அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.
IFT
அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன்-அவன் முற்படுத்தி வைத்ததையும் அவன் பிற்படுத்தி வைத்ததையும் (பற்றி) அந்நாளில் அறிவிக்கப்படுவான்.
14
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.
IFT
ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏன், மனிதன் தன் மீது பார்வையுடையவனாக (தன் செயல்களுக்குச் சாட்சியாக) இருப்பான்.
15
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).
IFT
அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, தன் குற்றங்களை மறைக்க) அவன் தன் புகல்களைப்போட்ட போதிலும் சரியே (அவை அங்கீகரிக்கப்பட மாட்டா).
16
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
முஹம்மது ஜான்
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.
IFT
(நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வஹீ மூலம் அறிவிக்கப்படுபவை தவறிவிடுமோ என பயந்து அதற்காக நீர் அவசரப்பட்டு உம் நாவை அசைக்காதீர்.
17
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.
IFT
அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உம் உள்ளத்தில்) அதனை ஒன்று சேர்ப்பதும், (உமது நாவால்) அதனை ஓதச்செய்வதும் நிச்சயமாக நம் மீதா(ன கடமையா)கும்.
18
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
முஹம்மது ஜான்
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.
IFT
ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதுவோமாயின் (ஓதப்படும்) அதன் ஓதுதலை நீர் பின் தொட(ர்ந்து ஓது)வீராக!
19
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.
IFT
பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக அதனைத் தெளிவு செய்வதும், நம் மீதா(ன கடமையா)கும்.
20
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
முஹம்மது ஜான்
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.
IFT
ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏன் இல்லை! பின்னர் (மனிதர்களே!) நீங்கள் அவசரமானதை (இம்மையை) விரும்புகின்றீர்கள்.
21
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.
IFT
மறுமையை விட்டுவிடுகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் மறுமையை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள்.
22
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.
IFT
அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் (சந்தோஷத்தால்) மலர்ச்சியானவையாக இருக்கும்.
23
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
முஹம்மது ஜான்
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.
IFT
தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவை) தங்கள் இரட்சகனை நோக்கிக் கொண்டிருக்கும்.
24
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍۭ بَاسِرَةٌ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.
IFT
வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அந்நாளில் சிலருடைய) முகங்கள் (துக்கத்தால் கறுத்து) சோகமானவையாக இருக்கும்.
25
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
முஹம்மது ஜான்
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.
IFT
மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முதுகுகளை முறித்துவிடும் பேராபத்து தங்களுக்கு உண்டாக்கப்படும் என்று அவை உறுதிகொண்டிருக்கும்.
26
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,
IFT
ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமைநாள் வெகுதூரமென நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே!) அவ்வாறல்ல! (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்,
27
وَقِیْلَ مَنْ ٚ رَاقٍ ۟ۙ
முஹம்மது ஜான்
“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.
IFT
மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மந்திரிப்பவன் எவன்?” என்றும் கேட்கப்படுகிறது.
28
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.
IFT
மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) அவனோ நிச்சயமாக இதுதான் தன்னுடைய (பிரிவுக்குரிய காலம்) என்பதை (உறுதியாக) அறிந்து கொள்கிறான்.
29
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.
IFT
கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது,