البلد
ஸூரா 90 — அல்பலத் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
20 வசனங்கள் · ஜுஸ் 30
1
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
முஹம்மது ஜான்
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
IFT
இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இந்த (மக்கா) நகரத்தின்மீது நான் சத்தியம் செய்கிறேன்.
2
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
முஹம்மது ஜான்
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
அப்துல் ஹமீது பாகவி
அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
IFT
மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இந்நகரத்தில் (போர்செய்வது சற்று நேரம் உமக்கு ஆகுமாக்கப்பட்டதாக இருக்க) நீர் தங்கியிருக்கும் நிலையில்,
3
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
முஹம்மது ஜான்
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
IFT
மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தந்தையின்மீதும் பிறந்தோ(ராகிய சந்ததியின)ரின் மீதும் சத்தியமாக,
4
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
முஹம்மது ஜான்
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
IFT
திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்திருக்கின்றோம்.
5
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
முஹம்மது ஜான்
“ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
IFT
‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக ஒருவரும் (தன்னை தண்டிக்க) தன்மீது சக்தி பெறவே மாட்டார்” என அவன் எண்ணிக் கொள்கிறானா?
6
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
முஹம்மது ஜான்
“ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
IFT
“ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஏராளமான பொருளை நான் (முஹம்மதின் விரோதத்திற்காக) அழித்திருக்கிறேன்” என்று (ஹாரிஸாகிய) அவன் (ஆணவமாகக்) கூறுகின்றான்.
7
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
முஹம்மது ஜான்
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அப்துல் ஹமீது பாகவி
அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
IFT
யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக ஒருவருமே தன்னை பார்க்கவில்லையென்று அவன் எண்ணிக் கொள்கின்றானா?
8
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
IFT
அவனுக்கு நாம் இரு கண்களையும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரு கண்களை அவனுக்கு நாம் அமைக்கவில்லையா?
9
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
அப்துல் ஹமீது பாகவி
(பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
IFT
ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு நாவையும் இரு உதடுகளையும் (நாம் அவனுக்கு அமைக்கவில்லையா?)
10
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
முஹம்மது ஜான்
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
IFT
மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்துவிட்டோம்.
11
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
முஹம்மது ஜான்
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
IFT
ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், (இதுவரையில்) அவன் “அகபா”வைக் கடக்கவில்லை.
12
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
முஹம்மது ஜான்
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
IFT
கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “அகபா” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
13
فَكُّ رَقَبَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
அப்துல் ஹமீது பாகவி
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
IFT
(அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது தான்) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்.
14
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
IFT
அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது பசியுடைய நாளில் உணவளித்தலாகும்.
15
یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ
முஹம்மது ஜான்
உறவினனான ஓர் அநாதைக்கோ,
அப்துல் ஹமீது பாகவி
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
IFT
உறவினரான அநாதைக்கோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யாருக்கெனில்) நெருங்கிய உறவுடைய ஒரு அநாதைக்கு.
16
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
முஹம்மது ஜான்
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
IFT
அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (வறுமையால்) மண்ணில் உழலும் ஏழைக்கு (உணவளிப்பதாகும்.)
17
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
முஹம்மது ஜான்
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
IFT
பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் விசுவாசங்கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (அல்லாஹ்வின் அடியார்களுக்கு) அன்பு செலுத்துமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருந்தோரில் உள்ளவராக அவர் இருப்பதாகும்.
18
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
முஹம்மது ஜான்
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
IFT
இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையோர் தாம் வலப்புறத்தை உடையோர்.
19
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
IFT
மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோர் - அவர்கள் இடப்புறத்தையுடையோர்,
20
عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠
முஹம்மது ஜான்
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.
IFT
அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள்மீது (எல்லாப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கும்.