
24
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.
IFT
“நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது, “நான் தான் உங்களுடைய மிக மேலான இரட்சகன்” என்று (அவர்களிடம்) கூறினான்.
25
فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ
முஹம்மது ஜான்
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.
IFT
இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், அவனை மறுமை மற்றும் இம்மையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்துக் கொண்டான்.
26
اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது.
IFT
அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதில் (அல்லாஹ்வைப்) பயந்து கொள்கிறவருக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.
27
ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰىهَا ۟ۙ
முஹம்மது ஜான்
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.
IFT
உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா)? அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்.
28
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ
முஹம்மது ஜான்
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.
IFT
அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் முகட்டை அவன் உயா்த்தினான்; பின்னர் அதைச் சமப்படுத்தினான்.
29
وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟
முஹம்மது ஜான்
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.
IFT
மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனே அதன் இரவை இருளாக்கி, (சூரியனைக்கொண்டு பிரகாசிக்கும்) அதன் பகலையும் வெளியாக்கினான்.
30
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ
முஹம்மது ஜான்
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
IFT
இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பூமியை-அதன்பின் அவன்-அதை (ஒழுங்குபடுத்தி) விரித்தான்.
31
اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟
முஹம்மது ஜான்
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.
IFT
அதனுள்ளிலிருந்து அதன் தண்ணீரையும் மேய்ச்சலுக்கானவற்றையும் வெளிக்கொணர்ந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் (மீதுள்ள பிராணிகளுக்கு) மேய்ச்சல் பொருளையும் அவன் வெளியாக்கினான்.
32
وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ
முஹம்மது ஜான்
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
அப்துல் ஹமீது பாகவி
மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.
IFT
மேலும் (அதில்) மலைகளை ஊன்றி வைத்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மலைகளையும்-அவற்றை அவன் (பூமிக்கு முளைகளாக) உறுதிப்படுத்தினான்-
33
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
முஹம்மது ஜான்
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).
IFT
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருள்களாய் ஆகும் பொருட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (அவற்றை இவ்வாறு செய்தான்)
34
فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ
முஹம்மது ஜான்
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையின்) பெரும் அமளி வந்தால்,
IFT
எனவே, மாபெரும் அமளி தோன்றும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இரண்டாவது முறையாக குழல் ஊதப்படுவதான) மாபெரும் அமளி வந்துவிட்டால்-
35
یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.
IFT
அன்று மனிதன் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் மனிதன் (உலகில்) தான் முயன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்வான்.
36
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟
முஹம்மது ஜான்
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.
IFT
மேலும், பார்ப்பவர் ஒவ்வொருவர் கண்ணெதிரிலும் நரகம் திறந்து வைக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், காண்போருக்கு நரகம் (கண் எதிரில்) வெளிப்படுத்தப்படும்.
37
فَاَمَّا مَنْ طَغٰی ۟ۙ
முஹம்மது ஜான்
எனவே, எவன் வரம்பை மீறினானோ-
அப்துல் ஹமீது பாகவி
எவன் வரம்பு மீறினானோ,
IFT
எவன் வரம்பு மீறியிருந்தானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, எவர் வரம்பு மீறி விட்டாரோ,
38
وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ
முஹம்மது ஜான்
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,
IFT
மேலும், உலக வாழ்வுக்கு முன்னுரிமை தந்தானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வுலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ-
39
فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
முஹம்மது ஜான்
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.
IFT
அவனுடைய இருப்பிடம் நரகமாகவே இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நரகம், அதுவே! (அவர்) ஒதுங்குமிடமாகும்.
40
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ
முஹம்மது ஜான்
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
அப்துல் ஹமீது பாகவி
எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ,
IFT
மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளைவிட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர் தன் இரட்சகனின் (சன்னிதியை அவன்) முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையைவிட்டு (தன்) ஆத்மாவைத் தடுத்துக் கொண்டாரோ அவர்-
41
فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்.
IFT
அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது நிச்சயமாக சுவனம்_ அதுவே! (அவர்) ஒதுங்குமிடமாகும்.
42
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ
முஹம்மது ஜான்
(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
IFT
“அந்த இறுதிநேரம் எப்பொழுது வரும்?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மறுமையைப் பற்றி – அது எப்பொழுது (வெளிப்பட்டு) நிலைபெறும் என உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
43
فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ
முஹம்மது ஜான்
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
அப்துல் ஹமீது பாகவி
(எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?
IFT
அந் நேரத்தைப் பற்றிக் கூறுவது உம்முடைய பணியல்ல!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதைப்பற்றிக் கூறுவதற்கு நீர் எதில் இருக்கிறீர்? (அது பற்றிய பதில் உமக்குத் தெரியாது, அல்லாஹ் மட்டுமே அறிவான்).
44
اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ
முஹம்மது ஜான்
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.
IFT
அதைப் பற்றிய ஞானமோ அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் முடி(வு பற்றிய அறி)வு உமதிரட்சகனிடமே இருக்கின்றது.
45
اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ
முஹம்மது ஜான்
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)
IFT
அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நீர் அதைப் பயப்படக்கூடியவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்தான்.
46
كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
அப்துல் ஹமீது பாகவி
அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.
IFT
இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை அவர்கள் (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).