التين
ஸூரா 95 — அத்தீன்
8 வசனங்கள் · ஜுஎ் 30
1
وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
IFT
அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தியின்மீதும் ஜைதூனின் (ஒலிவத்தின்) மீதும் சத்தியமாக –
2
وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
“ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!
IFT
சினாய் மலையின் மீதும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸினாய் மலையின்மீதும் சத்தியமாக –
3
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
IFT
மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மக்காவாகிய) அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக –
4
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ
முஹம்மது ஜான்
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
IFT
திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.
5
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
IFT
பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவனைத் தாழ்ந்தோரிலும் மிகத் தாழ்ந்தோனாக்கினோம்
6
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ
முஹம்மது ஜான்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
IFT
ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோரைத் தவிர, அவர்களுக்கு முடிவடையாத (நற்) கூலியுண்டு.
7
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ
முஹம்மது ஜான்
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
அப்துல் ஹமீது பாகவி
கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?
IFT
எனவே (நபியே!) இதன் பிறகும், நற்கூலி தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சான்றுகளுக்குப்) பின் (நபியே!) நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மை எது பொய்யக்க முடியும்?
8
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠
முஹம்மது ஜான்
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
IFT
அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா?