المدثر
ஸூரா 74 — அல்முத்தஸ்ஸிர்
56 வசனங்கள் · ஜுஎ் 29
1
یٰۤاَیُّهَا الْمُدَّثِّرُ ۟ۙ
முஹம்மது ஜான்
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
IFT
போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே!
2
قُمْ فَاَنْذِرْ ۟
முஹம்மது ஜான்
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
நீர் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக;
IFT
எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
3
وَرَبَّكَ فَكَبِّرْ ۟
முஹம்மது ஜான்
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;
IFT
மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமதிரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக!.
4
وَثِیَابَكَ فَطَهِّرْ ۟
முஹம்மது ஜான்
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக;
IFT
மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக!
5
وَالرُّجْزَ فَاهْجُرْ ۟
முஹம்மது ஜான்
அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக.
IFT
அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அசுத்தத்தை வெறுத்துவிடுவீராக!
6
وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ ۟
முஹம்மது ஜான்
(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர்.
IFT
ஆதாயம் கருதி பிறருக்கு உதவி செய்யாதீர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நீர் கொடுத்ததைவிட) அதிகமானதைப் பெறக்கருதி (மற்றவருக்கு) உபகாரம் செய்யாதீர்!
7
وَلِرَبِّكَ فَاصْبِرْ ۟ؕ
முஹம்மது ஜான்
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.
IFT
உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உமதிரட்சகனுக்காக(க் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு) நீர் பொறுமையுடன் இருப்பீராக!
8
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوْرِ ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
எக்காளத்தில் (மகா ஊதுகுழாயில்) ஊதப்படும் சமயத்தில்,
IFT
எக்காளம் ஊதப்பட்டுவிட்டாலோ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குழல் (ஸூர்) ஊதப்பட்டுவிட்டால்-
9
فَذٰلِكَ یَوْمَىِٕذٍ یَّوْمٌ عَسِیْرٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
IFT
அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் அ(வ்வாறு ஊதப்படுவதான)து கடினமான நாளாக இருக்கும்.
10
عَلَی الْكٰفِرِیْنَ غَیْرُ یَسِیْرٍ ۟
முஹம்மது ஜான்
காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல.
IFT
நிராகரிப்பாளர்களுக்கு இலேசானதாய் இராது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாள்) நிராகரிப்போருக்கு எளிதானதன்று.
11
ذَرْنِیْ وَمَنْ خَلَقْتُ وَحِیْدًا ۟ۙ
முஹம்மது ஜான்
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்.
IFT
நான் தன்னந்தனியாகப் படைத்திருக்கின்ற அந்த மனிதனை என்னிடம் விட்டுவிடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்னையும், தனித்த நிலையில் நான் படைத்தவனையும் விட்டுவிடுவீராக!
12
وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.
IFT
அவனுக்கு நான் அதிகமான செல்வத்தை வழங்கினேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நான் அவனுக்கு ஏராளமான செல்வத்தையும் ஆக்கியிருந்தேன்.
13
وَّبَنِیْنَ شُهُوْدًا ۟ۙ
முஹம்மது ஜான்
அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
அப்துல் ஹமீது பாகவி
எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
IFT
அவனுடனேயே இருக்கக்கூடிய புதல்வர்களையும் அளித்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுடன் இருக்கக்கூடிய ஆண்மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
14
وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِیْدًا ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
அப்துல் ஹமீது பாகவி
அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.
IFT
மேலும், அவனுக்குத் தலைமை தாங்கும் வழிவகையையும் வகுத்துக் கொடுத்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்கு (வாழ்வதற்கு வேண்டிய) தயாரிப்புகளை (ஏற்கெனவே) அவனுக்காக நான் தயார் செய்து வைத்தேன்.
15
ثُمَّ یَطْمَعُ اَنْ اَزِیْدَ ۟ۗۙ
முஹம்மது ஜான்
பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்.
IFT
இதன் பிறகு நான் அவனுக்கு இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னும், நான் (அவனுக்கு) அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.
16
كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰیٰتِنَا عَنِیْدًا ۟ؕ
முஹம்மது ஜான்
அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு எதிரியாக இருக்கிறான்.
IFT
ஒருபோதுமில்லை! அவன் நம்முடைய வசனங்களுடன் பகைமை கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒருபோதும் அது நடந்தேறக்கூடியது) அல்ல! நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு முரண்பட்டவனாக இருக்கின்றான்.
17
سَاُرْهِقُهٗ صَعُوْدًا ۟ؕ
முஹம்மது ஜான்
விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்.
IFT
நான் அவனை அதிவிரைவில் வேதனையின்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதிசீக்கிரத்தில்) அவனை (வேதனையின்) ஒரு கடினமான சிகரத்தில் நான் ஏற்றிவிடுவேன்.
18
اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன் (இந்த குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.
IFT
சிகரத்திற்கு ஏறச் செய்வேன். அவன் சிந்தித்தான்; சில விஷயங்களைப் புனைந்துகூற முயன்றான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன் (இந்தக்குர் ஆனுக்கு எதிராக) சிந்தித்தான், இன்னும், (குர் ஆனைப்பற்றித் தன் மனதில் கற்பனையாக ஒரு கூற்றை) ஏற்படுத்திக் கொண்டான்.
19
فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
முஹம்மது ஜான்
அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
அப்துல் ஹமீது பாகவி
அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்!
IFT
இறைவன் அவனை அழிக்கட்டும். அவன் எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்து கூற முற்பட்டுவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவன் சபிக்கப்பட்டான்; எவ்வாறு அவன் (ஒரு கூற்றை) தன் மனதில்) ஏற்படுத்திக் கொண்டான்.
20
ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
அப்துல் ஹமீது பாகவி
பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.)
IFT
ஆம்! இறைவன் அவனை அழிக்கட்டும். எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்துரைக்க அவன் முற்பட்டு விட்டான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னரும் அவன் சபிக்கப்பட்டான்! எவ்வாறு அவன் (ஒரு கூற்றை தன் மனதில்) ஏற்படுத்திக் கொண்டான்?
21
ثُمَّ نَظَرَ ۟ۙ
முஹம்மது ஜான்
பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னும், (அதைப் பற்றிக்) கவனித்தான்.
IFT
பிறகு (மக்களைப்) பார்த்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவன் (நம் வசனங்களை சிந்தித்து) நோக்கினான்.
22
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.
IFT
பிறகு புருவத்தை நெரித்தான். பின்னர், முகத்தைச் சுளித்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், கடுகடுத்தான்; முகமும் சுளித்தான்.
23
ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ
முஹம்மது ஜான்
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.
IFT
பிறகு, திரும்பிச் சென்றான்; மேலும், தற்பெருமை கொண்டான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் திரும்பிச் சென்றான்; இன்னும், அகந்தை கொண்டான்.
24
فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ
முஹம்மது ஜான்
அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘இது மயக்கக்கூடிய சூனியமே தவிர வேறில்லை'' என்றும்
IFT
இறுதியில் கூறினான்: “இது ஒன்றுமில்லை; ஒரு சூனியம்தான்: முன்பிருந்தே சொல்லப்பட்டு வருவதுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்பால் முன்னுள்ளோரிடமிருந்து கற்பிக்கப்பட்டு) “வழிவழியாக வந்த சூனியமேயன்றி இது (வேறு) இல்லை” எனக்கூறினான்.
25
اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ
முஹம்மது ஜான்
“இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘இது மனிதர்களுடைய சொல்லே தவிர வேறில்லை'' என்றும் கூறினான்.
IFT
இது ஒரு மனித வாக்கேதான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது மனிதரின் கூற்றே தவிர வேறில்லை” (என்றும் கூறினான்.)
26
سَاُصْلِیْهِ سَقَرَ ۟
முஹம்மது ஜான்
அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நாம் அவனை ‘சகர்' நரகத்தில் எறிவோம்.
IFT
அதிவிரைவில் நான் அவனை நரகத்தில் வீசி எறிவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நான் அவனை “ஸகர்” எனும் நரகத்தில் புகச் செய்வேன்.
27
وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ
முஹம்மது ஜான்
“ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா?
IFT
மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் “ஸகர்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
28
لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ
முஹம்மது ஜான்
அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது.
அப்துல் ஹமீது பாகவி
அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
IFT
அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (நரகவாசிகளில் எவரையும்) மிச்சம் வைக்காது; (எவரையும்) விட்டும் விடாது.
29
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚۖ
முஹம்மது ஜான்
(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
அப்துல் ஹமீது பாகவி
அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.
IFT
அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களை (சுட்டுக்கரித்து அவர்களின் மேனியை) மாற்றிவிடக் கூடியது.
30
عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ
முஹம்மது ஜான்
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
IFT
பத்தொன்பது பேர் காவலர்களாய் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காவலர்களாக மலக்குகளில்) அதன்மீது பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
31
وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓىِٕكَةً ۪ وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا ۙ لِیَسْتَیْقِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَیَزْدَادَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِیْمَانًا وَّلَا یَرْتَابَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ ۙ وَلِیَقُوْلَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا یَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ وَمَا هِیَ اِلَّا ذِكْرٰی لِلْبَشَرِ ۟۠
முஹம்மது ஜான்
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை.
IFT
நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நரகத்தின் காவலர்களை மலக்குகளாகவே தவிர நாம் ஆக்கவில்லை; இன்னும், அவர்களுடைய எண்ணிக்கையை நிராகரிப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை; வேதம் கொடுக்கப்பட்டோர் (இதனை) உறுதி கொள்வதற்காகவும், விசுவாசங்கொண்டோர் (தம்) விசுவாசத்தை அதிகமாக்கிக் கொள்வதற்காகவும், இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோரும், விசுவாசிகளும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்காமலிருப்பதற்காகவும், (நாம் அவ்வாறு ஆக்கினோம்). இன்னும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றனதோ அவர்களும், நிராகரித்துக் கொண்டிருப்போரும் “இதனைக் கொண்டு, உதாரணமாக அல்லாஹ் எதை (அறிவிக்க) நாடினான்?” என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம் நபியே!) இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடச் செய்கிறான்; தான் நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகின்றான்; இன்னும், உமதிரட்சகனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்; அது மனிதர்களுக்கு உபதேசமேயன்றி வேறில்லை.
32
كَلَّا وَالْقَمَرِ ۟ۙ
முஹம்மது ஜான்
(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!
IFT
ஒருபோதுமில்லை! சந்திரன் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நரகக்காவலர்கள் விஷயமாக நிராகரிப்போர் கூறுவது போன்று) அல்ல! சந்திரனின் மீதும் சத்தியமாக!
33
وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ
முஹம்மது ஜான்
இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
அப்துல் ஹமீது பாகவி
செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!
IFT
இரவின் மீதும் சத்தியமாக, அது திரும்பிச் செல்லும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின் மீதும் சத்தியமாக-அது பின் செல்லும்போது!
34
وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ
முஹம்மது ஜான்
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
அப்துல் ஹமீது பாகவி
வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக!
IFT
விடியற்காலையின் மீது சத்தியமாக, அது பிரகாசமடையும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதிகாலையின் மீதும் சத்தியமாக-அது வெளிச்சமாகும்போது!
35
اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.
IFT
இந்த நரகம் மிகப்பெரியவற்றுள் ஒன்றாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (நரகமாகிய) அது மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
36
نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ
முஹம்மது ஜான்
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
அப்துல் ஹமீது பாகவி
அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.
IFT
அது மனிதர்களை அச்சுறுத்தக்கூடியதாகும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்ற நிலையில் (மிகப் பெரியதாகும்.)
37
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّتَقَدَّمَ اَوْ یَتَاَخَّرَ ۟ؕ
முஹம்மது ஜான்
உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக் கொள்ளவோ விரும்புகிறானோ அவன் அவ்வாறு செய்யவும்.
IFT
உங்களில் முன்னேறிச் செல்வதற்கோ பின்தங்கி விடுவதற்கோ விரும்பும் ஒவ்வொரு மனிதரையும் அச்சுறுத்தக் கூடியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் எவர் (நன்மைக்காக) முந்திச் செல்வதற்கோ – அல்லது (நன்மையை விட்டும்) பின்தங்கிவிடுவதற்கோ விரும்புகின்றாரோ அவருக்கு (அது அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்கிறது.
38
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கிறான்.
IFT
ஒவ்வொரு மனிதனும் தன் சம்பாத்தியத்திற்குப் பகரமாக பிணையாக இருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப் பட்டதாகும்.
39
اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ
முஹம்மது ஜான்
வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (எவர்களுடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
IFT
வலப்பக்கத்தாரைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆயினும் (வலக்கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்பட்ட) வலது சாரியினர் தவிர-
40
فِیْ جَنّٰتٍ ۛ۫ یَتَسَآءَلُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
IFT
அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள்) சுவனங்களில் (இருப்பர்) அப்போது தங்களுக்குள் (விசாரித்துக்) கேட்பார்கள்.
41
عَنِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
குற்றவாளிகளைக் குறித்து-
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
IFT
அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள்:
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குற்றவாளிகளைப்பற்றி-
42
مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ ۟
முஹம்மது ஜான்
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
IFT
“உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?”
43
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை.
IFT
அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
44
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
“அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
IFT
நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை”
45
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَآىِٕضِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
“(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.
IFT
மேலும், சத்தியத்திற்கெதிராகப் பேசுகிறவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(வீணானவற்றில்) மூழ்கி இருந்தோருள் நாங்களும் மூழ்கி இருந்தோம்”
46
وَكُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
“இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.
IFT
மேலும், கூலி கொடுக்கும் நாளினைப் பொய்யென்று கூறி வந்தோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் “கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்குபவர்களாக இருந்தோம்.”
47
حَتّٰۤی اَتٰىنَا الْیَقِیْنُ ۟ؕ
முஹம்மது ஜான்
“உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).
அப்துல் ஹமீது பாகவி
(நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.)
IFT
அந்த உறுதியான விஷயம் எங்களை வந்தடையும் வரை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்களுக்கு (மரணம் எனும்) உறுதி வரும்வரை (இவ்வாறு இருந்தோம்” என்றும் கூறுவார்கள்).
48
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காது.
IFT
அந்நேரத்தில் பரிந்துரை செய்வோரின் பரிந்துரை எதுவும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்வோரின் பரிந்துரை அவர்களுக்குப் பயனளிக்காது.
49
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர்.
IFT
இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் இந்த அறிவுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, நல்லுபதேசத்தை விட்டும் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
50
كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
அப்துல் ஹமீது பாகவி
வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப்போல் அவர்கள் இருக்கின்றனர்!
IFT
மிரண்டு விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் வெருண்டோடுகின்ற (காட்டுக்) கழுதைகளைப்போல் (இருக்கின்றனர்!)
51
فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ۟ؕ
முஹம்மது ஜான்
(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்).
IFT
அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்);
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காட்டுக் கழுதைகளான) அவை சிங்கத்தைவிட்டும் வெருண்டோடின.
52
بَلْ یُرِیْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّؤْتٰی صُحُفًا مُّنَشَّرَةً ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான்.
IFT
அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பெயருக்குத் திறந்த மடல் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும், விரிக்கப்பட்ட ஆகமங்கள் (தனக்கும்) கொடுக்கப்பட வேண்டும் என நாடுகிறான்.
53
كَلَّا ؕ بَلْ لَّا یَخَافُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
முஹம்மது ஜான்
அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு ஒருகாலும் நடக்கப்போவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை.
IFT
ஒருபோதுமில்லை! உண்மை யாதெனில், இவர்கள் மறுமையைக் குறித்துப் பயப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது நடக்கப்போவது) இல்லை! மாறாக, மறுமையைப்பற்றி அவர்கள் பயப்படுவதில்லை.
54
كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ ۟ۚ
முஹம்மது ஜான்
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறு ஒருகாலும் நடக்கப் போவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்.
IFT
ஒருபோதுமில்லை! இது ஓர் அறிவுரையே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
55
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
அப்துல் ஹமீது பாகவி
(நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
IFT
இனி எவர் விரும்புகின்றாரோ அவர் இதிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உபதேசம் பெற) யார் நாடுகிறாரோ அவர் இதனை நினைவில் வைத்து (உபதேசம் பெற்று)க் கொள்ளவும்.
56
وَمَا یَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ هُوَ اَهْلُ التَّقْوٰی وَاَهْلُ الْمَغْفِرَةِ ۟۠
முஹம்மது ஜான்
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.
IFT
இவர்கள் எந்தப் படிப்பினையும் பெறமாட்டார்கள்; அல்லாஹ் அதை நாடினாலே தவிர! அஞ்சப்படுவதற்குத் தகுதியுடையவன் அவன் ஒருவனே! தனக்கு அஞ்சுபவர்களை மன்னிப்பதற்கு அவனே தகுதியுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள், அவனே, பயப்படுவதற்குரியவனும் (விசுவாசிகளை) மன்னிப்பதற்குரியவனும் ஆவான்.